SIO Tanjore

SIO Tanjore Youth organisation and social activities

17/05/2026

While others were running from the rain…
SIO Thanjavur stood strong in it for the future of students.

No comfort.
No fear.
No backing down.

With soaked clothes and fearless voices, we raised one demand loud and clear:

Scrap NEET. Save students.

Against injustice, corruption, and the destruction of young dreams,
SIO Thanjavur took the streets of Kumbakonam even in heavy rain — because student voices deserve to be heard.

This is not just a protest.
This is resistance. 🔥





🌧️ கொட்டும் மழையிலும்…கல்வி உரிமைக்கான எங்கள் குரல் நின்றுவிடவில்லை!NEET எனும் அநீதித் தேர்வையும், தொடரும் தேர்வு முறைகே...
16/05/2026

🌧️ கொட்டும் மழையிலும்…
கல்வி உரிமைக்கான எங்கள் குரல் நின்றுவிடவில்லை!

NEET எனும் அநீதித் தேர்வையும், தொடரும் தேர்வு முறைகேடுகளையும் கண்டித்து,
SIO தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“கல்வி உரிமை வேண்டும்!”
“நீட் வேண்டாம்!” என்ற முழக்கங்கள் மழையையும் மீறி ஒலித்தது.

இது ஒரு போராட்டம் மட்டும் அல்ல…
மாணவர்களின் எதிர்காலத்திற்காக எழுந்த குரல். 🔥





அல்ஹம்துலில்லாஹ்…SIO INDIA தேசியத் தலைவர் சகோதரர் அப்துல் ஹபீஸ் அவர்கள் பங்கேற்ற ஊழியர்கள் சந்திப்பு SIO தஞ்சாவூர் மாவட்...
16/05/2026

அல்ஹம்துலில்லாஹ்…

SIO INDIA தேசியத் தலைவர் சகோதரர் அப்துல் ஹபீஸ் அவர்கள் பங்கேற்ற ஊழியர்கள் சந்திப்பு SIO தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி கிர்அத் மூலம் துவங்கப்பட்டு, SIO தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சகோதரர் அஹமது அஸ்லம் சலாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து மண்டலத் தலைவர் சகோதரர் யஹ்யா பாஷா அவர்கள் தலைமை உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊழியர்களுடனான கலந்துரையாடல் அமர்வில், இயக்கப் பணி, மாணவர் சமுதாயத்தின் சவால்கள், தஃவா பொறுப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பயனுள்ள ஆலோசனைகள் இடம்பெற்றது.

பின்னர் SIO INDIA தேசியத் தலைவர் சகோதரர் அப்துல் ஹபீஸ் அவர்கள் சிறப்புரையாற்றி, இளைஞர்கள் இஸ்லாமிய அடையாளத்துடனும் சமூக பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வு ஊழியர்களுக்கு ஆன்மீக உற்சாகத்தையும், இயக்கப் பொறுப்புணர்வையும் அதிகரித்த ஒரு பயனுள்ள சந்திப்பாக அமைந்தது.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே 🤍

கல்வி உரிமையை காக்க…மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க…தெருக்களில் குரல் கொடுக்க நேரம் வந்துவிட்டது!நீட் தேர்வு என்பது த...
16/05/2026

கல்வி உரிமையை காக்க…
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க…
தெருக்களில் குரல் கொடுக்க நேரம் வந்துவிட்டது!

நீட் தேர்வு என்பது திறமையை மதிப்பிடும் தேர்வு அல்ல…
சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை மாணவர்களின் கனவுகளை பறிக்கும் அநீதியான அமைப்பு.

முறைகேடுகள், ஊழல்கள், மன அழுத்தங்கள், உயிரிழப்புகள்…
இவை அனைத்திற்கும் காரணமான NEET தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

📢 கல்வி உரிமை வேண்டும்!
📢 நீட் வேண்டாம்!
📢 மாணவர்களின் உயிருடன் விளையாடாதே!

இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க,
நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் இணைந்திட வாருங்கள்.

🗓 16/05/2026
🕟 மாலை 4:30 மணி
📍 பழைய மீன் மார்கெட் எதிரில், கும்பகோணம்

மௌனம் இனி தீர்வு அல்ல.
இன்று பேசவில்லை என்றால், நாளை பேச வாய்ப்பே இருக்காது.






stopneet
siothanjavur

SIO Thanjavur warmly welcomesBr. Abdul HafeezNational President, SIO INDIA,to Thanjavur.His visit is a moment of joy and...
10/05/2026

SIO Thanjavur warmly welcomes
Br. Abdul Hafeez
National President, SIO INDIA,
to Thanjavur.

His visit is a moment of joy and inspiration for the student and youth community. We are honoured to receive and host a leader dedicated to empowering students and building a value-based society.

📍 Thanjavur
📅 11th May 2026

We extend our heartfelt greetings and a warm welcome.

outhleadership

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ:அல்ஹம்துலில்லாஹ்…19-04-2026 அன்று கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் மேல்நில...
21/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ:

அல்ஹம்துலில்லாஹ்…

19-04-2026 அன்று கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
Informix’26 – Career Guidance Program சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி சகோ. சுஹைல் அஹமது அவர்கள் கிர்அத் ஓதித் துவக்கி வைத்தார்.

பின்னர் SIO தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சகோ. அஹமது அஸ்லம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் ஷபிகுர் ரஹ்மான் அவர்களும், திருநாகேஸ்வரம் யூனிட் பொறுப்பாளர் ஜனாப் ஹாஹா மாலிக் அவர்களும் துவக்க உரை வழங்கினார்கள்.

சீமாட்டி சில்க்ஸ் உரிமையாளர் ஜனாப் S.M. பஷீர் அஹமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து கோவை ஹிதாயா கம்யூனிட்டி காலேஜ் முதல்வர் மு. சலீம் மொய்தீன் அவர்கள் “Why do we need to study?” (Philosophy of Education) என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Sio ZAC உறுப்பினர் சகோ. அஹமது தஸ்லீம் அவர்கள் Psychometric Test நடத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இணை அமர்வுகளில்,
Engineering துறையில் வாய்ப்புகள் குறித்து ZAC உறுப்பினர் சகோ. முஹம்மது அஸருதீன்,

Medicine மற்றும் Allied துறைகள் குறித்து GIO ZAC உறுப்பினர் திருமதி. ஜுவைரியா அப்பாஸ்,

Science துறைகள் குறித்து முதல்வர் மு. சலீம் மொய்தீன்,

Arts & Humanities துறைகள் குறித்து சகோ. அப்துல் ஹமீத், சகோ. அப்துல் ஜலீல், சகோ. இஜாஸ் அஹமது மற்றும் சகோ. முஹம்மது ரய்யான் ஆகியோர் வழிகாட்டுதல்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளித்த அல் அமீன் பள்ளி நிர்வாகத்திற்கும்,
Principal Dr. Maria Sophia அவர்களுக்கும்,
Correspondent Janab Er. Mohamed Rafi அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக.

இந்த நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்காலத்தை தெளிவுபடுத்திய ஒரு சிறந்த முயற்சியாக அமைந்தது. அல்லாஹ் இந்த முயற்சியை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் இத்தகைய நன்மையான செயல்களுக்கு தௌஃபீக் அருள்வானாக.

ஆமீன்.


'26

அஸ்ஸலாமு அலைக்கும்✨இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) தஞ்சை மாவட்டம் சார்பாக, நேற்று (14/03/26) இரவு பிறை 25 அன்று குர...
16/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்✨

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) தஞ்சை மாவட்டம் சார்பாக, நேற்று (14/03/26) இரவு பிறை 25 அன்று குர்ஆன் கூட்டாய்வு நிகழ்ந்தது.

இந்நிகழ்ச்சியை வழிநடத்துபவராக மௌலவி முஹம்மது நாசர் புகாரி sio முன்னால் தமிழ் மாநில தலைவர் அவர்கள் வழிநடத்தி சென்றார்கள், அல்-கஸஸ் எனும் சூரா கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அதனை பற்றிய முழுமையான புரிதல் விளங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 25 நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர், மேலும் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக கியாமுல் லைல் தொழுகையும் நிகழ்த்தப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...


அல்ஹம்துலில்லாஹ்…இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக 22 பிப்ரவரி 2026 அன்று சகோதர சமூக இளைஞர்களுக்கான மாபெரும் ...
23/02/2026

அல்ஹம்துலில்லாஹ்…

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக 22 பிப்ரவரி 2026 அன்று சகோதர சமூக இளைஞர்களுக்கான மாபெரும் இப்தார் & இஸ்லாத்தை தெரிந்து கொள்வோம் என்ற மையக்கருத்தில் விசிட் மை மஸ்ஜித் நிகழ்ச்சி நைல் நகர் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

📖 காட்சி அரங்குகள் (Exhibition) மூலம் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றி சகோதர சமுதாய நண்பர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.

🤝 நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர் ஜெமில் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்தார், sio மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோதரர் தஸ்லீம் அவர்கள் வழி நடத்தினார், பிறகு sio தஞ்சை மாவட்ட தலைவர் சகோதரர் அஹமது அஸ்லம் ஸலாமி அவர்கள் துவக்கு உரையாற்றினார், பிறகு ஜமாதே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் சகோதரர் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அதைத் தொடர்ந்து ஜமாதே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளர் சகோதரர் முஹம்மது யூனுஸ் அவர்கள் இஸ்லாத்தை அறிவோம் என்ற மையக்கருத்தில் சிறப்புரை ஆற்றினார் அதைத் தொடர்ந்து, மாணவர்கள் நேரடியாக கேள்விகள் எழுப்பி, திறந்த உரையாடலில் பங்கேற்றனர். இஸ்லாம் குறித்தான சந்தேகங்களை கலைந்து கொண்டனர், இறுதியாக கும்பகோணம் பொறுப்பாளர் சகோதரர் ரய்யான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

🕌 இப்தார் மற்றும் தொழுகையை பார்ப்பதன் மூலம் முஸ்லிம்களின் வாழ்வியலை நேரில் கண்டு அறிந்தனர்.

👥 சுமார் 250+ சகோதர சமூக மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இஸ்லாத்தை அறிந்துகொண்டனர்.
இது ஒர் இப்தார் மட்டும் அல்ல…
இது புரிதலின் ஒரு பாலம்.
இது சகோதரத்துவத்தின் ஒரு சந்திப்பு. 🤍
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...🤲🏻





23/02/2026

அல்ஹம்துலில்லாஹ்…

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக 22 பிப்ரவரி 2026 அன்று சகோதர சமூக இளைஞர்களுக்கான மாபெரும் இப்தார் & இஸ்லாத்தை தெரிந்து கொள்வோம் என்ற மையக்கருத்தில் விசிட் மை மஸ்ஜித் நிகழ்ச்சி நைல் நகர் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

📖 காட்சி அரங்குகள் (Exhibition) மூலம் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றி சகோதர சமுதாய நண்பர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.

🤝 நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர் ஜெமில் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்தார், sio மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோதரர் தஸ்லீம் அவர்கள் வழி நடத்தினார், பிறகு sio தஞ்சை மாவட்ட தலைவர் சகோதரர் அஹமது அஸ்லம் ஸலாமி அவர்கள் துவக்கு உரையாற்றினார், பிறகு ஜமாதே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் சகோதரர் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அதைத் தொடர்ந்து ஜமாதே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளர் சகோதரர் முஹம்மது யூனுஸ் அவர்கள் இஸ்லாத்தை அறிவோம் என்ற மையக்கருத்தில் சிறப்புரை ஆற்றினார் அதைத் தொடர்ந்து, மாணவர்கள் நேரடியாக கேள்விகள் எழுப்பி, திறந்த உரையாடலில் பங்கேற்றனர். இஸ்லாம் குறித்தான சந்தேகங்களை கலைந்து கொண்டனர், இறுதியாக கும்பகோணம் பொறுப்பாளர் சகோதரர் ரய்யான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

🕌 இப்தார் மற்றும் தொழுகையை பார்ப்பதன் மூலம் முஸ்லிம்களின் வாழ்வியலை நேரில் கண்டு அறிந்தனர்.

👥 சுமார் 250+ சகோதர சமூக மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இஸ்லாத்தை அறிந்துகொண்டனர்.
இது ஒர் இப்தார் மட்டும் அல்ல…
இது புரிதலின் ஒரு பாலம்.
இது சகோதரத்துவத்தின் ஒரு சந்திப்பு. 🤍
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...🤲🏻





Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIO Tanjore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SIO Tanjore:

Share