23/01/2026
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை (ஜனவரி 23) "பராக்ரம் திவாஸ்" (வீரத் திருநாள்).
சுபாஷ் சந்திர போஸ் (1897-1945) ஒரு இந்திய தேசியவாதி, விடுதலைப் போராட்ட வீரர்; இந்திய தேசிய ராணுவத்தை (INA) உருவாக்கி, “டெல்லிக்கு செல்” என்ற முழக்கத்துடன், ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை விடுவிக்க ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர், 'நேதாஜி' எனப் போற்றப்படுகிறார். இவரது வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது வீரம், தியாகம், போன்ற முழக்கங்கள் மூலம் இளைஞர்களை ஒன்றுதிரட்டியது எனப் போற்றப்படுகிறது.
இந்தியாவுக்கு முழு சுதந்திரம் பெற போர் ஒன்றே வழி என்று நம்பினார்.
அக்டோபர் 21, 1943 அன்று சுதந்திர இந்திய அரசாங்கத்தை பிரகடனப்படுத்தி, தேசியக் கொடியை ஏற்றினார்.
ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இவரது அரசுக்கு ஆதரவு அளித்தன. பர்மா வழியாக இந்தியாவை நோக்கி INA படைகளை நகர்த்தினார். 1945 ஆகஸ்ட் 18-ல் தைவானில் விமான விபத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது மரணம் இன்றுவரை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
ஜெயஹிந்த் முழக்கமிட்ட மாவீரர் நேதாஜி பிறந்தநாள்!