05/05/2026
அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை பெற இயலவில்லை ஆனால் இந்தத் தோல்வி நமது முயற்சிகளின் முடிவல்ல; இது ஒரு புதிய தொடக்கத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் உழைத்த ஒவ்வொரு தொண்டருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். வெற்றி-தோல்வி என்பது ஜனநாயகத்தின் இயல்பான பகுதி. நம்முடைய கட்சியின் கொள்கைகள், நாட்டுப்பற்று, மற்றும் மக்கள் சேவை என்ற அடிப்படைகள் எப்போதும் நிலைத்தவை.
இந்த அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, இன்னும் வலுவாக, முன்னேற வேண்டும். மக்கள் மத்தியில் மேலும் நெருக்கமாக சென்று, அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு செயல்படுவோம்.
"இன்று தோல்வி – நாளை வெற்றி" என்பதையே நம் நம்பிக்கையாக கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
நன்றி,
P. ஆனந்தன்
மாவட்ட தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
இராணிப்பேட்டை மாவட்டம்