24/08/2026
நாகர்கோவில் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக.மாநகரம் முழுவதும் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு, கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்றைய தினம் கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பில் விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டு ,கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஓட்டும் நடவடிக்கையை வணக்கத்துக்குரிய மேயர்( பொ) திருமதி.மேரி பிரின்சி லதா அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திருமதி . இரா. ஐஷ்வர்யா இ.ஆ.ப ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
எனவே கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே துணிப்பைகளை கொண்டு வருவதற்கு கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பொதுமக்களும் கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது, வீட்டிலிருந்தே துணிப்பைகளை எடுத்துச் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.