06/07/2020
இந்தியாவை சீனா சீண்டியதின் விளைவாக சீனா மிகபெரும் அதிர்ச்சியில் இருக்கின்றது, காரணம் அவர்களுக்கு விழுந்திருப்பது எதிர்பாரா அடியல்ல இடி, இப்படி நடக்கும் என சீனர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
எல்லையில் வம்பென்றால் நம்மிடம் அடங்கித்தான் போவோம் என கணக்கிட்டுத்தான் சீனா உரசி பார்த்தது, ஆனால் இந்தியாவின் பதிலடியால் உறைந்து போயுள்ளது சீனா .
எல்லையில் உறுதியாக இந்தியா நிற்பதும், படைகளையும் நவீன ஆயுதங்களையும் குவிப்பதல்ல விஷயம். சர்ச்சைகுள்ளான பகுதிக்கு மோடி செல்லகூடாது என சீனா சொன்னது.
சும்மாவே சாமியாடும் மோடிக்கு சொல்லவும் வேண்டுமா? எங்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நடமாட எவன் அனுமதியும் தேவை இல்லை என இந்தியா சொன்னதோடு அங்கே சென்று மோடி பகிரங்கமாக மிரட்டியதும்,
சீன கன்னத்தின் ஒரு பக்கம் விழுந்த அடி.
சீனாவின் மறு கன்னத்தில் விழுந்தது செயலி தடை,
அதைவிட மோசமாக சீனாவின் மண்டையில் ஓங்கி அடித்திருக்கின்றது இந்தியா.
ஆம். ஏகபட்ட பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வேலைகளை ஒப்பந்தம் எடுத்திருந்த சீன கம்பெனிகளை விரட்டிவிட்டது இந்தியா. ரயில்வே டிராக், பாதாள வழி இது போக சாலை திட்டம் போன்ற ஏகபட்ட ஒப்பந்தங்களை சீன நிறுவனங்கள் எடுத்திருந்தன.
அவற்றையெல்லாம் பிடுங்கிவிட்டு சீன கம்பெனிகளை இந்தியா விரட்டியதும்,, சீன பொருளுக்கு உயர் வரி, சிலவற்றுக்கு உச்சபட்ச தடை என்பதும் இன்னும் பலவும் அவர்கள் எதிர்பாராதது.
இதெல்லாம் போக ஐ.நாவில் பெரும் அடி கொடுத்தது இந்தியா.
ஹாங்காங் விவகாரத்தில் இந்தியா வாய்திறக்காது அப்படி திறந்தால் காஷ்மீரை சீனா இழுக்கும் என கருதபட்ட நிலையில் சீனாவின் வாயில் குத்தியது இந்தியா
ஆம், ஹாங்காங்கில் இந்திய மக்கள் உண்டு, அவர்கள் நலன் காக்க நாம் சீனாவினை கண்டிக்கின்றோம் என எதிர்த்து இந்தியா வாக்களித்ததில் அரண்டு போயிற்று சீனா. இது இந்தியாவின் அட்டகாசமான வாதம்.
ஆம். காஷ்மீரில் சீனர்கள் இல்லை. ஆனால், ஹாங்காங்கில் இந்தியர்கள் நிறைய உண்டு.
சீனாவுக்கு இப்பொழுது இன்னொரு அச்சம் வந்துவிட்டது. அது இந்திய ராணுவத்தை நாமே பலமானதாக்குகின்றோமோ எனும் ஒரு பயம்.
ஆம், யுத்தமேகம் வந்தவுடன் இந்தியா மிக பெரும் தயாரிப்புகளை அஞ்சாமல் செய்வதை கண்ட உலக நாடுகள் பெரும் ஆதரவு கொடுக்கின்றன.
நவீன எப் 35 கூட கொடுக்க தயார் என்கின்றது அமெரிக்கா, விரைவில் அது வந்தாலும் வரலாம். ஏற்கனவே, இஸ்ரேலும் இன்னும் சில நாடுகளும் உன்னத தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொடுத்திருக்கின்றன.
சும்மா கிடந்த இந்தியாவினை பலமாக்கிவிட்டோமோ என யோசிக்கின்றது சீனா.
கிடைத்த வாய்ப்பில் நுழைந்து கலக்குகின்றது இந்தியா, உலக அரங்கில் அதன் பலமான நிலைப்பாடு மிகுந்த கவனத்தை பெறுகின்றது.
அந்த கவனம் ஒரு உண்மையினை மவுனமாக சொல்கிறது.
ஆம், இதுகாலமும் இதை செய்திருக்கலாம் அல்லவா? ஏன் முந்தைய அரசுகள் இதை செய்யவில்லை? முந்தைய அரசுகளுக்கு ஏன் இவ்வளவு தைரியமும் நாட்டுபற்றும் இல்லை? ஏன் சீனாவினை எதிர்க்கவில்லை?
இது, இதற்கு முன் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் மீது சாமான்யனுக்குள் எழுந்துள்ள கேள்வி.
அதனால், தேசம் அவர்களை கைவிட்டு பலமான தலைவரையே தேர்ந்தெடுக்க நினைக்கும் என்னும் கருத்து இயல்பாகவே உருவாகிவிடும் இன்றைய நிலையில் மக்களிடமிருந்து மெல்ல வலிமையை இழந்துவிட்ட காங்கிரஸ் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக தனது திட்டங்களை மக்களிடையே விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது மிகையானதல்ல.
இது, இப்பொழுது உலகநாடுகளும் அவர்களின் மக்களும் ஏற்றுகொண்ட உண்மை. அந்த உண்மை இந்தியாவின் மாநிலமான தமிழகம் உணர்ந்துள்ளதாகவே யாம் நினைக்கிறோம். ஒவ்வொரு தமிழனின் உள்ளக்கிடக்கையிலும் இந்தியாவின் இன்றைய அரசின் செயல்பாட்டில் ஒரு திருப்தி நிலவும் இந்நேரத்தில்
இந்தி எதிர்ப்பு, ஈழம், பிரபாகரன் விஷயம், இது போல
மத்திய அரசை எதிர்த்து எழுப்பப்படும் கோஷங்கள் மெல்ல வலுவிழந்து விடுமெனத் தோன்றுகிறது.
ஏனெனில், தமிழனுக்கு தாமதமாகவே விழிப்புணர்வு வரும் என்பது கடந்த கால நிகழ்வுகள் தெரியப்படுதிதியுள்ளன. உதாரணம் கச்சத்தீவு, இலங்கைத் தமிழர் படுகொலை உட்பட,
அட! கொரோனாவே அவனுக்கு இப்பொழுதுதான் புரிகின்றது என்றால்?
நாட்டின் அறுபது ஆண்டுகால ஆட்சியை தன் கையில் வைத்திருந்த காங்கிரஸும், அதன் கூட்டாளிகளும் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டம் இதுவே என யாம் கருதுகிறோம்.
முனியம்சிவசண்முகம்