ALL Friends Like ME

ALL Friends Like ME ஓம் முருகா...

30/05/2026

ஓம் முருகா...

இந்த சுவாமி படத்தை கட்டாயம் share செய்யவும் உங்கள் பண பிரச்சினைகள் உடனே நீங்கும்...
28/04/2026

இந்த சுவாமி படத்தை கட்டாயம் share செய்யவும் உங்கள் பண பிரச்சினைகள் உடனே நீங்கும்...

28/04/2026

கடவுள்...

*_இல்லாத விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு இருக்கும் விஷயங்களுக்காக நன்றி சொல்லிப்பாருங்கள்‌._*  நீங்கள் நினைப...
21/04/2026

*_இல்லாத விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு இருக்கும் விஷயங்களுக்காக நன்றி சொல்லிப்பாருங்கள்‌._*

நீங்கள் நினைப்பதை விட உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்...!!!

பக்குவப்பட்ட நிலத்தில் தூவபட்ட விதைகள்தான் நல்ல விளைச்சளைத் தரும் அதுபோல் பக்குவபட்ட மனதை கொண்டவர் வாழ்வில் தான் நல்ல வெளிச்சமும் வரும்...!!!

நிதானம் என்னும் ஆயுதத்தை பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிப்பார்கள்
நிதானமே நம் வாழ்வின் பிரதானம்...!!!

உங்கள்மீது கல்லெறி பவர்களுக்கெல்லாம் பதிலுக்கு நீங்கள் கல்லெறிந்து கொண்டிருந்தால்
உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது...!!!

புகழ்வதைக் காட்டிலும் ஊக்கப்படுத்துவது சிறந்தது
வாழ்வதைக் காட்டிலும் வாழ வைப்பது சிறந்தது
இதை மனதில் வைத்து வாழ்ந்தால் வாழ்க்கையே சிறந்தது...!!!

சினம்
கவலை
பேராசை
இம்மூன்றும் வாழ்க்கைக்கு நன்மைதரும் வழிகளை அடைத்து விடுகின்றது...!!!

மனிதர்கள் முன்பாக நல்ல பெயர் வாங்குவதை விட மனச்சாட்சி முன்பாக நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள் நல்ல விஷயம் நடக்கும்...!!!

பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள்
நிம்மதியை பக்கத்தில் வைத்துப் பாருங்கள்
அற்புதமான வாழ்வு வரும் அனுபவியுங்கள்...!!!

உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்
விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும்...!!!

நாம் எதிர்பார்த்து காத்திருந்தால் எதுவும் நடக்காது
நாம் எதிர்பாராத நேரத்தில் அது நடக்கும்
அதுதான் இறைவனின் செயல்...!!!

இறைவனையே நம்புங்கள்
அவர் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்ததைவிட மேலானவற்றையும் தந்து உங்களுக்கு மகிழ்விப்பார்...

சித்திரை கிருத்திகை மந்திரம்நாளை 19/04/2026 சித்திரை கிருத்திகை***************************************************கிருதத...
18/04/2026

சித்திரை கிருத்திகை மந்திரம்
நாளை 19/04/2026 சித்திரை கிருத்திகை
***************************************************
கிருததிகையில் உள்ளம் உருகி நம்பிக்கையோடு முருகனை வழிபாடு செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி மட்டும்தான் இருக்கும். இது நம்மில் எல்லோருக்கும் தெரியும்.

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து சித்திரை மாதத்தின் கிருத்திகை திதி வந்திருக்கிறது. முருகப்பெருமான் உருவமாக இந்த பூலோகத்தில் அவதரித்த தினம் சித்திரை கிருத்திகை என்று நம்பப்படுகிறது.

தை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த, மகத்துவம் நிறைந்த கிருத்திகை என்று நம்பப்படுகிறதோ, அதேபோலத்தான் சித்திரை கிருத்திகையிலும் முருகனை வழிபாடு செய்ய தவறவிடக்கூடாது.

குடும்ப கஷ்டம் தீர, நோய்நொடி தீர, சீக்கிரம் திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற, நல்ல வேலை கிடைக்க, வாழ்வில் மன நிம்மதியை அடைய, இப்படி பல விதமான நன்மைகளைக்காகவும் இந்த கிருத்திகை நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யலாம்.

அந்த வகையில் நம்பிக்கையோடு இந்த சித்திரை கிருத்திகை நாளில் சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தையும், இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இது ஒரு அரிய மந்திரம் பெரும்பாலும் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மந்திரத்தை படிக்க துவங்கி விட்டால், வாழ்க்கையில் நீங்கள் வளமாக வாழலாம்.

சித்திரை கிருத்திகை மந்திரம்
நாளைய தினம் 19-04-2026 சித்திரை கிருத்திகை அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள்.

“அரோகரா” முருகா, என்னுடைய இன்றைய கிருத்திகை தின வழிபாட்டில் எந்த தடையும் வந்து விடக்கூடாது. நீதான் பக்கத்துணையாக இருக்க வேண்டும் என்று முதலில் நீராடி விட்டு வந்து, நெற்றியில் திருநீறு பூசி “சரவணபவ” மந்திரத்தை சொல்லி விடுங்கள்.

பிறகு உங்களுடைய வீட்டில் மயில் இறகு இருந்தால் ஒரு மயிலிறகை கையில் வைத்துக் கொள்ளுங்கள். மயிலிறகு இல்லை என்றால் நாளை முருகன் கோவிலுக்கு சென்று வெறும் 10 ரூபாய் கொடுத்து ஒரு மயிலிறகை வாங்கி வந்து, முருகர் கையில் வீட்டில் கொடுத்து விடுங்கள். உங்களுக்கு அது பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கையில் மயிலிறகை வைத்துக் கொண்டு அதிசக்தி வாய்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை முடிந்தால், இன்று அதிகாலை வேலையிலேயே 1008 முறை சொல்லலாம். உங்களுடைய இந்த பராபர வருடம் முடியும் வரை உங்கள் வாழ்க்கையில் தோல்வி என்பதே வராது. ஒரு வருடத்திற்கு வெற்றியை கொடுக்கக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. தோல்வி உங்களை நெருங்க கூட முடியாது. வெற்றி மேல் வெற்றி வாகை சூட இந்த ஒரு வரி மந்திரம் போதும்.

1008 முறை உச்சரிக்க முடியாது, எங்களுக்கு நேரமில்லை என்பவர்கள் 108 முறை உச்சரிக்கலாம்.

முருகன் சன்னிதானத்தில் அமர்ந்து பத்து நிமிடம், பதினைந்து நிமிடம் கண்களை மூடி இந்த மந்திரத்தை சொல்ல, இந்த மந்திரம் உங்களுக்கு சீத்திரம் சித்தி ஆகிவிடும். பிறகு இந்த மந்திரத்தை சொல்லும்போதெல்லாம் வெற்றி உங்கள் அருகில் நெருங்கி நெருங்கி வர துவங்கும். பிறகு பணம் காசு சொத்து சுகம் எல்லாம் உங்களை நிரம்ப துவங்கிவிடும். சரி முருகனின் சக்தி வாய்ந்த அந்த மந்திரம் என்ன.

வெற்றி தரும் முருகன் மந்திரம்

"ௐ சரவணபவ இம் வம் ஆ

சரவணபவ மந்திரத்திற்கு ஈடு இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது. அதோடு இந்த மந்திரத்தையும் சேர்த்து உச்சரிக்கும் போது, அபரிவிதமான சில அற்புதமான பலன்களை நிச்சயம் உங்களால் உணர முடியும்.

புதுசாக நாம் எதுவும் சொல்லவில்லை. அந்த காலத்தில் சித்தர்களும் ஞானிகளும் சொல்லி வைத்திருந்த மறைக்கப்பட்டு இருந்த ஒரு சில மந்திரங்கள் தான் இவை.

சித்திரை கிருத்திகை தின வழாபாட்டிற்கென இந்த மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய கிருத்திகை சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

முருகா சரணம் ஸ்கந்தா சரணம்...

'அக்ஷ்சய திருதியை :நிறைந்த குழந்தை செல்வங்களுடன், கடும் வறுமையில் போராடிக் கொண்டிருக்கிறார், 'குசேலர்'.                 ...
18/04/2026

'அக்ஷ்சய திருதியை :

நிறைந்த குழந்தை செல்வங்களுடன், கடும் வறுமையில் போராடிக் கொண்டிருக்கிறார், 'குசேலர்'.

இந்த வறுமை நீங்க, ஒரு முறையாவது 'துவாரகை' சென்று 'கிருஷ்ண பகவானை' நேரில் தரிசிக்க வற்புறுத்திய தனது துணைவியின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்று, 'கிருஷ்ண' தரிசனத்திற்கு கிளம்பிவிட்டார், குசேலர்.

மனதில் நிறைந்த அன்பு... பக்தி... தனது மேல் துண்டில் முடிந்து வைத்திருக்கும், துணைவியார் கொடுத்த, வெல்லம் கலந்த அவல் ... இவைதான் அவரின், 'குருகுல' நண்பன் 'கிருஷ்ணனுக்கு' அவர் கொண்டு சென்ற, தரிசன சமர்ப்பணம்.

இவை அணைத்தையும் நடத்தும் 'மாயக் கண்ணன்', 'துவாரகை மாளிகை' வாசல் வந்து, 'பாமா, ருக்மணி சமேதராகக்' காட்சி கொடுக்கிறார், குசேலருக்கு.

அவரை ஆரத்தழுவி வரவேற்று, ஆசனத்தில் அமரச் செய்து, நெடுந்தூர நடைக் களைப்பு நீங்க, பாதம் கழுவி, அறுசுவை உணவு படைத்து, உறக்கம் கொள்ளும் ஆத்ம நண்பனுக்கு, மெதுவாய் விசிறி வீசி தூங்க வைக்கிறான் 'கண்ணன்'.

நண்பன் கிளம்புவதற்குத் தயாரான போது, 'வீட்டில் 'அண்ணியார்' எனக்கு ஏதாவது கொடுத்து அனுப்பினார்களா...?' என்று, குசேலருக்கு ஞாபகப் படுத்தி, அந்த அவல் முடிச்சியிலிருந்து, ஆவலுடன் ஒரு கைப்பிடி அவலை எடுத்து உண்கிறான் 'கிருஷ்ணன்'
'கிருஷ்ண தரிசனத்தில்' அணைத்தும் மறந்து போன 'குசேலர்', நிறைந்த மனதுடன், வீடு திரும்பும் போதுதான், தாம் எதற்காக இந்த தரிசனத்தை மேற்கொண்டோம்...? என்ற நினைவலையில் தவித்துப் போனார்.

ஆனால், 'கிருஷ்ண பகவான் ' அவல் முடிச்சியிலிருந்து, ஒரு கைப்பிடி அவலை ஆவலுடன் விழுங்கிய க்ஷணமே ... 'குசேலரது' வீடு, 'குபேரனது' வீடாகியது.

இந்த மகிமையை 'குசேலர்' வீடு திரும்பிய பின்னர்தான் அறிந்தார் ... ஓடிச் சென்று பூஜா அறையில் 'குழலூதும் கண்ணனாக' நின்று, சேவை சாதிக்கும், கிருஷ்ண பகவானின் பாதங்களில், சிரசை வைத்து, கண்ணீர்மல்க துதித்து அழுதார்.

இந்த அற்புதம் நிகழ்ந்த, வைகாசி மாதத்து, வளர்பிறை, திருதியை, நன்னாளே 'அக்ஷ்சய திருதியை' என்னும் பக்தித் திருநாள்......

புதிய தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது, எதிர்பார்ப்புடன் முன்னேறுவோம், மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோம்...
13/04/2026

புதிய தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது, எதிர்பார்ப்புடன் முன்னேறுவோம், மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோம்...

யாமிருக்க பயமேன்...நஞ்சுபட்டு விஷமேறி மயங்கு மாப்போல்நடுநடுங்கி கிடுகி டென்று பயந்து நாங்கள்தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் தண...
08/04/2026

யாமிருக்க பயமேன்...நஞ்சுபட்டு விஷமேறி மயங்கு மாப்போல்
நடுநடுங்கி கிடுகி டென்று பயந்து நாங்கள்
தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் தணிகை வாசா
சற்குருவே பிராணபயந் தீரு மையா
பஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையை வாங்கி
பரிகரித்து உன்னிருதாள் பதமே தந்து
வஞ்சனைகள் செய்யாமல் பழநி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே🙏🙏🙏

Address

Sirkali
609110

Telephone

9894930158

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALL Friends Like ME posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ALL Friends Like ME:

Share

Category