18/04/2026
'அக்ஷ்சய திருதியை :
நிறைந்த குழந்தை செல்வங்களுடன், கடும் வறுமையில் போராடிக் கொண்டிருக்கிறார், 'குசேலர்'.
இந்த வறுமை நீங்க, ஒரு முறையாவது 'துவாரகை' சென்று 'கிருஷ்ண பகவானை' நேரில் தரிசிக்க வற்புறுத்திய தனது துணைவியின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்று, 'கிருஷ்ண' தரிசனத்திற்கு கிளம்பிவிட்டார், குசேலர்.
மனதில் நிறைந்த அன்பு... பக்தி... தனது மேல் துண்டில் முடிந்து வைத்திருக்கும், துணைவியார் கொடுத்த, வெல்லம் கலந்த அவல் ... இவைதான் அவரின், 'குருகுல' நண்பன் 'கிருஷ்ணனுக்கு' அவர் கொண்டு சென்ற, தரிசன சமர்ப்பணம்.
இவை அணைத்தையும் நடத்தும் 'மாயக் கண்ணன்', 'துவாரகை மாளிகை' வாசல் வந்து, 'பாமா, ருக்மணி சமேதராகக்' காட்சி கொடுக்கிறார், குசேலருக்கு.
அவரை ஆரத்தழுவி வரவேற்று, ஆசனத்தில் அமரச் செய்து, நெடுந்தூர நடைக் களைப்பு நீங்க, பாதம் கழுவி, அறுசுவை உணவு படைத்து, உறக்கம் கொள்ளும் ஆத்ம நண்பனுக்கு, மெதுவாய் விசிறி வீசி தூங்க வைக்கிறான் 'கண்ணன்'.
நண்பன் கிளம்புவதற்குத் தயாரான போது, 'வீட்டில் 'அண்ணியார்' எனக்கு ஏதாவது கொடுத்து அனுப்பினார்களா...?' என்று, குசேலருக்கு ஞாபகப் படுத்தி, அந்த அவல் முடிச்சியிலிருந்து, ஆவலுடன் ஒரு கைப்பிடி அவலை எடுத்து உண்கிறான் 'கிருஷ்ணன்'
'கிருஷ்ண தரிசனத்தில்' அணைத்தும் மறந்து போன 'குசேலர்', நிறைந்த மனதுடன், வீடு திரும்பும் போதுதான், தாம் எதற்காக இந்த தரிசனத்தை மேற்கொண்டோம்...? என்ற நினைவலையில் தவித்துப் போனார்.
ஆனால், 'கிருஷ்ண பகவான் ' அவல் முடிச்சியிலிருந்து, ஒரு கைப்பிடி அவலை ஆவலுடன் விழுங்கிய க்ஷணமே ... 'குசேலரது' வீடு, 'குபேரனது' வீடாகியது.
இந்த மகிமையை 'குசேலர்' வீடு திரும்பிய பின்னர்தான் அறிந்தார் ... ஓடிச் சென்று பூஜா அறையில் 'குழலூதும் கண்ணனாக' நின்று, சேவை சாதிக்கும், கிருஷ்ண பகவானின் பாதங்களில், சிரசை வைத்து, கண்ணீர்மல்க துதித்து அழுதார்.
இந்த அற்புதம் நிகழ்ந்த, வைகாசி மாதத்து, வளர்பிறை, திருதியை, நன்னாளே 'அக்ஷ்சய திருதியை' என்னும் பக்தித் திருநாள்......