03/06/2026
சி.பி.எஸ்.இ தேர்வு திருத்த முறைகேடு விசாரணையில் உண்மை வெளி வருமா?
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பிரச்சினை வெடித்து அதன் புகை அடங்குவதற்கு முன்பாக சி.பி.எஸ்.இ தேர்வு திருத்த முறைகேடு வெடித்துள்ளது. சி.பி.எஸ்.இ தலைவர், செயலாளர் இட மாற்றம், விசாரணை என ஏதோ கடும் நடவடிக்கைகளை எடுப்பது போல ஒன்றிய அரசு பாவனை செய்துள்ளது.
இது ஒன்றிய அரசின் ஆளுகைத் திறனின் தோல்வி. அப்பட்டமான முறைகேடுகளின் அடுத்தடுத்த வெளிப்பாடு. எத்தனையோ புகார்கள் டிஜிட்டல் திருத்த முறைமை பற்றி வந்த போதும் அவற்றை புறம் தள்ளி கடந்து செல்ல முனைந்த ஒன்றிய அரசை 19 வயது நிசர்கா அதிகாரி என்ற இளைஞர் "தார்மீக மென்பொருள் ஊடுருவலை" (Ethical Hacker) செய்து அம்பலப்படுத்திய பின்னரே ஒன்றிய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பது வெட்கக்கேடானது.
விசாரணையில் உண்மை வருமா? உண்மையை வெளிக் கொணரும் அரசியல் உறுதி ஒன்றிய அரசுக்கு உண்மையிலேயே இருக்கிறதா?
- தோழர் சு. வெங்கடேசன் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர்,