TVK Eriyur HQ - It Wing

TVK Eriyur HQ - It Wing தமிழக வெற்றிக் கழகம்
Eriyur HQ – IT Wing
💻 Digital Media • Information • Communication
🤝 Serving the Movement • Connecting the People

Minister Vignesh with his Family Met Honorable CM Vijay
29/08/2026

Minister Vignesh with his Family Met Honorable CM Vijay

பிரச்சாரம் டைம் ல use பண்ண ஒரு பழைய வெள்ளை சட்டை, pant uh...ஒரு 1500 ரூபாக்கு ஒரு செருப்பு.. இவர் தான் தமிழ் நாட்டோட முத...
29/08/2026

பிரச்சாரம் டைம் ல use பண்ண ஒரு பழைய வெள்ளை சட்டை, pant uh...
ஒரு 1500 ரூபாக்கு ஒரு செருப்பு..

இவர் தான் தமிழ் நாட்டோட முதல்வர்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க..

மக்கள் பணத்துல இருந்து ஒரு ரூபா கூட எடுக்கலங்குறதுக்கு இந்த போட்டோவே சாட்சி..

எளிமையின் சிகரம்!🔥

அன்புடைய கழகத் தோழர்களுக்கு வணக்கம்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் 100 நாள் சாதனை விளக்கக்...
28/08/2026

அன்புடைய கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் பென்னாகரம் தொகுதியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டனி கட்சி உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்காக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரின் பங்களிப்பும் அவசியமாகும்.

இப்படிக்கு,
திரு. எம். உதயகுமார்
கழக செயலாளர்,
ஏரியூர் வடக்கு ஒன்றியம்

“100 நாள் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வோம்…
நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்வோம்!”

28/08/2026
பதவி உயர்ந்தாலும், பணிவு உயர்ந்தே இருக்க வேண்டும். ❤️சிறை ஆய்வுக்குச் சென்ற முதல்வர்  #விஜய், அதிகாரிகள் அமரும் நாற்காலி...
28/08/2026

பதவி உயர்ந்தாலும், பணிவு உயர்ந்தே இருக்க வேண்டும். ❤️

சிறை ஆய்வுக்குச் சென்ற முதல்வர் #விஜய், அதிகாரிகள் அமரும் நாற்காலியைத் தவிர்த்து, பார்வையாளர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார்.

அதிகாரம் காட்டாமல், தலைமை காட்டுகிறார். மீண்டும் மீண்டும் ‼️

மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் 🙏

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீர்வளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் – சட்டப்பேரவையில் மா...
28/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீர்வளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் – சட்டப்பேரவையில் மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் விளக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் நீர்வளங்களை பாதுகாத்து, கடல்நீர் உட்புகுதலைத் தடுத்து, விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், ஆறுகளை புனரமைத்து நீர்வளத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, வெள்ளாற்றில் ரூ.194 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, நொய்யல் ஆற்றை புனரமைக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் திட்டம் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கடைமடையில் ரூ.773 கோடி மதிப்பீட்டில் Tail End Wall அமைக்கும் திட்டம் குறித்து விளக்கினார்.

வெள்ளாற்றில் ரூ.194 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை

மாண்புமிகு சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி அவர்கள், கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீத்தாம்பாளையம் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

கடல் நீர் வெள்ளாற்றின் வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு உட்புகுவதால், சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்புநீராக மாறி, விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக நில எடுப்புப் பணிக்கு ரூ.44.39 கோடி உட்பட மொத்தம் ரூ.194 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, துறையின் பரிசீலனையில் உள்ளது என மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார்.

நொய்யல் ஆற்றை புனரமைக்க ரூ.5 கோடி திட்டம்

மாண்புமிகு திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. பாலமுருகன் அவர்கள் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நொய்யல் ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுநீர் கலப்பதை கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொள்ளிடம் ஆற்றின் கடைமடையில் ரூ.773 கோடி மதிப்பீட்டில் Tail End Wall

மாண்புமிகு சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி அவர்கள், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுவதால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் Tail End Wall அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் சிதம்பரம் மற்றும் சீர்காழி சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இத்திட்டத்திற்காக ரூ.773 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது துறை மேற்கொண்ட மாதிரி ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் நீர்வளங்களை பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, எதிர்கால தலைமுறைகளுக்கான நீர்வளப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீர்வளத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு
28/08/2026

சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு

 #பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்புதிய  #அறிவிப்புகள்
27/08/2026

#பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்
புதிய #அறிவிப்புகள்

9%… இதை சாதாரண எண்ணாக பார்க்க முடியாது! 🔥பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை.தேசிய அரசியலில் இன்னும் கால் பதிக்கவில்ல...
27/08/2026

9%… இதை சாதாரண எண்ணாக பார்க்க முடியாது! 🔥

பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை.
தேசிய அரசியலில் இன்னும் கால் பதிக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சி ஆரம்பித்து 100நாள் தான்.

ஆனால், “Next PM?” என்ற கேள்விக்கு ஏற்கனவே 9% பேர் முதலமைச்சர் விஜய்யை தேர்வு செய்திருக்கிறார்கள்!

மோடி 49%… ராகுல் 27%…
அவர்களுக்கு பல ஆண்டுகால தேசிய அரசியல் அனுபவம் இருக்கிறது.

ஆனால் முதலமைச்சர் விஜய் - 9%!

இன்னும் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை…
தேசிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை…
இந்திய அரசியலில் தனது முழு சக்தியையும் இறக்கவே இல்லை…

இப்போதே 9% என்றால், நாளை பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் எங்கே போய் நிற்கும் இந்த எண்ணிக்கை?

அண்ணன் விஜய்யின் அரசியல் பயணம் இன்னும் தொடக்கத்தில்தான் இருக்கிறது.
ஆனால் தேசிய அரசியல் ஏற்கனவே அவரை கணக்கில் எடுத்துவிட்டது!
TVK Vijay

Address

Tamilnadu Police Colony

Alerts

Be the first to know and let us send you an email when TVK Eriyur HQ - It Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share