09/08/2026
நேற்று கட்சி தொடங்கியவன் வரிசையாக நிர்வாகிகளை அறிவித்து வருகிறான்..
தேர்தலில் தோல்வியை தழுவினாலும்
எந்த பயமும் இல்லாமல் எந்த தயக்கமும் இல்லாமல் தன் கட்சியில் உள்ள துரோகிகளை தூக்கி எறிந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால்,
தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன?
கட்சிக்குள்ளேயே இருந்து தோல்வி அடையச் செய்தவர் யார்?
கழகத்தில் துரோகம் செய்பவர் யார்?
கூட இருந்து குழி பறித்தவர் யார் என்று கடைக்கோடி தொண்டனுக்கு கூட தெரிந்தும் உடனடி நடவடிக்கை எடுக்காமல்
36 கொண்ட குழு அமைத்து அதன் அறிக்கையை பெற்று அதன்பின் பத்து பேர் கொண்ட குழு அமைத்து அறிக்கையை
தலைமை நேரடியாக வாங்கி பல நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்க இன்னும் தயக்கம். இது மாற்றத்தை தள்ளிப்போடுவதாகத்தான் அர்த்தம்.
இந்த தயக்கம் தான் தேர்தல் தோல்விகளுக்கு முதல் காரணம்..
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா
ஒரு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை உருவாக்கி வைத்திருந்தார்.ஒரு ஆளை தூக்கினாலும்
அவரை விட சிறப்பாக செயல்பட இன்னொரு ஆள் தயாராக இருக்கிறார்.
ஆனால் திமுகவில் அப்படி எல்லை.இவரை தூக்கினால் அந்த இடத்தில் வேறு ஆள் இல்லையே என்ற நிலையை தான் திமுக தலைமை உருவாக்கி வைத்துள்ளது.
பல பத்து ஆண்டுகளாக ஒரே மாவட்ட செயலாளர்,நகர் செயலாளர், ஒன்றிய செயலாளர்,பேரூர் கழக செயலாளர் அவர் தன்னை தவிர வேறு யாரும் தன் இடத்திற்கு வந்து விடக்கூடாது என்று
சுய நலத்துடன் செயல்பட்டதன் விளைவு
மாவட்ட செயலாளர் பதவிக்கு தகுதி உள்ளவர்கள் யாரும் தலைமையின் கண்ணுக்கு தெரியவில்லை.
ஆட்சியை சிறப்பாக நடத்த எடுத்த முயற்சியில் சிறு துளி கூட கட்சியில் கவனம் செலுத்தி இருந்தால் நாம் தோற்றிருக்கமாட்டோம்.
சிலர் கட்சியில் இருந்து போனார்கள் அவர்கள் இடத்துக்கு தகுதியுள்ளவர்களை
நியமிக்க இன்னும் தயக்கம்.
ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக
அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்தை நியமித்தீர்கள்.
தற்போது தூக்கி விட்டீர்கள்.
என் தோல்விக்கு கட்சியினரின் உள்ளடி தான் என்கிறார் அவரை அழைத்து பேசப்பட்டதா?
சரி தூக்கியாச்சு தூக்கிய இடத்தில்
புது மாவட்ட செயலாளரை உடனே அறிவித்திருக்கலாமே.மீண்டும் இரு தொகுதிகளை பிரித்து பழைய மாவட்ட செயலாளர்கள் இடமே கொடுக்கப்பட்டுள்ளது. வேறு யாரை நியமிப்பது என்ற குழப்பமா? அந்த குழப்பமே தலைமைக்கு மாவட்ட நிலவரம் தெரியவில்லை என்பது தானே அர்த்தம்?
இவரை பதவியில் இருந்து எடுத்தால் வருத்தப்படுவாரோ?
இவரை பதவியில் இருந்து எடுத்தால்
வேறு கட்சிக்கு போய்விடுவாரோ?
இவரை பதவியில் இருந்து எடுத்தால்
அவர் கோபித்து கொள்வாரோ?
என்ற தயக்கத்தையும்,பயத்தையும்
போக்காமல் மாற்றம் என்பது சாத்தியமல்ல..
தலைவரும் இளந்தலைவரும் சிந்திப்பார்களா?