திராவிடர் தளம்

திராவிடர் தளம் Dravidar Thalam - Official Page

கல்வி நிறுவனங்கள் - வணிக நிறுவனங்கள் - அரசு இடங்களிலுள்ள ஜாதிப் பெயர்களை அழிக்கும் போர்! - நவம்பர் 26, கோவை.செப்டம்பர் 1...
15/08/2026

கல்வி நிறுவனங்கள் - வணிக நிறுவனங்கள் - அரசு இடங்களிலுள்ள ஜாதிப் பெயர்களை அழிக்கும் போர்! - நவம்பர் 26, கோவை.

செப்டம்பர் 17 முதல் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பரப்புரை.

ஜாதி ஒழிப்பில் அக்கறை கொண்டோர் அனைவரையும் அழைக்கிறோம்!

பெரியாரியலுக்கு எதிராக இந்து மத RSS அமைப்பும் கிறிஸ்தவ மத CHARIS அமைப்பும் இணையும் இடம் TVK!கருக்கலைப்பைத் தடை செய்ய வேண...
10/08/2026

பெரியாரியலுக்கு எதிராக இந்து மத RSS அமைப்பும் கிறிஸ்தவ மத CHARIS அமைப்பும் இணையும் இடம் TVK!

கருக்கலைப்பைத் தடை செய்ய வேண்டும்! - சென்னையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் பங்கேற்ற விழாவில் கிறிஸ்தவ CHARIS அமைப்பு

3 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்!
- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

3 வது குழந்தைக்குச் சலுகைகள் வேண்டும்! - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலாளர் இரவிக்குமார்

3 வது குழந்தை பிறந்தால் ஊக்கத் தொகை - ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளைகளின் ஆட்சியின் அமைச்சர் அருண்ராஜ்.

தோழர் பெரியார் தனது சுயமரியாதை இயக்கக்காலத்தில், இந்துமத ஆதிக்கவாதிகளிடம் அடைந்த எதிர்ப்புகளைப்போலவே, இந்த ரோமன் கத்தோலிக்கர்களின் எதிர்ப்பையும், கடும் நெருக்கடி களையும் சந்தித்தார். தனது குடிஅரசு இதழையே நிறுத்த வேண்டிய அளவுக்குத் துன்பங்களைச் சந்தித்தார்.

“கர்ப்பத்தடை முறையைக் கத்தோலிக்கர் மதத்தின் பேரால் எதிர்ப்பதில் மூன்று முக்கிய காரணங்கள் எடுத்துச்சொல்லி வருகிறார்கள். 1.கடவுளுக்கு விரோதமாம். 2.வேதத்துக்கு விரோதமாம். 3.இயற்கைக்கு விரோதமாம். இந்த மூன்று காரணங் களும் முற்றும் முட்டாள் தனமும், மோசமும் நிறைந்த கற்பனைக் காரணங்கள் என்பதுடன் முன்னுக்குப்பின் முரணான காரியங்கள் என்பதுமாகும் என்பதே நமதபிப்பிராயம். இதைப்பற்றி அடுத்தவாரம் விளக்குவோம்” -தோழர் பெரியார் - குடி அரசு - 05.11.1933

கிறித்தவர்களின் சிந்தனைகளின் விளைவாகத்தான் அயர்லாந்தில் இந்த 2018 வரை கருக்கலைப்புக்குத் தடை இருந்தது. பெரியார், 1930 ஆம் ஆண்டிலிருந்தே கருத்தடைக்கு ஆதரவாகக் ‘கர்ப்பத்தடை’ என்ற பெயரில் தொடர்கட்டுரையை எழுதினார். 1931 லிருந்து கருக்கலைப்புக்கும் ஆதரவாக இருந்தார்.

கருத்தடையை ஆதரித்த போதுகூட பெரியாரின் பார்வை என்பது உலகில் உள்ள வேறு அனைத்துப் பெண்ணியவாதிகளைவிடவும் வேறுபட்டதாக இருந்தது. முழுமை யான பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

“கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன. அதாவது பெண்கள் விடுதலை அடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறகின்றோம்.

மற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும் பிள்ளைகளின் தாஷ்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திரதிசையை உத்தேசித்தும், குடும்பச்சொத்து குலையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும், கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டினர் பலர்கூட ஆதரிக்கின்றார்கள்.

ஆனால் நமது கருத்தோ இவைகள் எதையும் பிரதானமாய்க் கருதியது அல்ல. மற்றெதைக் கருதி யென்றால் முன் சொன்னது போல், பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாய் இருப்பதால் சாதாரணமாய் பெண்கள் பிள்ளை பெறுவது என்பதையே அடியோடு நிறுத்தி விட வேண்டும் என்கிறோம்,
..மது விலக்கு பிரசாரத்தை விட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரசாரத்தை விட, இந்த கர்ப்பத்தடை பிரசாரம் மிகவும் முக்கியமான தென்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் இந்த கர்ப்பத்தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி அதன் மூலம் பிரசாரம் செய்ய பொது ஜனங்களில் சிலராவது இது சமயம் முன் வரவேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகின்றோம். - தோழர் பெரியார் - குடி அரசு - 06.04.1930

“நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டுமெனவும், தேக சக்திக்கும், செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற்காகக் கர்ப்பத்தடைமுறைகளை அவசியம் கையாளவேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக் கின்றது. - தோழர் பெரியார் - குடி அரசு - 12.04.1931

இந்து மத, ஜாதிய, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிரான ஜாதியற்றோர் ஓர் சமுதாயமாக இணைய வேண்டும். நமது அன்றாட வாழ்வில், இயல்பான...
05/08/2026

இந்து மத, ஜாதிய, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிரான ஜாதியற்றோர் ஓர் சமுதாயமாக இணைய வேண்டும்.

நமது அன்றாட வாழ்வில், இயல்பான செயல்களில், பண்பாட்டில் ஜாதியையும், ஆணாதிக்கத்தையும் நிரப்பி வைத்துக் கொண்டு, எங்கோ ஒரு ஊரில் தீண்டாமைக் கொடுமை நடப்பதாக அறிந்து அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதைவிட,

ஜாதி, ஆணாதிக்க ஒழிப்பு என்பவைகளை நமது மூளையிலிருந்து தொடங்க வேண்டும். நமது வீடுகளிலிருந்து தொடங்க வேண்டும். திருமணம், குடும்பம், சொந்தபந்தங்கள், பழக்க வழக்கங்கள் என்பவைகளில் நிறைந்திருக்கும் இந்து மதப் பொதுப்புத்தியை ஒழிப்பதை முதன்மைக் கடமையாக ஏற்க வேண்டும்.

என்ற நோக்கத்தில் திராவிடர் தளம் #திராவிடர்_வாழ்வியல்_விழா-க்களை நடத்தி வருகிறது. கடந்த 16.11.2025-இல் கோவையில் நடத்தினோம். கடந்த ஞாயிறு 02.08.2026-இல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடத்தியிருக்கிறோம்.

திராவிடர் தளம், பெரியார் மய்யம், திராவிடர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் ஒருங்கிணைத்த இவ்விழாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் தோழர் தி.மோகன் அவர்கள் தலைமையேற்று, அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விழாவின் அச்சாணியாக நின்றார்.

திராவிடர் கழகத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் பி.ஆனந்தன், கடந்த 15 நாட்களாக நிகழ்வு சிறப்பாக நடைபெறத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

திராவிடர் தளம் தோழர்கள் பல்லடம் நாராயணமூர்த்தி, வடிவேல், மணிகண்டன், தாமரை, சந்திரன், கார்த்தி, அவிநாசி செந்தில்குமார், பெதப்பம்பட்டி குணசேகரன், SFD தோழர்கள் விமல், கோகுல், சரண், சூர்யா, ஹரி, இரஞ்சித், யாழ்மொழி, ஜி.கல்லுப்பட்டி ஜெயப்பாண்டி
பெருந்துறை மூர்த்தி, பரிமளா, அவிநாசி திவ்யா, இராஜ்குமார் ஆகியோர் முழுமையாகப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

திராவிடர் முன்னணி தோழர்கள் மருதமூர்த்தி, இராஜா, மார்க்சிம் கார்க்கி ஆகியோர் விழாவுக்கான ஃப்ளெக்ஸ், செல்ஃபி ஸ்டேண்ட், அரங்க அமைப்புப் பணிகள் முழுவதையம் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தோழர்கள் இளையகுமார், சரண், யாழினி, சூர்யா ஆகியோர் இணையதளங்களில் விழாவுக்கான விளம்பரங்களைத் தொடர்ச்சியாகத் தயாரித்து வெளியிட்டு வந்தனர்.

விழாவின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பு உறுதிமொழியையும், ஜாதி மறுப்பு உறுதிமொழியையும் தோழர்கள் அனைவரும் ஏற்றனர். மரணசாசனம் அறிவிப்பு அச்சிட்டு வெளியிடப்பட்டது.

அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள் என்ற கள ஆய்வு நூல் 3-ஆம் பதிப்பாக வெளியிடப்பட்டது. பெரியார் மய்யத் தோழர் பழனி அருண் அவர்கள் நூலை வெளியிட, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஒட்டன்சத்திரம் க.சிவா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தலித் முரசு - காட்டாறு இணைந்து "நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்ற தலைப்பில், இந்து மதத்திலிருந்து வெளியேறுவதற்கும், மதமாற்றத்திற்கும் வழிகாட்டும் பெரியாரின் உரைகளைத் தொகுத்து வெளியிட்டது.

அந்நூலின் 2-ஆம் பதிப்பை, திண்டுக்கல் மாவட்ட மேனாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் தோழர் க.ஜெயராஜ் அவர்கள் வெளியிட, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர் பொள்ளாச்சி கா.சு.நாகராசு அவர்களும், மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒட்டன்சத்திரம் தோழர் மதியழகன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

பெரியார் மய்யத் தோழர் பழனி ஜவகர், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் திண்டுக்கல் தோழர் தடா மதி, திராவிடர் முன்னணி பழனி தோழர் சரண், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஞானசேகர், பெரியாரிய உணர்வாளர் ஒட்டன்சத்திரம் சு.கருப்புச்சாமி, திராவிடர் கழகத்தோழர் தேவத்தூர் ஆசிரியர் மதிவாணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரைத் தோழர் முருகேசன், திராவிட விழுதுகள் ஒருங்கிணைப்பாளர் ஒட்டன்சத்திரம் தோழர் அரிஸ்டாட்டில், அவிநாசி ஆசிரியர் கலைச்செல்வன், மதுரை சமூகச் செயல்பாட்டாளர் தோழர் நல்லூரான் ஆகியோர் உரையாற்றினர். ம.தி.மு.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஒடவை ந.தமிழ்வேந்தன், சத்திரப்பட்டி பழனிச்சாமி ஆகியோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கினர்.

நண்பகலில் தாராபுரம் வழக்கறிஞர் தோழர் கிருட்டிணக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் சுவையான மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது.

விருந்திற்குப் பிறகு தோழர் பெரியாரின் வாழ்வியலை, திராவிடர் பண்பாட்டைத் தங்களது அன்றாட வாழ்வில் பின்பற்றும் தோழர்களின் அனுபவப் பகிர்வு சிறப்பாக நடைபெற்றது. 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தோழர்கள் தங்களது வாழ்வில் பெரியாரின் பண்பாட்டைப் பின்பற்றியதால் பெற்ற சுதந்திர வாழ்க்கையைப் பற்றி விளக்கமாகப் பேசினர். விழாவிற்குப் புதிதாக வந்திருந்தவர்களுக்கு திராவிடர் வாழ்வியல் பற்றிய ஒரு அறிமுகமாகப் பிற்பகல் நிகழ்வு அமைந்தது.

விழாவிற்கு கடந்த ஜூலை 15 முதல் ஒட்டன்சத்திரத்தில் கடை கடையாக, வீதி வீதியாக, கிராமம் கிராமமாகப் பரப்புரைகளை நடத்தினோம். நன்கொடை திரட்டினோம். கிராமங்களில் புதிய இளைஞர்களையும், பெண்களையும், மாணவர்களையும் சந்தித்து துண்டறிக்கைகளையும் எமது கோரிக்கைகளையும் விளக்கி சிறு சிறு கூட்டங்களை நடத்தினோம்.

அந்த நிலையில் இந்து முன்னணியினர் விழாவைத் தடை செய்ய வேண்டும் என்று காவல் துறை வழியாக மிரட்டல் விடுத்தனர். நமது விழா நடக்கும் அதே இடத்தில் "சனாதனப் பண்பாட்டு விழாவை நடத்துவோம்" என மிரட்டினர். தாராபுரம், வத்தலக்குண்டு நகரங்களில் பரப்புரைகளுக்குச் சென்ற தோழர்களை மிரட்டினர். காவல்துறையும் தொடக்கத்தில் சில நெருக்கடிகளைக் கொடுத்தது. அவற்றை நாம் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாரானோம்.

ஆனால், அந்தப் பகுதி முழுவதும் நமது விழாவுக்கு இருந்த வரவேற்பையும், ஒட்டன்சத்திரத்திலுள்ள திராவிடர் இயக்க உணர்வாளர்களின் ஆதரவையும், நமது பக்க நியாயத்தைப் புரிந்துகொண்ட காவல்துறை இந்து முன்னணிக்குத் தடை விதித்து, நமது திராவிடர் வாழ்வியல் விழாவுக்கு முழுமையான பாதுகாப்பைக் கொடுத்தது.

எம்மைப் பொறுத்தவரை திராவிடர் வாழ்வியல் விழா என்பது ஒட்டன்சத்திரத்தில் ஒரு தொடக்கம். இனி திண்டுக்கல் மாவட்டத்திலும் திராவிடர் தளம் முழுமையாக இயங்கத் தொடங்கும். அதற்கான உந்துதலை உருவாக்கிய இந்து முன்னணிக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

 #திராவிடர்_வாழ்வியல்_விழா - இந்து மத, ஜாதி, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிராக - ஜாதியற்றோர் சமுதாயம் மலர,  ஒட்டன்சத்திரத...
01/08/2026

#திராவிடர்_வாழ்வியல்_விழா - இந்து மத, ஜாதி, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிராக - ஜாதியற்றோர் சமுதாயம் மலர, ஒட்டன்சத்திரத்தில் ஒன்றுகூடுவோம்!

02.08.2026, ஞாயிறு - யூசுஃப் ராவுத்தர் மண்டபம் - ஒட்டன்சத்திரம்.

 #திராவிடர்_வாழ்வியல்_விழா - இந்து மத, ஜாதி, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிரான ஜாதியற்றோரின் ஒன்றுகூடல்! 02.08.2026, ஞாயி...
01/08/2026

#திராவிடர்_வாழ்வியல்_விழா - இந்து மத, ஜாதி, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிரான ஜாதியற்றோரின் ஒன்றுகூடல்!

02.08.2026, ஞாயிறு - யூசுஃப் ராவுத்தர் மண்டபம், ஒட்டன்சத்திரம்.

NEET, NEET Coaching என்பவை உலகளாவிய வணிகம் ஆகும். அதில் இந்தியாவில் நேரடியாகவும் பக்கவிளைவாகவும் பயன்பெறுபவர்கள் பார்ப்ப...
31/07/2026

NEET, NEET Coaching என்பவை உலகளாவிய வணிகம் ஆகும். அதில் இந்தியாவில் நேரடியாகவும் பக்கவிளைவாகவும் பயன்பெறுபவர்கள் பார்ப்பனர்கள்.

EWS Quota என்பதும் முற்றிலும் பார்ப்பனர்களுக்கான ஆதிக்க ஆயுதம். இந்த இரண்டையும் ஒரு சேர எதிர்ப்பதும், அந்த எதிர்ப்பை மக்களிடையே பரப்புவதும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளைக்கு எதிரானது.

பெரியார் திடல் அரசுகளை எதிர்க்கும் அமைப்பு அல்ல. தமக்கு வேண்டிய அரசுகளை உருவாக்குவதையும், எதிரான அரசுகளை அழிப்பதையும் இயல்பாகக் கொண்ட பார்ப்பன - பனியாக்களை எதிர்க்கும் அமைப்பு.

அவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கிவரும் இந்து மதத்தை எதிர்க்கும் அமைப்பு.

அந்த அமைப்பின் தலைமையகத்தில் காவல்துறை அத்துமீறலில் முதலமைச்சர் விஜய் ஒரு கருவியாக இருக்கிறார். அவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

அவரைவிட முக்கியமாக பெரியார் திடல் மீது பிறவிப்பகை கொண்ட ஒரு கூட்டம் பின்னணியில் இருந்து இந்தத் தடைகளை இரசிக்கிறது. அவர்களது கோர ரசனைகளுக்கு விருந்தளிக்கிறார் விஜய்.

- எதிர்ப்புப் பரப்புரைக்குத் தடைவிதித்து, பெரியார் திடலுக்குள் காவல்துறையின் அத்துமீறலை நடந்திய TVK Vijay அரசையும், அதன் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிலுள்ள பார்ப்பனர்களையும் - மற்றும் சில கட்சி சேரா பார்ப்பனர்களையும், பெரு முதலாளிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

1.அப்பார்ட்மெண்ட்களுக்கும், ரியல் எஸ்டேட் மனைபிரிவுகளுக்கும் அனுமதி வழங்கும்போதே அங்கு பொதுச் சமையலறைக்கு என தனியாக ஒரு ...
30/07/2026

1.அப்பார்ட்மெண்ட்களுக்கும், ரியல் எஸ்டேட் மனைபிரிவுகளுக்கும் அனுமதி வழங்கும்போதே அங்கு பொதுச் சமையலறைக்கு என தனியாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்பதைக் கட்டாய விதியாக்க வேண்டும். சிங்கப்பூரில் உள்ள Hawker centre போன்ற பொது உணவகங்களைத் தமிழ்நாடு முழுவதும் “கலைஞர் பொதுச் சமையலறை - பொது உணவகங்கள்” என்ற பெயரில் அரசே உருவாக்க வேண்டும்.

2.மனைவி - கணவன் இருவரும் வேலைக்குச் செல்வதற்கு வசதியாக அரசே குழந்தை வளர்ப்பு மய்யங்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தற்போது சில சிப்காட் வளாகங்களில் உருவாக்கியதைப் போலவே எல்லா அரசு அலுவலகங்களிலும் உருவாக்க வேண்டும்.

3.வயதானவர்களைப் பராமரிக்க, எளிய மக்களுக்கும் பயன்படும் வகையில் குறைந்த கட்டணத்தில் அரசே முதியோர் இல்லங்களை உருவாக்க வேண்டும். பகல் நேரங்களில் மட்டும் முதியோர்களைப் பராமரிக்க தமிழ்நாடு அரசு அன்புச்சோலைகள் திட்டத்தை உருவாக்கியுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் சென்னையில் இரண்டு இடங்களில் முழுநேர முதியோர் இல்லங்களையும் உருவாக்கியுள்ளது. அந்தத் திட்டங்களை முழுமையாக்கி, தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் முழுமையான முதியோர் இல்லங்களை உருவாக்க வேண்டும்.

4.எல்லா விண்ணப்பங்களிலும், எல்லா அடையாள அட்டைகளிலும், அரசுப் பதிவுகளிலும் தாய் / தந்தை / இணை என்ற வரிசையில் “உடன் வசிப்பவர்” என்ற பிரிவு அவசியம் வேண்டும். இப்போது இருக்கும் நடைமுறையானது ஒருவர் கட்டாயம் குடும்பத்தோடு தான் வாழ வேண்டும் என்பதைத் திணிக்கிறது. ஆகவே, “ உடன் வசிப்போர்” என்று பொருள் வரும் ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

5.திரைப்படம், வெப் சீரிஸ்களில், தொலைக்காட்சி நாடகங்களில் ஜாதிப் பெயர்கள்/ காட்சிகள் வரும் நேரத்தில் “ஜாதி இயற்கையானது அல்ல; சமூகத்திற்கு ஆபத்தானது” என்ற எச்சரிக்கை வாக்கியம் ஒரு Disclaimer போல வர வேண்டும். காதல் காட்சிகளிலும் “காதல் ஒரு போலி பிம்பம்” என்றும், ஒருதலைக் காதல் காட்சிகளில் Stalking scene என்றும், குடும்பப் பாசம், தாய், தந்தை, கணவன், மனைவியரின் அளவுக்கு மீறிய பாசக் காட்சிகளில் “இவை அதிகமானால் உங்கள் மனநலம் பாதிக்கப்படலாம்” என்பது போன்ற எச்சரிக்கை வாக்கியங்கள் வர வேண்டும்.

6.எல்லா நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்கு இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை வழங்க வேண்டும். சலுகை போலவும் பண்ணையார் தனமாகவும் வழங்கப்படும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை போனஸ்களைத் தடைசெய்ய வேண்டும். அந்த இலாபத் தொகையை மே, ஜூன் மாதங்களில் வழங்கி கல்விச் செலவுகளுக்குக் கடன் வாங்கும் நிலையை ஒழிக்க வேண்டும்.

7.ஜப்பான் அரசின் Tokyo Futari Story போல அரசே டேட்டிங் Appகளை உருவாக்கி நடத்த வேண்டும். ஜாதி ரீதியான இணைய தள மேட்ரிமோனியல்களைத் தடைசெய்ய வேண்டும்.

8.குலத்தொழில் இழிவுளை ஒழிக்க, “குலத் தொழில் ஒழிப்புத் துறை”யை உருவாக்க வேண்டும். ‘தாட்கோ’ போல, 'குலத் தொழில் ஒழிப்பு நிறுவனத்தை' உருவாக்க வேண்டும்.

9.ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்தோரும், அவர்களது வாரிசுகளும் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப் படுத்த ‘ஜாதியற்றோர் உற்பத்திகள்' Casteless Products' என்ற புதிய Brand உருவாக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்!

10.ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் ஜாதியற்றோர் இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். ‘ஜாதியற்றோர் நலத்துறை' என்ற தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்!

11.ஜாதி, மத மறுப்புமணம் செய்தவர்கள் தொழில் முனைவோர்களாக உயர DICCI, BICCI, FICCI போல InterCaste Chamber of Commerce and Industry (ICCI) யை உருவாக்க வேண்டும்!

12.தமிழ்நாடு அரசின், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறைகளின் எல்லாவகை ஏலங்கள், காண்ட்ராக்ட்டுகள், கட்டப்படும் கடைகடள், வணிக வளாகங்கள் அனைத்திலும் ஜாதிவாரி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

13.பிற்படுத்தப்பட்ட - பட்டியல் ஜாதிகள் அனைத்தும் ஜாதிக்கொரு தலைவர்கள் பெயரில் நடத்தும் அனைத்துக் குருபூஜைகளையும் தடைசெய்ய வேண்டும்.

14.ஜாதித் திமிரையும், ஜாதி அடிமைத்தனத்தையும் பயிற்றுவிக்கும் கிராம தெய்வம், நாட்டார் தெய்வம், குலதெய்வக் கோவில் வழிபாடுகளையும், பொங்கல் விழாக்கள், ஜல்லிக்கட்டுகளையும் தடைசெய்ய வேண்டும்.

15.பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மதப் பண்பாடுகளுக்கு முற்றிலும் வேறான திராவிடர் பண்பாட்டைப் பின்பற்றிப் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களையும் அவர்களது தலைமுறைகளையும் “இந்துக்கள்’ என்ற பட்டியலில் வைத்திருப்பது - “இந்து லா” எனும் சட்டப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஒரு வன்முறை எனக் கருதுகிறோம்.

ஆகவே, திராவிடர் வாழ்வியலைப் பின்பற்றுவோருக்குத் தனியான ஒரு சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக பெரியாரியல் அறிந்த சட்ட வல்லுநர் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். 1940 லேயே தோழர் பெரியார் ஆங்கிலேய அரசிடமே இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார். நமது காலத்திலாவது அந்தக் கோரிக்கைகான முன் முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

#திராவிடர்_வாழ்வியல்_விழா

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஆகஸ்ட் 2-ஆம் நாள் திராவிடர் தளம் சார்பில்  #திராவிடர்_வாழ்வியல்_விழா திட்டமிடப்...
28/07/2026

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஆகஸ்ட் 2-ஆம் நாள் திராவிடர் தளம் சார்பில் #திராவிடர்_வாழ்வியல்_விழா திட்டமிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திராவிடர் இயக்கங்கள், அம்பேத்கரிய அமைப்புகளின் குடும்பங்களின் சந்திப்பு, ஜாதியற்றோரின் ஒன்றுகூடலாக நடத்திட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதற்காக துண்டறிக்கை, சமூக வலைத்தளங்கள் வழியாகக் கடந்த 10 நாட்களாகப் பரப்புரைகள் நடக்கின்றன.

கடந்த 24.07.2026 வெள்ளியன்று தாராபுரம் நகரில் பா.ஜ.க.வினர் துண்டறிக்கை கொடுக்கக்கூடாது என தகராறு செய்தனர். நமது தோழர்கள் அதைச் சமாளித்து தொடர்ச்சியாகப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

26.07.2026 அன்று வத்தலக்குண்டு நகரில் பா.ஜ.க.வினர் துண்டறிக்கை வழங்கக்கூடாது எனத் தகராறு செய்தனர். வத்தலக்குண்டு காவல்துறையும் பா.ஜ.க.வுக்குத் துணையாக நின்று எமது தோழர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றியது.

இன்று (28.07.2026) காலை ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணியினர், “பெரியாரிய - அம்பேத்கரிய இயக்கக் குடும்ப விழாவிற்கு தடை விதிக்க வேண்டும். மீறி நடந்தால் அதே இடத்தில் இந்து முன்னணி சார்பில் சனாதனப் பண்பாடு பற்றி நாங்கள் விழா நடத்துவோம்” என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

திராவிடர் கழக வழக்கறிஞர் தோழர் ஆனந்தன், திராவிடர் தளம் தோழர்கள் செந்தில்குமார், நாராயணமூர்த்தி, வடிவேல் ஆகியோர் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளருடன் பேசி வருகின்றனர்.

கருத்துரிமையையும், அரசியல் சட்டத்தின் 51 A (h) பிரிவு வழங்கிய அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் அலுவலகம், இந்து முன்னணியின் கருத்துகளை ஏற்று எமது தோழர்களை மிரட்டி வருகிறது. துண்டறிக்கைகளைக் கூட மக்களிடம் கொடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளது.

எதிர்ப்புகளை வரவேற்கிறோம். சட்டத்தின் துணையோடு பெரியாரியலைத் தடையின்றிப் பரப்புவோம்.

Chief Minister of Tamil Nadu Actor Vijay Dindigul District Police

ஜாதிப்பெயரில் நடக்கும் கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், ஜாதிப் பெயரில் உலவும் பிராண்டுகள் அனைத்தையும் தவிர்த்து விடுங்கள்....
25/07/2026

ஜாதிப்பெயரில் நடக்கும் கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், ஜாதிப் பெயரில் உலவும் பிராண்டுகள் அனைத்தையும் தவிர்த்து விடுங்கள்.

ஜாதிப்பெயரில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் சேராதீர்கள். அப்படி எதையும் நீங்களும் தொடங்காதீர்கள்.

Register yourself by using the QR code!

#திராவிடர்_வாழ்வியல்_விழா

கீழ்வெண்மணியில் கொளுத்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தலித் மக்களாக இருந்தார்கள். கொளுத்திய நில உடைமையாளர்கள் அனைவரும் பார...
22/07/2026

கீழ்வெண்மணியில் கொளுத்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தலித் மக்களாக இருந்தார்கள். கொளுத்திய நில உடைமையாளர்கள் அனைவரும் பார்ப்பனர், நாயுடு, தேவர்களாக இருந்தார்கள்.

அங்கு விவசாயத் தொழிலாளராக ஒரு பார்ப்பனரும் இல்லாதது ஏன்? நில உடைமையாளராக ஒரு தலித் கூட இல்லாததும் ஏன்?

இந்த இந்து மத, ஜாதிய சமுதாய அடித்தளத்தை அழிக்க கம்யூனிஸ்ட்டுகள் 1925 முதல் இன்று வரை செய்தது என்ன? இந்து மதத்தை எதிர்த்த உங்கள் வேலைத் திட்டங்கள், செயல் திட்டங்கள் என்ன?

பார்ப்பன, இடைநிலை ஜாதிகளை உரிமையாளர்களாகவும், தலித் ஜாதிகளைத் தொழிலாளர்களாகவும் பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்க வைக்கும் இந்து மத வாழ்க்கைமுறையை எதிர்த்து நீங்கள் நடத்திய 'ஜனநாயகப் பூர்வமான' பொலீட்பீரோ நடவடிக்கைகள் என்ன?

இதோ, பெரியார் காலத்திலிருந்து இன்று வரை இந்து, ஜாதிய, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிரான திராவிடர் வாழ்வியலைப் பின்பற்றும் தோழர்களின் இன்றைய தலைமுறை மக்களைச் சந்தித்து வருகிறது.

ஆகஸ்ட் 2-இல், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற உள்ள திராவிடர் வாழ்வியல் விழாவின் நோக்கங்களை விளக்கி, ஜூலை 18, 19, 20, 21 தேதிகளில் பரப்புரைகளை நடத்தி, நிதி திரட்டியும் வருகிறார்கள். அடுத்து பழனி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, செம்பட்டி பகுதிகளுக்கும் பயணிக்க இருக்கிறார்கள்.
திராவிடர் தளம்

#திராவிடர்_வாழ்வியல்_விழா

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடர் தளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திராவிடர் தளம்:

Shortcuts

Share