திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

  • Home
  • India
  • Tirupattur
  • திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட  செய்திகள் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை:-பணி நிறைவு பாராட்டு விழா:-   37ஆண்டுகள் 05 மாதங்கள் 23  நாட்கள் என்ற நீண்ட கால அரசுப் பண...
01/08/2026

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை:-

பணி நிறைவு பாராட்டு விழா:-

37ஆண்டுகள் 05 மாதங்கள் 23 நாட்கள் என்ற நீண்ட கால அரசுப் பணியை சிறப்பாக நிறைவு செய்து இன்று 31.07.2026 பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு. ஓம்பிரகாஷ் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு திருப்பத்தூர் மாவட்டம் அவர்கள் தமது பணிக்காலத்தில் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத் திறனுடன் காவல் துறைக்கு ஆற்றியுள்ள மதிப்புமிக்க சேவைகளை மனமார பாராட்டுகிறோம். மேலும், அவர்களின் ஓய்வுக்கால வாழ்க்கை ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்ததாக அமைய அன்புடன் வாழ்த்துகிறோம்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் பொன்னாடை அணிவித்து பணி நிறைவு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

01/08/2026

இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற போது
தனி அறையில் அடைத்து வைத்து மகன்கள் மற்றும் தாய்யை சித்திரைவதை செய்த ரீட்டா குழுவினர் ஒருதலை பட்சமாக செயல்படும் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை அடுத்த அருணாச்சலாநகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் இவர் நையாண்டி நிகழ்ச்சி தொழில் செய்து வருகிறார்.

இவரது தம்பி சந்தோஷ் என்பவர் திருப்பத்தூர் விட்டு வசதி வாரியா பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது ரீட்டா என்பவரின் தூண்டுதலின் பெயரில் ஆனந்தன் சுதாகர், சேட்டு, மணி, ஆகியோரை வைத்து சந்தோஷ் என்பவரை அறையில் அடைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த சந்தோஷின் அண்ணன் நந்தகுமார் அவரது தாயார் விஜயாவை கையை பிடித்து சேலைய இழுத்து இருவரையும் அறையில் உள்ளே தள்ளி அடித்து துன்புறுத்தபட்டனர்.

இதில் நந்தகுமார் என்பவரை ரீட்டா மற்றும் அவரது குழுவினர் பலமாக தாக்கியத்தில் மயக்க நிலையில் உள்ள நந்தகுமாரை சந்தோஷ் அவரது தாய் விஜயா ஆகியோர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் நையாண்டி தொழில் செய்து வரும் நந்தகுமார் இவருக்கு போட்டியாக ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவர் நீயாமான முறையில் நையாண்டி நிகழ்ச்சிகளை குறைந்த விலையில் பேசி வருவதை கண்ட ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவரை மிரட்டும் வகையில் இனிமேல் நீ எங்கேயும் நிகழ்ச்சி பேச கூடாது இல்லனா உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தும் அடித்தும் உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் செய்ய நந்தகுமாரின் தாயார் விஜயா என்பவர் காவல்நிலையத்தில் புகார் செய்த போது காவல்துறைனார் நந்தகுமார் தாயார் விஜயவை தகாத வார்த்தையால் பேசி வெளிய போ என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர். மேலும் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது குறித்து உடனடியாக உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு நந்தகுமார் மற்றும் அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

01/08/2026

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சொக்கலாம்பட்டி ஏரியில் அனுமதி வழங்கிய நிலத்திற்கு மண் எடுத்துச் செல்லாமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடுகளுக்கு மண் ஓட்டியதால் பரபரப்பு மேலும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் பெற்றுக்கொண்டு பட்டப் பகலிலே மண் திருட அனுமதிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

22/07/2026

கணவன் இல்லாத பெண்களை குறிவைத்து பல லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் கைது. சிறைக்கு செல்லும் போது சிரித்தபடி 'டாட்டா' காட்டி...
22/07/2026

கணவன் இல்லாத பெண்களை குறிவைத்து பல லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் கைது. சிறைக்கு செல்லும் போது சிரித்தபடி 'டாட்டா' காட்டியதால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) என்பவர், கணவனை இழந்த மற்றும் தனியாக வசிக்கும் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் கூறுகையில், கமலக்கண்ணன் கடந்த சில ஆண்டுகளாக கணவனை இழந்த பெண்களுடன் நெருங்கிப் பழகி, திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களிடம் இருந்த பணம், நகைகளை பெற்று மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கு முன்பு இதேபோன்ற புகாரில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு தனது நண்பரின் மனைவியுடன் நெருங்கிப் பழகி, வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும், பாஸ்போர்ட் மற்றும் சிங்கப்பூர் வேலைவாய்ப்புக்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறி பல லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், திருப்பத்தூர் தாலுகா போலீசார் கமலக்கண்ணன் மீது மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, கமலக்கண்ணன் செய்தியாளர்களை நோக்கி சிரித்தபடி கை அசைத்து 'டாட்டா' காட்டிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தனியாக வாழும் பெண்களிடம் திருமணம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஆசை வார்த்தைகளை கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

19/07/2026

My One LED Sign

18/07/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

17/07/2026

திருப்பத்தூர் சாலை விபத்து அபாய பகுதிகளை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆய்வு.வாணியம்பாடி, ஜூலை.16- திருப்பத்தூர் - வாண...
17/07/2026

திருப்பத்தூர் சாலை விபத்து அபாய பகுதிகளை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆய்வு.

வாணியம்பாடி, ஜூலை.16- திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகில், ஜோலார்பேட்டை பால்நாங்குப்பம் மற்றும் கோடியூர் உள்ளிட்ட விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்த அதிகாரிகள், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வெள்ளைக் கோடுகள், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள், உயர் மின் கோபுர விளக்குகள், வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் சாலையை அகலப்படுத்தவும் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, ஜோலார்பேட்டை பால்நாங்குப்பம் மற்றும் கோடியூர் பகுதிகளில் சாலையை மறைக்கும் ஆக்கிரமிப்புகள், மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றவும், தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் எச்சரிக்கை வசதிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கவும், சாலையோரத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

12/07/2026

லாவா வியட்நாம் சுற்றுலாவில் தமிழகத்தை சிலர் இருந்துள்ளது.
மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.

இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

இவர்களுக்கு
அஞ்சலி தெரிவிக்கும் வகையில் வரும் திங்கள் கிழமை காலை சரியாக 11:00 மணிக்கு அனைவரும் அவரவர் இருக்கும் இடத்தில் "ஒரு நிமிடம்"
நமது சங்கத்தின் சார்பில் மெளன அஞ்சலி
செலுத்துவோம்.

வருத்தங்கள் உடன்

Address

Chinnamookanur
Tirupattur
635602

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share