26/08/2026
பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற நிலை குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா M.P. அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வினை மேற்கொண்டோம்,
நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு பணிகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறிப்பாக நாளந்தா பல்கலைக்கழகத்திலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கண்டு ஆய்வு மேற்கொண்டோம் மேலும் ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டோம்
இந்நிகழ்வில் நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் சிறப்பாக நடைபெற்ற இந்த ஆய்வில் நிலைகுழு உறுப்பினர்களை நிறைவாக மாநில முதல்வர் சாம்ராட் சௌத்ரி அவர்கள் அனைவரையும் மரியாதை நிமித்தம் சந்தித்த போது அனைவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.