19/03/2026
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் பெரும்போக நெல் கொள்வனவு!
2025/26 ஆம் ஆண்டின் பெரும்போக நெல் அறுவடையினை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தீகவாபி கிராமத்தின் நெல் களஞ்சியசாலையில் கடந்த 2026.01.29 ஆம் திகதி தொடக்கம் 2026.03.16 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உரிய விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இக்கொள்வனவு வேலைத்திட்டமானது நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையின் பிராந்திய உதவி முகாமையாளர் திரு. சந்திரசிறி அவர்களின் மேற்பார்வையில் பிரிவிற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர், விவசாய அமைப்பின் பிரதிநிதி மற்றும் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.
குறிப்பாக, 516 விவசாயிகளிடம் இருந்து 2130434 Kg நெல் கொள்வனவு செய்யப்பட்டது. இவற்றுள் நாடு வெள்ளை 198,809 Kg நாடு சிவப்பு 1931625 Kg அளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.