16/08/2026
நேற்று நமது நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,தமிழக வெற்றிக் கழகம் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பாக 80 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் M. விக்னேஷ்வரன் BBA., அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் R.E. நிஷாந்த் B.E., தலைமையில், முதல் கட்டமாக வடக்கு ஒன்றியச் செயலாளர் தளபதி பிரபு அவர்கள் முன்னிலையில், திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, பெருவநல்லூர் பிரிவு சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட இணை அமைப்பாளர்கள் R.S. உபைதுர் ரஹிமான், முரளி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வினோத், சசிகலா மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய ஒன்றியச் செயலாளர் ராஜா, கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்வம், வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் கொ. கார்த்திக், இளைஞரணி அமைப்பாளர் கோபால், கழக நிர்வாகி வசந்த் உள்ளிட்ட ஒன்றியம், நகரம் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.