26/09/2024
யார் பாண்டியன் ?
எங்கள் முக்குலத்தோரும் சரி, அதில் குறிப்பாக பிற பிரிவு மறவர்களும் கூட திருநெல்வேலி கொண்டையங்கோட்டை மற மன்னர்களை "பாண்டியன்" என அழைக்கும் வழக்கமும், விதியும் உண்டு அதுவே தென்பாண்டி சீமை வாழ்வியல் முறை. இன்றும் தென்பாண்டி சீமையில் அனைத்து சாதிகளும் பொதுவாகவே மறவர்களை "தேவமார்" "பாண்டியமார்" என அழைக்கும் வழக்கம் இன்றளவும் உண்டு. இது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். இன்றைய சூழ்நிலையில் ஏற்க மனம் இல்லாமல் போகலாம். மன்னர்களின் உறவின் முறையினர் வாழும் பகுதிகளை "பாண்டியமார் தெரு" என்றும் பிற மறவர்கள் வாழும் பகுதியை "தேவமார் தெரு" என அழைக்கும் வழக்கமும் இருக்கு. சாதி வேற்றுமை ஒழிய வேண்டும் என ஒத்துழைத்து சில வழக்கத்தை மறந்து மனம் மாறி இருக்கிறோமே தவிர எங்கள் வரலாற்று பாரம்பரியத்தை மாற்ற நினைத்தால் எப்படி பொறுத்து கொள்ள முடியும். அது என்றுமே நடக்காது. சில நேரங்களில் சில உண்மைகளை உரக்க சொல்லி தான் ஆக வேண்டும். முக்குலத்தோருக்கும் அதில் குறிப்பா எல்லா மறவருக்கும் பாண்டிய மன்னனுடன் நெருங்கிய தொடர்பும் உறவும் இருந்ததை மறுக்கவும் இல்லை அதில் சந்தேகமும் இல்லை. ஆனால் பாண்டியன் கொண்டையங்கோட்டை மறவன்.
#தென்பாண்டி
#பாண்டியமார்
#தேவமார்
#திருநெல்வேலி
#கொற்கை
#பொதிகை
#கிளுவை
#புலித்தேவர்
#வெட்டும்பெருமாள்