14/12/2025
எங்கே இருக்கிறது சமூக நீதி!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த அம்மன் கோவில் தெரு காலனியை சேர்ந்த கீதா என்கிற தலித் சமூகப் பெண்ணை திருட்டு வழக்கில் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்த சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் ✊✊✊
"'''''''''''""""""''''''""""""""""""""""""""""""""""""""""""""""""
கணவர் செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட நபரின் மனைவியையும் அவரது கை குழந்தையும் சிறையில் அடித்து சித்திரவதை செய்வது எந்த விதத்தில் நியாயம் ...
தனது கணவரின் குற்ற செயலுக்கு கீதா உடந்தையாக இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது, அப்படி எந்த ஆதாரத்தை கொண்டு அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்???
குற்றம் சம்பவம் நடந்த அன்று கீதா எங்கிருந்தார் எந்த வகையில் தனது கணவருக்கு உடனடியாக இருந்தார்!!
கம்மாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன!!
தொடர்ந்து தலித் மக்கள் மீது பொய் வழக்கை பதிவு செய்து வரும் அண்ணாமலை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்டுகொள்ளாதது ஏன்!!
சாதி இந்துக்கள் செய்கின்ற எத்தனை குற்ற செயல்களில் அவரது மனைவி மக்களை சிறை பிடித்து இருக்கிறது அண்ணாமலை நகர் காவல் நிலையம்!!
தொடர்ந்து தலித் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வது ஏன்
குற்ற செயலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது எங்களுடைய என்னம் அல்ல ...
ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை என்பதற்காக அவரது மனைவி மற்றும் கைக்குழந்தையை சிறைபிடித்து சித்திரவதை செய்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த அதிகாரத்தை யார் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் #அம்பேத்கர் அவர்களுக்கு தந்தது உங்கள் அதிகாரம் சேரி மக்களை மட்டும் தான் அச்சுறுத்துமா? ?
உங்களால் முடிந்தால் கடும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற சாதி இந்துக்களின் வீட்டிற்குள் புகுந்து அவர்களின் உடமைகளை சேதப்படுத்த முடியுமா??
உங்கள் காக்கி மிடுப்பும் கம்பீரமும் சேரிக் குடிசையில் தானா....
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது!!!
தளபதி யாழ்.செங்குட்டுவன் வி.சி.க
Thol.Thirumavalavan vck it wing வன்னி அரசு முல்லை மாறன் Mu Arivudainambi