16/02/2026
அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பாளர்களுக்கான விஷேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான றியா மசூர்(MPS) அவர்களின் தலைமையில் நேற்று (16.02.2026) அட்டாளைச்சேனை பீச் ஹவுஸ் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எல். பாயிஸ், எஸ்.ஐ.றியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸின் இணைப்பாளர் எம்.எச்.அஜ்வத்(SO) மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளைகளின் இளைஞர் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள 06 வட்டாரங்களிலும் தனித்தனியான இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கிராம சேவகர் பிரிவுகளுக்கான இளைஞர் அமைப்பாளர்கள் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.