சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி,சென்னை

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி,சென்னை politica,l சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி - தமிழ்நாடு( CALF)

ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢😢😢ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழுவின் தோழர் நிலவுமொழிசெந்தாமரை Nilavumozhi Senthamarai  ன் மகன்  தி...
05/08/2026

ஆழ்ந்த இரங்கல்கள்
😢😢😢😢😢
ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழுவின் தோழர் நிலவுமொழிசெந்தாமரை Nilavumozhi Senthamarai ன் மகன் தியோ நம்மை விட்டுப் பிரிந்தார்...
தோழர் நிலவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
💔 💔

வீட்டு முகவரி
செந்தாமரைக் கண்ணன்,
(Ex VAO),
23, பெருமாள் கோவில் தெரு,
நடுக்குப்பம் (தந்தாடு வழி)
மரக்காணம் வட்டம்
தொடர்புக்கு 8056101053

03/08/2026
31/07/2026

உயிரிழப்பு 4ஆக உயர்வு

சிவகாசி மாவட்டம் செங்கமலப்பட்டி

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர்

எண்ணிக்கை 4ஆக உயர்வு

தோட்டத்தில் வைத்து பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்தனர் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, அய்யப்பராஜ், பாண்டித்துரை இறந்த நிலையில் ராமச்சந்திரன் என்பவருக்கு சிகிச்சை

பதிவு: Shouryadipta Sengupta தோழர் மிசிர் பெஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் மையக் குழு மற்றும் அரசியல் பண...
30/07/2026

பதிவு: Shouryadipta Sengupta

தோழர் மிசிர் பெஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் மையக் குழு மற்றும் அரசியல் பணியக (பொலிட் பீரோ) உறுப்பினர், ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்டத்திற்கு புறம்பான கொலைக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்ற கடுமையான கவலைகள் உள்ளன.

தோழர் மிசிர் பெஸ்ராவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) மீதான தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதான ஒடுக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மேலும் கட்சி உறுப்பினர்களின் போலி சந்திப்புக் கொலைகள் என்று கூறப்படும் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

 #தமிழ்நாடு_அரசிற்கு_வன்மையான_கண்டனம்  #தோழர்_மகாலிங்கம்  72 வயதான ஒரு முதிய அரசியல் செயல்பாட்டாளர் ஏறத்தாழ 10 வருடத்திற...
29/07/2026

#தமிழ்நாடு_அரசிற்கு_வன்மையான_கண்டனம் #தோழர்_மகாலிங்கம்
72 வயதான ஒரு முதிய அரசியல் செயல்பாட்டாளர் ஏறத்தாழ 10 வருடத்திற்கு மேலாக விசாரணை சிறைவாசியாகவே சிறைவாசம் அனுபவித்து விட்டு நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின் பிணையில் விடுதலையாகி வந்துள்ளார்.

சிறையில் இருந்த காலத்தில் இருதய வால்வு அடைப்பு ஏற்பட்டு சிறை மருத்துவர்களின் திட்டமிட்ட அலட்சியத்தால் அதற்குரிய காலத்தில் சிகிச்சை எடுக்காததால் ஏறத்தாழ இரண்டு வருடத்திற்கு பின் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் திறந்த மார்பக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு சிறையில் இருந்த போது அதை செய்தும் உள்ளார். இந்த நிலையில் அவர் மேற்சிகிச்சை தொடர்பாகவும் உயர்நீதிமன்ற பிணை உத்தரவை நிறைவேற்றவும் வேண்டி மதுரையில் தங்கி உள்ளார். மதுரையில் சிறைப்பட்டோர் உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர் சுரேஷ் விஜய ராஜன் வீட்டில் அவர் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் தோழருடைய சிகிச்சையை தடை படுத்தவும் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற விடாமல் தடைப்படுத்தவும் அவரை மதுரையை விட்டு காலி செய்ய கியூ பிரிவு போலீசார் முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக அவர் தங்கி இருக்கும் ஊரில் உள்ள கிராம மக்களிடம் சென்று மகாலிங்கத்தை பற்றி அவதூறாக பேசி மிரட்டி உள்ளனர்.

ஊர் தலைவர், தோழர் சுரேஷிடம் அவரது வீட்டிற்கு வந்து "வெளி ஆட்கள் எல்லாம் இங்கு தங்க வைத்துள்ளீர்களாம் அப்படியெல்லாம் இங்கே தங்க வைக்க கூடாது" என்று பேசி உள்ளனர். "எங்கள் வீட்டில் யார் தங்குவது வேண்டாம் என்று தீர்மானிப்பது யார் இதை எப்படி நீங்கள் சொல்ல முடியும் என்று கூறிய போது அவர் " இல்ல ஜெயில்ல இருந்து வந்தவர்கள் எல்லாம் இங்கே தங்க வைக்கிறீர்களாம், இங்கு பெண்கள் பிள்ளைகள் எல்லாம் உள்ளனர். அதான் எங்களுக்கு நீங்கள் வருவது பயமா இருக்கு" என்று கூறினார். "நாங்கள் ஒன்றும் கிரிமினல் கிடையாது எனது உறவினர்கள் மற்றும் மக்களுக்காக போராடக்கூடிய தோழர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள் தான் இங்கு வருவார்கள் அவர்களை உங்களால் தடை படுத்த முடியாது" என்று கூறிய போது அவர்கள் போலீசார் வந்து நிர்பந்தித்ததையும் மிரட்டியதையும் கூறியுள்ளனர்.

ஒரு அரசியல் செயல்பாட்டாளர் நீதிமன்ற உத்தரவை நடைபடுத்த முயற்சிக்கும்பொழுது அதை குறுக்கு வழியில் சட்டவிரோதமாக தடைப்படுத்த முயற்சிப்பது நீதிமன்ற நடவடிக்கையை குறிக்கீடு செய்வதாக உள்ளது ஒரு இந்திய குடிமகன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கி இருக்கவும் உண்ணவும் உடுத்தவும் உள்ள உரிமை அடிப்படையானது அதை தடைப்படுத்த முயற்சிப்பது சட்டவிரோதமானதே வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளி ஆன நோயாளியுமான ஒரு மூத்த அரசியல் செயல்பாட்டாளரை இவ்வாறு துன்புறுத்த நினைப்பது மனிதாபிமானமற்றசெயலும் கொடுஞ்செயலும் ஆகும்
இதை அரசியல் சிறைவாசிகளின் நலனுக்காக நிற்கும் சிறைப்பட்டோர் உரிமை பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது

தமிழ்நாடு அரசே,செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமே, கிணறு தூர்வாரல், மற்றும் மலக்குழி மரணங்களுக்கு பொறுப்பேற்றுகொள், தடுத்து ந...
03/07/2026

தமிழ்நாடு அரசே,செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமே, கிணறு தூர்வாரல், மற்றும் மலக்குழி மரணங்களுக்கு பொறுப்பேற்றுகொள், தடுத்து நிறுத்து, நீதி வழங்கு,ஊமை ஜனங்களின் உயிரோடு விளையாடாதே, தொடரும் இதுபோன்ற மரணங்களுக்கு தண்டனை வழங்கு.

02/07/2026

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்கள் மற்றும் பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (01.07.2026) இரவு தலைமைச் செயலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பன்னியாண்டி சமூக மக்களுக்கு பழைய சாதிச் சான்றின் அடிப்படையில் இணையவழி சாதிச் சான்று வழங்குதல்,

தென்காசி நெட்டூர் தலித் மக்களுக்கு நிவாரணம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்தல்,

விருதுநகர் மாவட்டம் "பரச்சேரி" கிராமத்தின் பெயரை "வடக்கு அச்சம்தவிர்த்தான்" என மாற்றுதல்,

சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி அனுசியா மற்றும் ஓசூர் நந்தீஸின் சகோதரர் சங்கருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குதல்,

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி (தனி) ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதிக்கு பதவியேற்க நீதி வழங்குதல்,

காஞ்சிபுரம் புத்தகரம் முத்து கொளக்கியம்மன் தேரோட்டம் தலித் குடியிருப்புக்குச் செல்ல உறுதி செய்தல்,

சேலம் தாதம்பட்டி தோட்டி மானிய நில ஆக்கிரமிப்பை அகற்றி தலித் மக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இச்சந்திப்பில் அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் க.சுவாமிநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, துணைத் தலைவர் வி.குபேந்திரன், செயலாளர் கா.வேணி, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.செல்வன், தமிழ்நாடு பன்னியாண்டிகள் நலச் சங்க தலைவர் டி.ஜி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#ததீஒமு

02/07/2026

தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!

*செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி இருளர் பழங்குடியான, வினோத் மரணத்திற்கு நீதி வழங்கு,

* பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் கிணற்றை தூர்வார சொன்ன வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடு!

* மரணமடைந்த வினோத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கு அவர் மனைவிக்கு வீடு,அரசு வேலை வழங்கு!

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி
,ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்.
சென்னை 8056159801,8190874141.

Address

Chennai Port Trust

Website

Alerts

Be the first to know and let us send you an email when சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி,சென்னை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share