02/01/2021
நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.
ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். வாருங்கள் ஒன்றினைவோம் நாளை சரித்திரம் படைக்க இன்றே தொடங்குவோம்... வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம் Vbsms Tamilnadu