Muruga yugam Siddhar yugam Arangar yugam

  • Home
  • Muruga yugam Siddhar yugam Arangar yugam

Muruga yugam Siddhar yugam Arangar yugam ஆறுமுக அரங்கர் தலைமையில் முருக யுகம்
(1)

09/06/2026

ஓம் சரவண ஜோதியே நமோ நம
ஓம் ஆறுமுக அரங்க மகா ஜோதியே நம

🌷 #ஓம்சரவணபவ  #கந்தர்அலங்காரம் - 84 #மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக் #கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்க...
09/06/2026

🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அலங்காரம் - 84
#மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
#கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
#பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
#ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே

🌷மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

🌷 ஆலகால விடத்தை உண்டதனால் கரிய நீல நிறமாகிய கழுத்தை உடைய #சிவபெருமானது திருமைந்தராகிய ' #கந்தப்பெருமானே!' என்று துதித்து வாழ்த்துகின்ற இந்தப் பழக்கத்திற்கு வந்த தொண்டினை அல்லாமல் வேறு ஒன்றையும் அறிந்தேனில்லை. [அடியேன்] கற்ற கல்வியும் நீங்கி,
துன்பமுறும் சுற்றத்தினரும் ஊராரும் ஓலமிட்டு அழ, அடியேன் நன்றாகப் பழகியுள்ள ஐம்பொறிகளும் என்னைக் கைவிட்டுச் செல்ல, அடியேன் உயிரும் உடலை விட்டுப் போகும் காலத்து தேவரீரின் அடைக்கலமே
ஆவேன்.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🚩 #முருகா_என்றால் ...🚩 #மகான்  #ஆறுமுகஅரங்கர்  #அருளுரை🚩 #முருகா_என்றால்:முற்றுப்பெற்ற ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூஜிக்...
08/06/2026

🚩 #முருகா_என்றால் ...
🚩 #மகான் #ஆறுமுகஅரங்கர் #அருளுரை

🚩 #முருகா_என்றால்:முற்றுப்பெற்ற ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூஜிக்க பூஜிக்க ஞானத்தலைவன் முருகன்தான் ஞானமளிப்பவன் என்பதை உணரலாம்.

🚩 #ஞானப்பண்டிதனின் அருளைப் பெற சலிப்படையாமல் தொடர்ந்து தொடர்ந்து #ஞானிகள்_திருவடிகளைப்_பற்றியும், #முருகப்பெருமானது_திருவடிகளைப்_பற்றியும் நாமஜெபமாகிய பூஜையை செய்திட வேண்டும்.

🚩 #நாமஜெபம்தனை எந்த அளவிற்கு மனம் உருகி தொடர்ந்து செய்கின்றோமோ அந்த அளவிற்கு முருகனின் பார்வை நாமஜெபம் செய்கிறவர் மீது படபட, அது பூஜிப்பவர்களுக்கு ஆசியாய், அருளாய் மாறி அவர் தம்மை சார்ந்திடும்.

🚩ஞானபண்டிதனின் கருணைப்பார்வை நம்மீது படபட, அந்த கருணையே அருளாக மாறி நம்மை வழிநடத்தும். பூஜிப்பவன் பெற்ற அருளே பூஜிப்பவனுக்கு நல்லறிவாய் மாறி மேலும் மேலும் முருகனது அருளினைப் பெறத் தூண்டும்.

🚩மீண்டும் மீண்டும் முருகனை வணங்கி வணங்கி, தாம் பெற்ற அருளினால் மேலும் அருளைப் பெற்று பெற்று, அருளே வடிவான முருகனது அருளை அணு அணுவாக, அணு அணுவாக தொடர்ந்து பெறவேண்டும்.

🚩இப்படி முருகனது அருளைப் பெறுவதே அந்த முயற்சியே அந்த அருளை பெறுவதற்கான சலிப்பின்றி செய்கின்ற பூஜையே #தவமாகும்.

🚩முழுமையான அருளைப் பெறுகின்ற முயற்சியை தவமாய் செய்ய செய்ய, கருணையே வடிவான முருகனது மனம் கனிந்து நம்மை கனிவு கொண்டு வழிநடத்தி, அருளினை நம்மீது அளவிலாது அருளி நிற்கநிற்க,

🚩அழியக்கூடிய இளமை, தேகம், செல்வம் என அனைத்திலும் நாம் இருந்தபோதும் அழியக்கூடிய அவற்றின் துணைக்கொண்டே அழியாப் பொருளை அடைகின்ற மார்க்கத்தினிலே நம்மை உடனிருந்து தாயினும் மேலான கருணையோடு தடுமாறும் போதெல்லாம் தாங்கி நின்று தாழாது உயர்த்தி நம்மையும் ஒரு பொருட்டாய் மதித்து மனமிரங்கி வழிநடத்தி செல்வான் 3தயவுடைத்_தெய்வம் #முருகப்பெருமான்.

🚩 #முருகனது அருள் பெருக பெருக, அவனே நமக்கு #தாயாய், #தந்தையாய், வல்ல #சற்குருவாய் இறுதியில் #தெய்வமாய் ஆகி நின்று, நம்மை சார்ந்து ஒரு நிலைதனிலே அருள் பெருகி பெருகி பெருகி நம்மையும் அவனைப் போலவே ஆக்கி, பெறுதற்கரிய #மரணமிலாப்_பெருவாழ்வை நமக்கு அருளியேவிடுவான் முருகப்பெருமான்.

🚩தாயினும் மிக்க தயவுடை தயாநிதி முருகனது திருவடிகளை எந்த சோதனை வந்தாலும் விடாது இறுகப் பற்றிக் கொண்டு, #இன்னுயிர்_நீப்பினும்_உமது_பொன்னடி_மறவேன் என்றே திடசித்த வைராக்கியத்துடன் அயராது பாடுபட்டால்தான் யாருக்கும், தேவர்க்கும், மூவர்க்கும் எட்டா #ஞானபண்டிதனின்_திருவடிகள் நம்முன் தோன்றி காத்தருளும் என்பதை உணரலாம்.

🚩இப்படி அவரவர் செய்த வினைகள் காரணமாக அவரவர்க்கு ஏற்பட்ட இந்த இக லோக வாழ்வை முழுமனதாய் ஏற்றுக் கொண்டு, அதில் இருந்து கொண்டே, இல்லறக் கடமைகளைச் செய்து கொண்டே துறவிற்கான நிலை நின்று, பர வாழ்விற்கான முயற்சியையும் விடாது தொடர்ந்திட வேண்டும்.

🚩அதை விடுத்து இல்லற கடமைகளை நமக்கு விதிவசத்தால் ஏற்பட்ட கடமைகளை புறக்கணித்துவிட்டு யாருமற்ற காடுகளிலே சென்று அனாதை போல சுற்றித் திரிந்து, தம் மனதிற்கு தோன்றியபடி தவம் செய்வதாய் நடித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இறைவனால் அளிக்கப்பட்ட இந்த அற்புதமான மானுட தேகத்தை கொடுமையாய் வருத்தி, எடுத்த ஜென்மத்தின் பயனை அடையாமல் இறந்து போவது என்பது பெரும் பாவமாகும்.

🚩ஆதலினால் எல்லாம் வல்ல முருகனது திருவடிகளை பூஜித்திட இவ்வுண்மையெல்லாம் தெளிவாக உணரலாம்.

🚩 ுருகப்பெருமான்_திருவடிகள்_போற்றி என்று சொல்வதன் நோக்கமே இனி #பிறவா_மார்க்கத்தை அடைவதற்காக இருக்க வேண்டுமே தவிர மற்ற நிலையில்லாத எந்த ஒன்றையும் விரும்பி காலத்தை வீணாக்கக் கூடாது .

🌷 #நலமும்_வரமும்_தரும்_நாமஜெபங்கள்

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷 #ஓம்சரவணபவ  #கந்தர்அலங்காரம் - 83 #தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே #பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புர...
08/06/2026

🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அலங்காரம் - 83
#தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
#பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
#தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
#வாங்கிய னுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.

🌷 #மகான்_அருணகிரிநாதர்

🌷தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, தனது சிறிய திருவடிகளுக்கே அழகான வீரக் கழலை அணிந்து கொண்ட #திருமுருகப்பெருமான், குதிரையையொத்த தோகையையுடைய
மயிலின்மீது ஏறி நடந்ததும் சூரபன்மனின் சேனை முறிபட்டது; ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து ஏவிய உடனே குலமலைகள் எட்டும் விலகி வழிவிட்டன.

🌷முருகப்பெருமானின் திருவடியை மறவாமல் நாள்தோறும் பூஜிக்க உபதேசிக்கிறார் முருகப்பெருமானாக அவதரித்த மகான் #அருணகிரிநாதசுவாமிகள்

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷 #ஓம்முருகா  #கந்தர்அலங்காரம் - 82 #தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே #புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்...
07/06/2026

🌷 #ஓம்முருகா #கந்தர்அலங்காரம் - 82
#தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
#புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட
#முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்
#பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.

🌷மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

🌷 இலைகளோடுகூடிய சிவந்த நிறமுள்ள கடப்ப மலர்களாலான மாலையையும் அடியேனின் மனத்தையும் தேவரீருடைய இரு திருவடிகளிலேயே சேர்த்து வைத்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளையிட்டு அருள்வீராக! தாமரை மலர் மீது வீற்றிருக்கும் பிரம்மதேவனது உலகத்தின் வாயிலைப் பிளந்து அதுவரை ஓங்கி நின்ற அமராவதியாகிய இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று ஆண் யானைபோல் போர்புரிந்த கொடூரமான குணமுடைய சூரபன்மனுக்கு பயங்கரமானவரே!

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷 #ஓம்முருகா  #கந்தர்அலங்காரம் - 81 #தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால் #ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்ட...
06/06/2026

🌷 #ஓம்முருகா #கந்தர்அலங்காரம் - 81

#தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
#ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்டுஞ்
#சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
#வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே

🌷மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

🌷 நட்சத்திரக் கூட்டம் என்கின்ற [செவிலித்] கார்த்திகை தாய்கள் ஆறு பேரும் தந்த முலைப் பாலையுண்டது போதாமல் #உமாதேவியாரின் திருமுலைப்பாலையும் உண்டருளிய பாலகனாகிய #திருமுருகப்பெருமானின்
திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் அடியேனின் சிந்தையில் குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது
நீங்கிப் போவாயாக; மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்!

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷 #ஓம்முருகா  #கந்தர்அலங்காரம் - 80 #மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னே #தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்...
05/06/2026

🌷 #ஓம்முருகா #கந்தர்அலங்காரம் - 80

#மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னே
#தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
#த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
#பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.

🌷 #மகான்_அருணகிரிநாதர்

🌷 #கவி_விளக்கம்

🌷ஆகாயத்தை முட்டி வருகின்ற நெடிய இயமன் [அடியேனின் இறுதிக் காலத்தில்] வருவான் ஆயின், அடியேனுக்கு முன்பாக குதிரையையொத்த தோகையையுடைய மயிலின்மீது தேவரீர்
ஏறி வந்து அடியேனுக்கு முன்பாக நின்று திருவருள்புரிவீர். தூய்மையானதும் என்றும் அழியாததுமான முக்தியை வழங்கும் கொடைத் தன்மையுடைய மலையைப்போன்றவரும் முப்புரத்தை
எரித்தவரும் மூன்று கண்களை உடையவருமான #சிவபெருமானை தம் வலப்பக்கத்தில் வைத்திருக்கும் மேலான கல்யாண குணங்களுடைய 3உமாதேவியாரின் திருமைந்தரே!

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

Address


Alerts

Be the first to know and let us send you an email when Muruga yugam Siddhar yugam Arangar yugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muruga yugam Siddhar yugam Arangar yugam:

  • Want your organization to be the top-listed Government Service?

Share