CPIM Puducherry

CPIM Puducherry Official page of Communist Party of India (Marxist) - Puducherry State Committee.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக CPM (அல்லது) CPI-M என்று அழைக்கப்படும் இக்கட்சியின் முழுப்பெயர் Communist Party of India (Marxist) எனப்படும். இந்தியாவில் மொத்தம் 6 தேசியக் கட்சிகளே உள்ளன, அவற்றுள் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒன்று.

மக்கள் ஜனநாயக புரட்சியை அடிப்படையாகக் கொண்ட இக்கட்சி இந்தியாவில் மு

தலாளித்துவத்தையும், சாதியத்தையும் எதிர்த்து தொடர்ந்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளையும், உழைப்பாளிகளையும், மாணவர்களையும், பெண்களையும் திரட்டி வர்க்க ரீதியிலான போராட்டத்தை கூர்மைபடுத்திக் கொண்டிருக்கிறது.

மார்க்சியம் என்னும் தத்துவ அடிப்படையில் சுரண்டலற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க திட்டமிட்டு பயணம் செய்துகொண்டிருக்கிறது.

வாருங்கள் இணையுங்கள் புதுச்சேரியை இந்தியாவை பாதுகாப்போம்.

📚✨ புதுச்சேரியில்  புத்தகத் திருவிழா! வாசிப்பைக் கொண்டாடுவோம்! பாரதி புத்தகாலயத்தின் 25-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில்,...
26/08/2026

📚✨ புதுச்சேரியில் புத்தகத் திருவிழா!

வாசிப்பைக் கொண்டாடுவோம்! பாரதி புத்தகாலயத்தின் 25-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் "நம்மூரு புத்தகத் திருவிழா" நமது புதுச்சேரியிலும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. 📖❤️

"உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள அறிவாயுதமாய் நமக்கு இருப்பது புத்தகமே" என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, நமது அறிவை விரிவுசெய்யும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

🗓️ எப்போது? 2026, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 07 வரை

🕔 தொடக்க விழா: ஆகஸ்ட் 27, மாலை 5.30 மணி

இடம்: விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையம் (LRCM), (சங்கர வித்யாலயா பள்ளி அருகில்), ECR, லாஸ்பேட்டை, புதுச்சேரி. https://maps.app.goo.gl/Jhhgwvdnn8VhfEkT8

மாண்புமிகு புதுச்சேரி மாநில முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

மாண்புமிகு கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பெ. ராஜவேலு அவர்கள் புத்தக விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

பல முக்கிய ஆளுமைகள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள்... பல்லாயிரக்கணக்கான நூல்கள் ஒரே இடத்தில்! 📚

அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% சிறப்பு கழிவு உண்டு! 🤩

வாசிப்புப் பழக்கத்தை கொண்டாடுவோம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவோம்! 👨‍👩‍👧‍👦

#புதுச்சேரிபுத்தகதிருவிழா

இந்திய விடுதலை போரில் களப்பலி ஆன தோழர் சிவராம் ஹரி ராஜகுரு அவர்களின் பிறந்ததினம் இன்று.பகத் சிங், சுக்தேவ் ஆகியவர்களுடன்...
24/08/2026

இந்திய விடுதலை போரில் களப்பலி ஆன தோழர் சிவராம் ஹரி ராஜகுரு அவர்களின் பிறந்ததினம் இன்று.

பகத் சிங், சுக்தேவ் ஆகியவர்களுடன் இணைந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகளும் எதிர்த்து போராடி, தூக்குமேடை ஏறிய மாவீரன் சிவராம்ராஜகுரு தியாகம் என்றும் நிலைத்திருக்கும்.

#செவ்வணக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),புதுச்சேரி மாநிலக் குழுபத்திரிகைச் செய்தி சட்டமன்றம் நோக்கிய கோரிக்கை ஆர்ப்பாட்ட...
24/08/2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
புதுச்சேரி மாநிலக் குழு
பத்திரிகைச் செய்தி

சட்டமன்றம் நோக்கிய கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

வணக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி மாநிலக் குழுவின் சார்பில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 24.08.2026 இன்று காலை 10:30 மணிக்கு புதுச்சேரி காமராஜர் சிலை அருகிலிருந்து சட்டமன்றம் நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற உள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்:

ரேஷன் கடைகளில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 6 மாதத்திற்கான அரிசியை உடனடியாக வழங்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தைச் சிதைக்கும் வகையிலான 'டிஜிட்டல் காயின்' திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

மின்துறையில் ப்ரீபெய்டு மீட்டர் (Prepaid Meter) பொருத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

பால் கொள்முதல் விலை: பொதுமக்களான நுகர்வோருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலச் செய்தியைத் தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு பொதுமக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்காகத் தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
(எஸ். ராமச்சந்திரன்)
மாநிலச் செயலாளர்,
Communist Party of India (Marxist) CPIM
Puducherry State Committee
No: 19, Priyadarshini Street
Mugambigai Nagar
Reddiyarapalayam - 605010

Ph.: 0413-2200100

Email id: [email protected]
Website: https://pycpim.in/
Read: marxist.tncpim.org

புதுச்சேரி உழைக்கும் மக்களே, நம் அடிப்படை உரிமைகளுக்காகவும், அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் ஒரு பிரம்மாண்டமான...
23/08/2026

புதுச்சேரி உழைக்கும் மக்களே, நம் அடிப்படை உரிமைகளுக்காகவும், அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் ஒரு பிரம்மாண்டமான போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் நடைபெறும் "செங்கொடி ஏந்தி பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்".

📅 தேதி: ஆகஸ்ட் 24, 2026
⏰ நேரம்: காலை 10 மணி
📍 துவங்கும் இடம்: காமராஜர் சிலை, புதுச்சேரி (ராஜா திரையரங்கம் அருகில்).

கோரிக்கைகள்:
🚩 ரேஷன் கடை மூலமாக நிலுவையில் உள்ள ஆறு மாத அரிசியை உடனே வழங்கு!
🚩 அரசு அறிவித்தபடி 14 அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷனில் வழங்க நடவடிக்கை எடு!
🚩 பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்கும் டிஜிட்டல் காயின் திட்டத்தை கைவிடு!
🚩 புதுச்சேரி மக்களை கடுமையாக பாதிக்கும் பிரீபெய்டு மின்மிட்டர் திட்டத்தை கைவிடு!

மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் ஒன்றுபட்டு போராடுவோம்! இந்த பேரணியில் திரளாகப் பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம்!

உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வோம்!

22/08/2026

முதலாளித்துவத்தை சோசலிசம் நிச்சயம் வீழ்த்தும்!" - டெங் சியாவோபிங்

இன்று (ஆகஸ்ட் 22) நவீன சீனாவின் சிற்பியும், மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளருமான தோழர் டெங் சியாவோபிங் (Deng Xiaoping) அவர்களின் பிறந்தநாள்! (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1904).

1978 முதல் 1989 வரை சீன மக்கள் குடியரசின் (PRC) உச்சபட்ச தலைவராகப் பொறுப்பு வகித்த இவர், மாவோ சேதுங்கிற்குப் பிறகு சீன தேசத்தை மறுசீரமைத்ததில் மிக முக்கியப் பங்காற்றியவர்.

மார்க்சிய - லெனினிய தத்துவங்களை சீனாவின் அப்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழலுக்கு ஏற்ப "சீன குணாதிசயங்களுடன் கூடிய சோசலிசம்" (Socialism with Chinese characteristics) என்ற கோட்பாடாக நடைமுறைப்படுத்தியவர்.

இவரது தைரியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் (Economic Reforms) பல்லாயிரக்கணக்கான சீன மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்தன. இன்று சீனா உலகப் பொருளாதாரத்தில் ஒரு தவிர்க்க முடியாத வல்லரசாகத் திகழ்வதற்கு டெங் போட்ட அடித்தளமே முக்கியக் காரணம்.

சோசலிசத்தின் மீதான நம்பிக்கை: முதலாளித்துவம் உலகை ஆக்கிரமிப்பது போல் தோன்றினாலும், இறுதியில் உழைக்கும் மக்களின் விடுதலையை உறுதி செய்யும் சோசலிசமே வெல்லும் என்பதில் சமரசம் இல்லாத நம்பிக்கை கொண்டவர்.

நடைமுறை சாத்தியமான திட்டங்கள் மூலம் ஒரு கம்யூனிச நாடு எப்படி உலக அரங்கில் கம்பீரமாக எழுந்து நிற்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய தோழர் டெங் சியாவோபிங் அவர்களின் பிறந்தநாளில், அவரது வரலாற்றுப் பங்களிப்பை நினைவுகூருவோம்!
செவ்வணக்கம்!

நீதிபதிகளுக்கு ஓய்வூதியம், வீடு, காரின் சலுகை, பாதுகாப்பு… எல்லாம் உண்டு.ஆனால் தொழிலாளி தோழர்கள் அதே உரிமையைக் கேட்டால்…...
21/08/2026

நீதிபதிகளுக்கு ஓய்வூதியம், வீடு, காரின் சலுகை, பாதுகாப்பு… எல்லாம் உண்டு.
ஆனால் தொழிலாளி தோழர்கள் அதே உரிமையைக் கேட்டால்… “தொழில் வளர்ச்சிக்குத் தடையா?”, “முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்களே?”, “புதிய சட்டம் அப்படித்தான்” என்று முதலாளிகளின் குரலில் பதில் வருகிறது.

1978-ல் ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் தொழிலாளர்களுக்குக் கொடுத்த விரிவான பாதுகாப்பை இன்று “பழையது” என்று ஒதுக்கி வைக்கிறார்கள்.

பழைய வழக்குகளுக்கு மட்டும் அந்த உரிமை, புதிய வழக்குகளுக்கு “புதிய வரையறை” என்று சொல்லி, பல லட்சம் தொழிலாளர்களின் தொழில்துறை சர்ச்சை உரிமையைக் குறுக்குகிறார்கள்.

நீதிமன்றம் நடுநிலை என்று சொல்வார்கள்.
ஆனால் யார் பக்கம் சாய்ந்து நிற்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.தொழிலாளிக்கு ஓய்வூதியம் கேட்டால் “நிதிச்சுமை”,
நீதிபதிக்கு ஓய்வூதியம் இருந்தால் “சுதந்திர நீதித்துறை”!இது நீதியா?
அல்லது இன்றைய முதலாளித்துவத்தின் குரலா? #தொழிலாளர்உரிமை
#நீதிமன்றம்

இன்று (ஆகஸ்ட் 21), தமிழ்நாட்டின் மாபெரும் பொதுவுடைமைத் தலைவரான தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் பிறந்தநாள்.​"கலை இலக்கியம்,...
21/08/2026

இன்று (ஆகஸ்ட் 21), தமிழ்நாட்டின் மாபெரும் பொதுவுடைமைத் தலைவரான தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் பிறந்தநாள்.

​"கலை இலக்கியம், அரசியல், சமூகச் சீர்திருத்தம் எனப் பல துறைகளிலும் தனது புரட்சிகரமான கருத்துக்களால் தமிழ் சமூகத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தோழர் ஜீவா."

​எளிமையின் சின்னமாகவும், நேர்மையின் வடிவமாகவும் திகழ்ந்த அவர், தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். அவரது எழுத்துக்களும் பேச்சுகளும் இன்றும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

​அவரது புரட்சிகரமான கொள்கைகளையும், தன்னலமற்ற தியாகத்தையும் இந்நாளில் நினைவு கூர்வோம்.

​ #சிபிஎம் #மார்க்சிஸ்ட் #கம்யூனிஸ்ட்

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: துணைநிலை ஆளுநர் பங்கேற்பு கூட்டாட்சிக்கு எதிரானதுபுதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்ஒன்...
21/08/2026

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: துணைநிலை ஆளுநர் பங்கேற்பு கூட்டாட்சிக்கு எதிரானது

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கோவளத்தில் ஆகஸ்ட் 20 வியாழனன்று நடை பெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பங்கேற்றது கூட்டாட்சி முறைக்கு எதிரானது எனக் குற்றம் சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஆளுநர் பங்கேற்பு ஏன் தவறு?

முதல்வர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டுக்கு ஆளுநர்கள் யாரும் அழைக்கப்படவில்லை; வழக்கமாக மாநிலத்தை முதல்வரே பிரதிநிதித் துவப்படுத்த வேண்டும் என்றிருக்க. வேண்டுமென்றே புதுவை துணை நிலை ஆளுநரும் முதல்வரும் பங்கேற் பதாகவும், ஆளுநரைத் தொடர்ந்து முதல்வர் பேசுவதாகவும் அறிவிக்கப் பட்டது. இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் கூட்டாட்சி முறைக்கும் எதிரானது என்றும், வாக்களித்த புதுச் சேரி மக்களின் ஜனநாயக உணர்வை புறக்கணிக்கும் மேலாதிக்கப் போக்கின் வெளிப்பாடு என்றும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கூட்டணியில் விரிசல்

முதல்வர்கள் மாநாட்டில் ஆளுநருக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி, இது பா.ஜ.க.என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலின் வெளிப்பாடு என்றும், நிரந்தர சபாநாயகரை இன்னும் தீர்மானிக்காததன் தொடர்ச்சி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அதி ருப்தியை வெளிப்படுத்திய முதல்வர் என். ரங்கசாமியின் நிலைப்பாடு நியாய மானது என்று கூறியுள்ள கட்சி, புதுச்சேரி மக்களையும் முதல்வரையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இரண்டாம் பட்சமாக நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

காங்கிரஸ் மீதும் விமர்சனம்

மாநிலத்திலும் ஒன்றியத்திலும் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ். மாநில அந்தஸ்தை வழங்கவோ பெறவோ வாய்ப்பிருந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றும். மாநாட்டில் பங்கேற்றிருந்தால் அந்தஸ்து கிடைத்திருக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி இப்போது கூறுவது வேடிக்கையானது என்றும் கட்சி விமர்சித்துள்ளது.

பாஜக கூட்டணியில் அந்தஸ்து சாத்தியமில்லை

பா. ஜ. க.வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்தையோ உரிமைகளையோ பெற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி, என்.ஆர். காங்கிரஸின் தயவில் சட்டமன்றப் பதவிகளைப் பெற்று புதுச்சேரியை மக்கள் விரோதத் திட்டங்களின் சோதனைக் களமாகப் பாஜக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. உரிமைகள், மாநில அந்தஸ்து, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களை உண்மையாகச் செயல்படுத்த வேண்டுமானால் முதல்வர் பொருத்தமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்
எனவும் கோரியுள்ளது. 'வேட்டைக்காடாக புதுச்சேரி'

மின்துறைத் தனியார்மயம். ப்ரீபெய்ட் மீட்டர், "டிஜிட்டல் காயின்" பெயரில் ரேஷன் முறை சீரழிவு, 'நில பொருளாதாரம்' எனக் கடல்வளச் குறையாடல், விபி ஜி ராம் ஜி திட்டப் பெயரால் 100 நாள் வேலைத்திட்ட முடக்கம், தாய்மொழிக் கல்வி மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒன்றிய அரசு புதுச்சேரியை இந்துத்துவா கார்ப்பரேட் சக்திகளின் வேட்டைக் காடாக மாற்றி வருவதாகவும் கட்சி சாடியுள்ளது.

ஒன்றிணைந்து போராட அழைப்பு

ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும். கூட்டாட்சி முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எதி ராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மாநில முதல்வர்கள் வலுவான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீக்கதிர் 21.08.2026

20/08/2026

உற்பத்தியாளர்களின் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ! 🔥

​நமது வாழ்வாதார உரிமைகளை வென்றெடுக்க, இன்று புதுவை அண்ணா சிலையிலிருந்து சட்டமன்றம் நோக்கி நடைபெற்ற கறவை மாடுகளுடனான பேரணி 🙏

உங்களின் இந்த எழுச்சியான பங்கேற்பு நமது ஒற்றுமையின் பலத்தை ஆளுங்கட்சிக்கும், பாண்லே நிர்வாகத்திற்கும் உரக்கச் சொல்லியிருக்கிறது.

​நமது நியாயமான கோரிக்கைகளான:

✅ பாலுக்கு லிட்டருக்கு ரூ.60 ஆதார விலை

✅ பாண்லே மூலமாகவே மானிய விலையில் தீவனம்

✅ லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை

✅ 500 மாடுகள் வழங்கும் திட்டம்

ஆகியவற்றை வலியுறுத்தி நாம் எழுப்பிய முழக்கங்கள் சட்டமன்றத்தை அதிரச் செய்துள்ளன. ✊

​உரிமைக்காக வீதிக்கு வந்த ஒவ்வொரு விவசாயிக்கும், பால் உற்பத்தியாளருக்கும் சங்கம் சார்பாக புரட்சிகர வாழ்த்துகள்! அரசு உடனடியாக நமது கோரிக்கைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிடாவிட்டால், இந்த எழுச்சிப் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்! 🐄💪

​தொடர்ந்து இணைந்திருப்போம்! நமது உரிமைகளை வென்றெடுப்போம்! வாரீர்!!!

​- புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

சுதந்திர போராட்ட வீரர், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய...
20/08/2026

சுதந்திர போராட்ட வீரர், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, உழைக்கும் மக்களின் போராட்டத்தில் எப்போதும் முன்நின்று, நாட்டின் விடுதலைக்காக 14 ஆண்டுகள் சிறையிலும் தலைமறைவாகவும் வாழ்ந்தவர் தமிழ்நாடு எல்லைப் போராட்டத்தில் ரத்தம் சிந்திய, தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் பிறந்த தினம் இன்று.


Address

Pondicherry

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Puducherry:

Shortcuts

Share