26/08/2026
காத்மாண்டு: திபெத் எல்லைப் பகுதியான நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு பல கிராமங்களையும் திட்டப் பணிக்களங்களையும் நாசமாக்கியுள்ளது; இதில் 28 காவலர்கள் காணாமல் போயுள்ளனர்.
உயிர் மற்றும் உடைமைகளுக்குக் கடும் சேதம் ஏற்படக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ள அதிகாரிகள், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களை உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மலைப்பாங்கான ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள சியாப்ரு பெசி (Syapru Besi) மற்றும் திமுரே (Timure) ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போட்டே கோஷி (Bhote Koshi) ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.