06/06/2026
"6ம் ஆண்டு ஓவிய போட்டி"
"6th Year Drawing Competition"
தாய்மை அறக்கட்டளை சார்பாக "உலக புகையிலை ஒழிப்பு தினம்(மே 31)" மற்றும் "உலக சுற்றுச்சூழல் தினம்"(ஜூன் 5) ஆகியவற்றை முன்னிட்டு மே 24/5/2026 அன்று கோவை தியாகி NG ராமசாமி நினைவு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் 1 ம் வகுப்பு முதல் 12m🙏🏻வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி நடத்த வேண்டும் என முடிவு செய்தவுடன், அதற்கான முன் ஆயுத்த பணிகளை ஒரு வாரம் முன்னதாகவே நிகழ்விற்கு வேண்டியதை பட்டியலிட்டு செயல்படுத்த துவங்கினோம்.
ஓரு மாதம் முன்பாகவே மாணவர்களும் பெற்றோர்களும் அறக்கட்டளை எண்ணில் அழைத்து போட்டி குறித்து விசாரிக்க துவங்கி விட்டார்கள்.
ஓவியப்போட்டிக்கு வரும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, பதிவு செய்ய தனித்தனி பிரிவுகள், அவர்களை வரவேற்க சுவையான பச்சை காய்கறி சூப்,ரம்மியமான சூழல் என அனைத்தும் ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஓவிய போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக
திருவள்ளுவர் பேரவை திரு ஞானபிரகாசம் அவர்கள், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அரிமா அன்பு அவர்கள்(Royal Care Hospital),
திருமதி M. சரண்யா தேவி அவர்கள் (District To***co control Cell), திரு முரளிகிருஷ்ணன் (District To***co control Cell), MindCare திருமதி பொன்மொழி(Psychological Councellor), Mindcare திருமதி எழில் (Psychological Councellor), திரு செல்வராஜ் (பசுமை பறவைகள்),திரு மருத்தாச்சலம் (சமூக ஆர்வலர்),திரு அங்குராஜு அவர்கள் (Sastha Constro Chemicals)(தாய்மை அறக்கட்டளை கெளரவ அறங்காவலர்), திரு ஈஸ்வரமூர்த்தி(தாய்மை அறக்கட்டளை கௌரவ ஆலோசகர்),
திரு மகேஸ்வரன்(தாய்மை அறக்கட்டளை கௌரவ ஆலோசகர்) மற்றும் திரு மதிவாணன் அவர்கள்(அரசு வக்கீல்)மற்றும் தாய்மை அறக்கட்டளை குழுவினரும் இருந்தனர்.
ஓவிய போட்டியின் நடுவர்களாக முகமலர்ச்சியோடு வருகை புரிந்த Dr ஐஸ்வர்யா அவர்களும், திரு விஸ்வநாதன் அவர்களும், திரு தெய்வீகன் அவர்களும் மாணவர்களுக்கு ஓவியங்கள் எப்படி வரைய வேண்டும்.? எப்படி தலைப்பை புரிந்து கொண்டு வரைவது..? ஓவியத்தின் அடிப்படை கூறுகள் பற்றியெல்லாம் எடுத்து கூறினார்கள்.
ஓவிய போட்டியின் இடையே பெற்றோர்களுக்கு "Parenting Tips" "How to Handle Adolescent Childrens..?""Avoiding mobile usage and Making healthy usage of Mobiles " குறித்து கேள்வி பதில் நிகழ்வாக மன நல ஆலோசகர்கள் திருமதி எழில் மற்றும் பொன்மொழி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
Royal care சிறப்பு புற்றுநோய் மருத்துவர் திரு அன்பு அவர்கள் புகையிலை மூலம் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள்,உடல் சார்ந்த பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே எடுத்து கூறினார்.
மாவட்ட புகையிலை ஒழிப்பு பிரிவு அதிகாரி Dr சரண்யா தேவி அவர்கள் பள்ளிகளில் எப்படி புகையிலை நுழைகிறது..? அதை எப்படி அடையாளம் காண்பது... தவிர்ப்பது..? புகையிலை வைத்திருந்தால், பகிர்ந்தால் என்ன தண்டனை என்று எளிய தமிழில் விளக்கினார்.
அதனை தொடர்ந்து திரு முரளிகிருஷ்ணன் அவர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும் ஒருசேர "புகையிலை பயன்படுத்த மாட்டோம்" என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
பசுமை பறவைகள் திரு செல்வராஜ் அவர்கள் மரக்கன்றுகள் எவ்வாறு... எத்தனை நாளில் நட வேண்டும்.. குழி எந்த அளவில் எடுக்க வேண்டும் என்று சுருக்கமாக கொங்கு தமிழில் சிறுவர்களுக்கு எடுத்து கூறினார்.
அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பரிசிலும் 27 முதல் 14 வரை ஆச்சர்யமூட்டும் பரிசுகள் பொதிந்து வைக்கப்பட்டு இருந்தது.பரிசுகள் கட்டாயம் அவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசும், Glass Source Drawing ஒன்றும், சான்றிதலும் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களும் மாணவர்களும் புகையிலை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து பயனுற வேண்டும் இந்நிகழ்வை தாய்மை அறக்கட்டளை முன்னெடுக்கிறது.
இவ்வருடமும் 106 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு அடைந்து இருப்பார்கள் என்ற எங்களின் அகமகிழ்வை சொல்லில் விளக்க முடியாது.
நன்றி
***coday
#தாய்மைஅறக்கட்டளை
🙏🏻🙏🏻🙏🏻