16/02/2021
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) என்ற பெயரில் கிராம மக்களிடையே உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களையெடுக்கும் திருச்சி சரக காவல் துறையினர்!!!
16.02.2021 இன்று திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் *முனைவர்* *Z.ஆனி விஜயா இ.கா.ப* அவர்களின் தலைமையில், ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இனாம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாபேட்டை கிராமப்பகுதியில் VVPO திரு.S. கேசவன்(HC;715) அவர்கள் நியமிக்கப்பட்டார்
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) பணியானது கிராமத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உரிய நேரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இனாம் குளத்தூர் கிராம மக்கள் பேசும் பொழுது திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர், *காவல்துறை உங்கள் நண்பன்* என்பதற்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார் என்றும், அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க கொண்டுவந்த *கேடயம்* திட்டம் பற்றியும், கிராம மக்களுக்கு செய்யும் நன்மைகளைப் பற்றியும், பாராட்டி கூறினார்கள். மேலும் இனாம் குளத்தூர் ராணுவ வீரர் காவல் துறையினர் கொண்டுவரும் திட்டங்கள் பற்றியும் மக்களை பாதுகாக்கும் முறைகள் பற்றியும் புகழ்ந்து பேசினார்.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பேசும் பொழுது இனாம் குளத்தூர் அனைத்து விதமான பிரச்சினைகளையும், தேவைகளையும் VVPO துணையுடனே செயல்படுத்தலாம் என்றும் பொதுமக்கள் எப்பொழுதும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்
*ஒற்றுமையே வலிமை*
இனாம் குளத்தூர் ராணுவ வீரர் பேசியதை கேட்ட திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ராணுவ வீரர்களின் மேல் காவல் துறைக்கு எப்பொழுதுமே நன்மதிப்பு உள்ளது என்றும், ராணுவ வீரர் ஒரு சிலை போல் செயல்படும் நாட்டின் தெய்வங்கள் என்று புகழாரம் சூட்டினார்💐💐💐
காவல்துறையின் பணியானது கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்களையும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் திருச்சி சரக காவல்துறையினர்!!!