11/12/2023
இது வடநாட்டில் நடந்திருந்தால் பொங்கி எழும் திமுகவும், திமுக ஆதரவு கட்சிகளும், திமுக ஆதரவு ஊடகங்களும் இப்போது வாய் திறப்பார்களா
இறந்த குழந்தை...
அட்டைப் பெட்டியில் 💔
வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் அப்போது வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. இந்தக் கொடுமைகள் ஒருபுறம் இருக்க, பிறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு 2500 ரூபாய் வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தந்தை மசூத்திடம் கேட்டுள்ளது.
நான்கு நாட்களுக்குப் பிறகு, இன்று இறந்த பெண் குழந்தையின் உடலை உரிய முறையில் துணியால் மூடாமல்.,
மருத்துவ அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை பணியாளர்கள். அடக்கம் செய்யும் இடத்திற்கு வந்த பிறகு இதை அறிந்தவர்கள் அதிர்ந்துள்ளனர்.
அந்தக் குழந்தையின் பெற்றோர் மனம் எப்படி துடித்திருக்கும். 💔
Ma Subramanian
M. K. Stalin