05/08/2026
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.08.2026) ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இணை ஆணையாளர்கள் திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ..ப, (சுகாதாரம்), திருமதி க. கற்பகம், இ.ஆ.ப., (கல்வி), திரு.செ.சரவணன் (பணிகள்), துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திருமதி சித்ரா விஜயன், இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எச். ஆர். கௌஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., (வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
| |