22/05/2026
திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு கட்சித் தொண்டர்களையும், தலைவர்களையும் சமூக ஊடகங்களில் தெருவில் சுற்றும் நாய் போல கடித்துக் குதறுகிறார்கள் இவர்களது இணையக் கூலிகள். ஒன்றாக இருக்கும் போது மட்டம் தட்டி, அதிகார போதையில், மமதையில் அலட்சியம் செய்தவர்கள் இன்று கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.
முதலில் காங்கிரஸ், அடுத்தது கம்யூனிஸ்ட்கள், அடுத்தது IUML, இப்போது விசிக... போற வர்றவனிடம் எல்லாம் “எங்களால் தான் ஜெயிச்சீங்க, எங்களால் தான் ஜெயிச்சீங்க” என ஒரே ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த நோய்க்கு மருந்தே கிடையாது.
இந்த இணையக் கூலிகளின் விஷம புத்தி எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இப்போது தான் மற்ற கூட்டணி கட்சிகளும் இதை உணர்கிறார்கள். இது ஒரு வகையில் அவர்களுக்கு நல்லதொரு அனுபவ பாடம்!
“எங்களால் தான் ஜெயிச்ச, அதனால ராஜினாமா செய்” என்று கதறும் இணையக் கூலிகளுக்கும், அவர்களை மேய்க்கும் தலைகளுக்கும் இதோ ஒரு இறுதியான சவால்:
நாங்கள் ராஜினாமா செய்யத் தயார்.
எங்கள் ஓட்டில் நீங்கள் ஜெயிச்ச அத்தனை எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யத் தயாரா? நீங்கள் தான் பெரிய சூரப் புலிகளாச்சே... வாங்க, எல்லோரும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிடுவோம்.
யாருக்கு உண்மையான மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று களத்தில் பார்த்துவிடுவோம்!