SU.Ilankavi BSP

SU.Ilankavi BSP political

28/03/2026

தமிழ்நாட்டில் முதலமைச்சர் தொடங்கி அந்தெந்த கட்சியின் தலைவர்கள், மற்றும் தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள் வரை வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்,

பகுஜன் சமாஜ் கட்சி என்பது
தேர்தலை மையமாக கொண்டு இயங்குகிற தேசிய கட்சியாகும்,

பிஎஸ்பி யின் நிறுவனர் மான்யவர் கான்சிராம் அவர்கள் , பிஎஸ்பி யின் தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி அவர்கள் தேர்தல் களத்தில் நின்றவர்கள்,

தமிழ்நாட்டில் மறைந்த தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களும் அவர் தலைமையில் இயங்கிய மாநில பொறுப்பாளர்களும் தேர்தல் களத்தில் நின்றவர்கள்,

2026- ல் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் ஒரே ஒரு பிஎஸ்பி யின் மாநில பொறுப்பாளர் கூட வேட்பாளராக இதுநாள் வரை அறிவிப்பு வெளியாகவில்லை ஏன்.?

நீங்கள் எல்லாம் இக் கட்சியை வளர்க்க வந்தீர்களா.? அல்லது மாநில பொறுப்பு வாங்கிக்கொண்டு பதவி சுகத்தை அனுபவிக்க வாழவந்தீர்களா.?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளர் யார்.?

சனவரி 15-ல்***************தையில் பிறந்த தமிழ்த்தாய் தரணியில் ஆளப்போகும் தேசத்தாய் அனைத்து மக்கள் போற்றும் அற்புதத்தாய் #...
15/01/2026

சனவரி 15-ல்
***************
தையில் பிறந்த தமிழ்த்தாய் தரணியில் ஆளப்போகும் தேசத்தாய் அனைத்து மக்கள் போற்றும் அற்புதத்தாய்
#பெகன்குமாரிமாயாவதி
அவர்களின் பிறந்தநாளில்
வாழ்த்தி வணங்குகிறோம்

அன்புடன்
காஞ்சி இளங்கவி
சென்னை மண்டல
ஒருங்கிணைப்பாளர்
பகுஜன் சமாஜ் கட்சி
தமிழ்நாடு

02/11/2025

#ஜெய்_பீம்

சமத்துவ தலைவரை துரோகிகள் கொன்றார்கள் மான்யவர் கான்சிராம் சொன்ன சம்சாக்கள் சமத்துவ தலைவர் கொள்கையை கொன்றார்கள் இருவருக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.
சமத்துவ தலைவர் என்றும் BSP தான்.

01.11.2025 விழுப்புரம் மாநில செயற்குழு கூட்டத்தில் எனது உரை...

மான்யவர் கான்சிராம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாளில் இந்தியாவை ஆள உறுதியேற்ப்போம்
08/10/2025

மான்யவர் கான்சிராம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாளில் இந்தியாவை ஆள உறுதியேற்ப்போம்

வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் தொகுதி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள S.ஆனந்தன் அவர்கள் போட்டுள்ள ச...
06/10/2025

வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் தொகுதி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள S.ஆனந்தன் அவர்கள் போட்டுள்ள சுவரொட்டி விளம்பரம்,

வாழ்த்துக்கள் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தலைவர் அண்ணன் S.ஆனந்தன் அவர்களுக்கு...

01/09/2025
01/09/2025

ஜெய்பீம்

காஞ்சி இளங்கவி ஆகிய எனக்கு...சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆகிய ...
04/08/2025

காஞ்சி இளங்கவி ஆகிய எனக்கு...

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மண்டல ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வழங்கிய.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தன்மான தலைவர்
அண்ணன் Dr. P. ஆனந்தன் அவர்களுக்கும். பரிந்துரை செய்த மாநில துணைத்தலைவர் அண்ணன் T.இளமான்சேகர், அண்ணன் இரா. பெரியாரன்பன், அண்ணன் கே. கினோஸ் ஆம்ஸ்ட்ராங், அண்ணன் கே, ஜெய்சங்கர், ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.....

காஞ்சிபுரம் கிழக்கு, மேற்கு ஒருங்கிணைந்த மாவட்டங்களின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனைக் கூட்டம். முன்னாள் இந்...
27/06/2025

காஞ்சிபுரம் கிழக்கு, மேற்கு ஒருங்கிணைந்த மாவட்டங்களின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனைக் கூட்டம். முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் பகுஜன் தொண்டர்கள் அனைவரும் இக்கூட்டத்திற்கு வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்
காஞ்சி இளங்கவி
மண்டல ஒருங்கிணைப்பாளர்
பகுஜன் சமாஜ் கட்சி

ஆதிக்க எதிர்ப்பு நாள்"""""""""""""""""""""""""""""""""""""""""""""2024 ஆம் ஆண்டு ஜூலை 5--ம் தேதிபகுஜன் சமாஜ் கட்சியின் த...
21/06/2025

ஆதிக்க எதிர்ப்பு நாள்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
2024 ஆம் ஆண்டு ஜூலை 5--ம் தேதி
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் மாநில தலைவராக இருந்த அண்ணன் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை நாடறியும்,

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு முழுமையான நீதி இதுனால் வரை கிடைக்கவில்லை.
முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொதுக்கூட்டமும். மறைந்த சமத்துவ தலைவர் அண்ணன் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நடைபெற உள்ளது,

இந்நிகழ்வு வரும் 05.07.2025 ந்தேதி சனிக்கிழமை, காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சென்னை.பெரம்பூர்,பந்தர் கார்டனில் நடைபெற உள்ளது,

இந்நிகழ்வை தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் உச்சநீதி வழக்கறிஞருமான அண்ணன் Dr.P. ஆனந்தன் அவர்கள்,

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர் திருமிகு. ராஜாராம் EX எம்பி அவர்களும் மற்றும் மாநில நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்கள், எனவே பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து நிலை மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, மற்றும் துணைநிலை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் குறித்த நேரத்தில் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.!

ஜெய்பீம்!

இவன்
காஞ்சி இளங்கவி
பகுஜன் சமாஜ் கட்சி
தமிழ்நாடு

21/05/2025

அனகாபுத்துரில் 750 வீடுகளை இடிக்க தமிழக அரசு நீதி மன்றத்திடம் உத்தரவு வாங்கி சாலையோர பூங்காக்கள் அமைப்பதற்காக...

பல ஆண்டுகளுக்கு முன்னால் நிலம் வாங்கி, குருவியை போல உழைத்து, சிறுக சிறுக சேமித்து வைத்து, வீடு கட்டி, மின் இணைப்பு பெற்று, வீட்டுவரிகளை எல்லாம் கட்டியும், சாலைகள் எல்லாம் பெற்று, எளிய மனிதர்கள் வாழும் வீடுகள் அதிகார அரசியல் பலத்தோடு போலீஸ் துணையோடு அம் மக்களின் விடுகளை இடித்து தள்ளி தரைமட்டமாக்கியுள்ளது திமுகவின் திராவிட மாடல அரசு..

உபியில் பாஜகவின் யோகி யின் புல்டோசர் அரசு எளிய மக்களின் வீடுகளை இடித்து நாசம் செய்கிறது அவர்களுடைய வாழ்வாதாரத்தை அழிப்பது போல

தமிழ்நாட்டில் திமுகவின் ஸ்டாலின் அரசு உழைக்கும் ஏழை எளிய மக்களுடைய வீடுகளை இடித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது திராவிட மாடல் பாசிச அரசு,

வலியும் வேதனைகளும் எப்போதும் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே சொந்தமாகிறது.

கோடிக்கணக்கான பணத்தை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றி உலையில் போட்டு, அரசு நிலங்களை ஆக்கிரமித்து பங்களாக்களாக கட்டி உள்ள பொறுக்கி நாய்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரிக்கிறது கேடுகெட்ட அரசுகள்,

சிங்காரச் சென்னை நகரமயமாக்கல் என்கிற போர்வையில்...

திமுக ஆட்சி வந்த நாளிலிருந்து சென்னை தலைநகரில் ஏராளமான ஏழை எளிய மக்களுடைய குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் அவருடைய வாழ்வாதாரத்தை அழித்திருக்கிறார்கள்,

திமுக ஆட்சி தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,

திமுக ஆட்சி வீழ்ச்சியாகாத வரை தமிழ்நாட்டில் எளிய மக்களுடைய வாழ்வு எழுச்சி பெறாது,

திமுக உழைக்கும் மக்களின் தீய சக்தி,

திமுக பகுத்தறிவு இயக்கம் அல்ல பாட்டாளி வர்க்கத்தை குழி தோண்டி புதைக்கும் பாசிச இயக்கம் ஆகும்.!

விழித்துக் கொள் ஏழை எளிய தமிழ் மக்களே...

08/05/2025

போர் ஒருநாள் முடிவடையும் தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்

இறந்துபோன மகனின் வருகைக்காக
வயதான தாய் காத்திருப்பாள்

காதல் கணவனை எதிர்பார்த்து காத்திருப்பாள் அந்தப் பெண்

அந்தக் குழந்தைகள்
தங்கள் சாகச அப்பாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்

எங்கள் மண்ணை யார் விற்றார்கள் என எனக்குத் தெரியாது - ஆனால், அதற்கான விலையை
யார் தருகிறார்கள் என்பதற்கு
சாட்சி நான்

*-மெஹமுத் டார்விஷ்*
(பாலஸ்தீனிய கவிஞர்)

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when SU.Ilankavi BSP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share