SPVelumaniTeam

SPVelumaniTeam வீழ்வேன் என நினைத்தாயோ? சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவோம்..

05/09/2026

Happy teachers day..! - CBM ARTS AND SCIENCE COLLEGE
கடந்த 2018 செப்டம்பர் 28 அன்று கோவைப்புதூரில் அமைந்துள்ள CBM கல்லூரியில் #நல்லறம்_அறக்கட்டளை மற்றும் #அம்மாIASஅகடமி-யின் தலைவரும், சி.பி.எம்.காலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற நிறுவனத் தலைவரும் ( ), இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான 'சமூக ஆர்வலர்' திரு.எஸ்.பி.அன்பரசன் B.com., அவர்களின் முன் முயற்சியில் மிக சிறப்புடன் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளின் காணொளி தொகுப்பு உங்களின் பார்வைக்காக....
முழு காணொளி லிங்க் கமெண்ட் பாக்ஸில் காண்க

எஸ்.பி.வேலுமணி என்பது பெயர் இல்ல..  அது ஒரு செயல் வடிவம்..  தொலைவிலிருந்து  காண்போருக்கு அவர் ஒரு உருவமாகமட்டுமே தெரிவார...
05/09/2026

எஸ்.பி.வேலுமணி என்பது பெயர் இல்ல.. அது ஒரு செயல் வடிவம்.. தொலைவிலிருந்து காண்போருக்கு அவர் ஒரு உருவமாகமட்டுமே தெரிவார்.. அருகில் செல்ல செல்லத்தான் அவரின் அருமைதெரியும்..

அவர் கோவைக்கு ஆற்றிய சேவைகளும், பணிகளும் முழுமையாகத் தெரியும்... அவரை நெருக்கமாக அறிந்தவர்கள்மட்டுமே அவர் மிகுந்த மனிதநேயமும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர் என்பது கண்கூடு.. ஒரு வார்டு செயலாளரின் குடும்பத்து குழந்தை கோவையின் புகழ்பெற்ற பொறியியல் சேர்ந்து பீஸ் கட்டமுடியாமல் சிரமப்படுவதை கேள்விப்பட்டு யாரும் கோரிக்கை வைக்காமலே அவரது அண்ணனிடம் தகவல் கூறி காதும் காதும் கவைத்தமாரி நான்கு ஆண்டு கட்டணமாக மொத்த தொகை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கட்டணமாக கட்டி படிப்பு முடிக்க உதவியது யாருக்கு தெரியாது.. இப்போ அந்தக்குழந்தை ஒரு பன்னாட்டு கம்பெனியில் மாதம் இரண்டு லட்சம் சம்பளத்தில் இருப்பது கட்சிக்காரனுக்கே தெரியாது..

தான் ஏற்று கொண்ட தலைவர் மக்கள் திலகத்தின் வழியே "வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பது நாம் செய்யும் உதவியை எவ்வித விளம்பரமும் இல்லாமல், மிகவும் ரகசியமாகச் செய்பவர் அவர்.." திருமண உதவி, கல்விச் செலவு உதவி, மருத்துவ உதவி என எண்ணற்ற மக்களின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியாக திகழ்ந்தவர். அரசியல் வேறுபாடுகளைப் பார்க்காமல், நமது கட்சியினர் அல்லது மாற்றுக் கட்சியினர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் பழகுபவர். உதவி தேவைப்படும் நேரங்களில் யார் வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர். பலருக்கு அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாட்டியவர். தனிப்பட்ட முறையிலும் ஏராளமானோரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வதே அவரது இயல்பு.
தொகுதி மக்களை தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதி அவர்களின் நன்மை தீமைகளில் பங்கெடுப்பவர். கட்சிக்குள்ளும் எந்த அணியைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஒரே பார்வையில் அணுகி, "அனைவரும் நமது கட்சிக்காரர்களே" என்ற எண்ணத்துடன் செயல்படுபவர். எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்பவர். கோபம், முகச்சுளிப்பு போன்றவற்றை வெளிக்காட்டாமல் அமைதியாகவும் பணிவாகவும் பழகுபவர்.
கட்சி சோதனைகளைச் சந்தித்த காலங்களிலும் தளராமல் நிற்கும் உறுதியான தூணாக விளங்குபவர். பொருளாதார ரீதியிலும் கட்சிக்கும் கழகத் தோழர்களுக்கும் முக்கியமான ஆதரவாக இருப்பவர். நல்ல காலங்களில் மட்டுமல்ல, சோதனைக் காலங்களிலும் துணை நிற்பவரே உண்மையான விசுவாசி என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.

இத்தகைய மனிதநேயமும் தியாக உணர்வும் கொண்ட ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. அவரைப் பற்றி அறியாதவர்கள் குறை கூறலாம்; ஆனால் அவரை அறிந்தவர்கள் மனதில் அவர் எப்போதும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகவே இருப்பார்.

இந்திய விடுதலைக்காக அந்நியப் பொருட்களுக்கெதிராகப் பொருளாதாரப் போர் புரிந்து சுதேசி கப்பல் ஓட்டிய பெருமகன்! செக்கிழுத்த த...
05/09/2026

இந்திய விடுதலைக்காக அந்நியப் பொருட்களுக்கெதிராகப் பொருளாதாரப் போர் புரிந்து சுதேசி கப்பல் ஓட்டிய பெருமகன்! செக்கிழுத்த தியாகத்தின் மறுஉருவம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளில், நாட்டு விடுதலைக்கான அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகிறோம்..

அனைவருக்கும் ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்.. முன்னாள் குடியரசுத்தலைவர்  சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுடன் அன்னையுடன் அம்மா அவர்க...
05/09/2026

அனைவருக்கும் ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்.. முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுடன் அன்னையுடன் அம்மா அவர்கள்..

அன்னைதெரேசாவின் நினைவு நாள் இன்று.."1994ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அன்னை தெரசா அம்மாவின் போயஸ் ...
05/09/2026

அன்னைதெரேசாவின் நினைவு நாள் இன்று..

"1994ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அன்னை தெரசா அம்மாவின் போயஸ் தொட்டது இல்லத்திற்கு வருகைபுரிந்து சர்வதேச மகளிர் தின விழாவிலும் கலந்துகொண்டு . அம்மா அவர்களுக்குஆசி வழங்கினார். இது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்."- #இதயதெய்வம் #அம்மா

05/09/2026

அன்னை தெரசா நினைவுதினம் இன்று.. போற்றுவோமாக.. கொடைக்கானல் அன்னை தெரேசா பல்கலைக்கம் கண்டா புரட்சித்தலைவரை நின௯வுகூரும் அன்னை தெரசா..

05/09/2026

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..! தனக்கு பத்தாம் வகுப்பில் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யும்
எஸ்.பி.வேலுமணி..

S.P. Velumani

இதயதெய்வம் புரட்சித்லைவி அம்மா அவர்கள்  முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் என்ன பேசினார்?1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத்...
04/09/2026

இதயதெய்வம் புரட்சித்லைவி அம்மா அவர்கள் முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் என்ன பேசினார்?

1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்தது.
அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல் வெற்றியைப் பெற்று எம்.எல்.ஏ.ஆனார் அம்மா. எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

புதிய சட்டப்பேரவையின் பேரவைத் தலைவராக 1989 பிப்ரவரி 8-ல் தமிழ்க்குடிமகன் தேர்வுசெய்யப்பட்டார். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் புதிய பேரவைத் தலைவரை வாழ்த்தி அன்றைய தினம் ஆற்றிய உரைதான் அம்மாவின் முதல் சட்டப்பேரவை உரை.

“பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நீங்கள் ஒரு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தவர். எனினும், பேரவைத் தலைவர் என்ற முறையில் எவ்வித கட்சி சார்பும் இல்லாமல் நல்ல முறையில், நடுநிலையோடு இந்த சபையை நடத்திச் செல்ல வேண்டும். பெருமை மிகுந்த இந்தப் பேரவையின் முந்தைய தலைவர்கள் பல நல்ல முன்னு தாரணங்களை விட்டுச் சென் றுள்ளனர். அவற்றைப் பின்பற்றிப் புதிய பேரவைத் தலைவர் செயல்படுவார் என்று நம்புகிறேன். இப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் தரம் மிகுந்ததாக இருக்க வேண்டும். அதற்காக பேரவைத் தலைவரான நீங்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் நான் சார்ந்துள்ள அதிமுக என்றும் துணை நிற்கும்’’ என்றார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரே தமிழக முதல்வரானது வரலாறு!

 #அம்மா ஒரு புரியாத புதிர். எந்த வேளையில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது.கட்சியில் யாருக்கு பதவி தருவார். யாருக...
04/09/2026

#அம்மா ஒரு புரியாத புதிர். எந்த வேளையில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது.

கட்சியில் யாருக்கு பதவி தருவார். யாருக்கு கல்தா கொடுப்பார் என்று யாரும் ஜோசியம் சொல்ல முடியாது.

திடீரென்று அடிமட்டத் தொண்டனை தூக்கி மேலே வைப்பார். மேலே இருந்தவரைத் தூக்கி கீழே எறிவார். இதற்கெல்லாம் அவர் ஏதாவது லாஜிக் வைத்திருக்கிறாரா? என்று கொஞ்சமும் புரியவில்லை.

இவரது அடுத்த மூவ் என்ன என்பது தெரியாமலேயே கலைஞரின் தலையில் இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் காணாமல் போனது.

ஆனால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் எப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறான்.

‘ #அம்மா_ஏதாவது_செய்வார்’

அந்த நம்பிக்கை திமுக உட்பட வேறு எந்தக் கட்சித் தொண்டனுக்கும் கட்சித் தலைமையால் தரமுடியாமல் இருப்பது அதிமுகவின் பெரிய பலம்.

04/09/2026

நேற்று சட்டமன்றத்தில் திமுகவினர் நடந்துகொண்ட நடவடிக்கைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்னே கணித்து பேசிய அம்மா அவர்கள்..
திமுகவின் தில்லுமுல்லுவை தோலுரித்த அம்மா.. 2016-2017 காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீது பதிலளித்து பேசிய அம்மா அவர்கள்.. சட்டமன்ற பேச்சு என்றால் இதுதான்..

"2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, தாம் மட்டும் பேரவைக்கு தனி ஆளாக வந்து பேசியதாகவும், இதுபோன்ற துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா?" - தமிழக முதல்வர்சட்டபேரைவையில் புரட்சி தலைவி அம்மா கேள்வி? தொகுப்பு : Date : Aug 22, 2016

Address

Coimbatore
641008

Alerts

Be the first to know and let us send you an email when SPVelumaniTeam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SPVelumaniTeam:

Shortcuts

Share