04/02/2025
கோணாவத்தை மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
அட்டாளைச்சேனை, கோணாவத்தை பொது மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதி ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் நீண்டகாலமாக பழுதடைந்து காணப்பட்டதனால் மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதி என்பன இருளில் மூழ்கிக் காணப்பட்டன. இதன் காரணமாக இரவு நேரங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போதும், குறித்த பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்வோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பினர் திகாமடுல்ல நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி றிசாட் எம் புகாரியின் கவனத்துக்கு குறித்த விடயத்தினை கொண்டு சென்றதனையடுத்து அவர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் (03) கோணாவத்தை பொது மையாவாடி மற்றும் முஃமினின் பள்ளி வீதிக்கும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.
குறித்த மையாவாடியில் பொருத்தப்பட்டிருந்த பல மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதனாலும், எதிர்வரும் நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகை உள்ளிட்ட இரவு நேர வணக்க வழிபாடுகளையும் கருத்திற் கொண்டே குறித்த இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகக் காணப்பட்ட குறித்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எல்.டீ.இர்பான், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் மற்றும் திகாமடுல்ல நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி றிசாட் எம் புகாரி ஆகியோருக்கு செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பினர் நன்றி தெரிவிக்கின்றனர்.