01/09/2026
*WE THE LEADERS இயக்கத்தின் சார்பில் சமூக நலன் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு*
*போதைப்பொருள் தடுப்பு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு* குறித்த விழிப்புணர்வு நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டம், *பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், திருவட்டார் பேருந்து நிலையத்தில்*, 𝐖𝐄 𝐓𝐇𝐄 𝐋𝐄𝐀𝐃𝐄𝐑𝐒 𝐅𝐎𝐔𝐍𝐃𝐀𝐓𝐈𝐎𝐍 சார்பில்,
*“போதைப்பொருள் இல்லாத தமிழகம் – தூய்மையான மற்றும் பசுமையான தமிழகம்”* என்ற நோக்கத்துடன், *போதைப்பொருள் தடுப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள்* பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு (*30-08-2026*) அன்று நடைபெற்றது.
*WE THE LEADERS இயக்கத்தின் தலைமை மக்கள் சேவகர், பசுமை தலைமுறையின் வழிகாட்டி & தமிழக இளம் தலைமுறையின் எதிர்கால வழிகாட்டி, மானமிகு கு.அண்ணாமலை* அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
*கன்னியாகுமரி மாவட்ட WE THE LEADERS இயக்கத்தின் மக்கள் சேவகர் E.S.சகாயம்* அவர்களின் தலைமையிலும்,
*திருவட்டார் ஒன்றிய WE THE LEADERS இயக்கத்தின் சேவகர்கள் தேவசிங், அர்பின், சுரேஷ், அஜித், லாரன்ஸ், ஜெஸ்டின் மற்றும் கண்ணன்* ஆகியோர்கள் தலைமையிலும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் *பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருளின் தீமைகள், போதைப்பழக்கத்தால் ஏற்படும் சமூக பாதிப்புகள், சுற்றுப்புறத் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு* ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் *துவரங்காடு ராஜேஷ், கடுக்கரை செந்தில்* உள்ளிட்ட 25-ற்கும் மேற்பட்ட WTL இயக்கத்தின் சேவகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
*“போதை இல்லா தமிழகம் – தூய்மையான தமிழகம் – பசுமையான தமிழகம்” என்ற இலக்கை நோக்கி, இளைஞர்களை போதைப்பொருளில் இருந்து பாதுகாப்பதோடு, நமது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவோம்* என உறுதியேற்கப்பட்டது.
*போதையை ஒழிப்போம்* *சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்*
*இளைஞர்களை காப்போம்!*
*வளமான தமிழகத்தை உருவாக்குவோம்!*
#போதைஇல்லாததமிழகம்
#சுற்றுப்புறசூழல்
#சுற்றுச்சூழல்பாதுகாப்பு
#போதைக்குஎதிராக
#இளைஞர்களை_காப்போம்