Eravur Political - Government - News

Eravur Political - Government - News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eravur Political - Government - News, Political Party, Eravur.

தேசிய மக்கள் சக்தி (NPP) என்பது இலங்கையின் புதிய அரசியல் சக்தியாகும். இது ஊழல் குடும்ப ஆதிக்கம், கடன் சுமை, வறுமை போன்றவற்றால் சோர்ந்து போன மக்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்க உருவானது.
எங்கள் கனவு சமத்துவமான சுயாதீனமான ஜனநாயகமான சோசலிச அடிப்படையிலான இலங்கை தேசிய மக்கள் சக்தி (NPP) என்பது இலங்கையின் புதிய அரசியல் சக்தியாகும். இது ஊழல், குடும்ப ஆதிக்கம், கடன் சுமை, வறுமை போன்றவற்றால் சோர்ந்து போன மக்

களுக்கு புதிய நம்பிக்கை அளிக்க உருவானது.
எங்கள் கனவு – சமத்துவமான, சுயாதீனமான, ஜனநாயகமான, சோசலிச அடிப்படையிலான இலங்கை.

நாட்டிலுள்ள 10 நகரங்கள்புதிய தோற்றத்துடன்அபிவிருத்தி செய்யப்படவுள்ளனஒவ்வொரு நகரத்தினதும் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் த...
03/06/2026

நாட்டிலுள்ள 10 நகரங்கள்

புதிய தோற்றத்துடன்

அபிவிருத்தி செய்யப்படவுள்ளன

ஒவ்வொரு நகரத்தினதும் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தனித்துவத்தை பாதுகாத்து, நவீன மற்றும் கவர்ச்சிகரமான நகரங்களை உருவாக்கும் “10 நகரங்களை அபிவிருத்தி செய்தல்” என்ற திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு ரூ. 1,475 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி பின்வரும் நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நகரங்கள்:

* யாழ்ப்பாணம்
* மாத்தளை
* உடுடன் (உடுதும்பர/உடுதும்பரை என இருக்கலாம்; படம் தெளிவில்லை)
* மட்டக்களப்பு
* சியம்பலாண்டுவ
* தம்புத்தேகம
* வவுனியா
* எலஹெரகொட (படத்தில் சிறிது மங்கலாக உள்ளது)
* புத்தளம்
* மாத்தறை

இத்தகு மேலதிகமாக, கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களை “நகர அடையாளப்படுத்துதல்” என்ற திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய 2026 ஆம் ஆண்டில் ரூ. 325 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்த ஒதுக்கீடு:

* 10 நகரங்கள் அபிவிருத்தி: ரூ. 1,475 மில்லியன்
* நகர அடையாளப்படுத்தல் திட்டம்: ரூ. 325 மில்லியன்
* மொத்தம்: ரூ. 1,800 மில்லியன் (ரூ. 1.8 பில்லியன்)

சில நகரங்களின் பெயர்கள் படத்தின் தெளிவின்மை காரணமாக 100% உறுதியாக வாசிக்க முடியவில்லை. வேண்டுமானால் நான் நகரங்களின் பட்டியலை சிங்கள மூல ஆவணத்துடன் சரிபார்த்து துல்லியமாக வழங்கலாம்.

நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணை ஜூன் 2,3 மற்றும் 4 ஆம் திகதி...
03/06/2026

நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணை

ஜூன் 2,3 மற்றும் 4 ஆம் திகதி - மாத்தறை

ஜூன் 18, 19 மற்றும் 20 ஆம் திகதி - யாழ்ப்பாணம்

ஜூலை 8,9 மற்றும் 10 ஆம் திகதி - மட்டக்களப்பு

ஜூலை 24 மற்றும் 25 ஆம் திகதி - புத்தளம், மொனாராகலை மற்றும் வவுனியா

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்” ஏறாவூரில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான நவீன ...
02/06/2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்”
ஏறாவூரில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான நவீன உபகரணங்கள் வழங்கல்.................

​வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தேசிய தொலைநோக்கு சிந்தனைக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்” தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மிக உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
​இதன் ஒரு கட்டமாக,l ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் - 03 கிராம சேவகர் பிரிவில் இடியப்ப சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கான நவீன உபகரணங்கள் வழங்குவதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு இன்று (02.06.2026) நடைபெற்றது.

​ஏறாவூர் - 03 பிரஜாசக்தி சமூக அபிவிருத்தி குழு தலைவர் S.அப்துல் ராபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் - 02C மற்றும் மிச்நகர் பிரஜாசக்தி தலைவர்களான தோழர் மர்சூக், தோழர் பைராஸ், ஏறாவூர் - 03 கிராம சேவகர் திருமதி.சஸ்னா, மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சந்திரநீத்தா, பிரஜாசக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

​சுமார் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நவீன உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதன் வாயிலாக உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிரதேச மட்டத்தில் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

ஏறாவூர் தொழில் சங்க பொறுப்பாளர்தோழர் எம்.எல்.எம்.இம்தியாஸ்  அவர்களின் தலைமையில் ஏறாவூரில் பாடசாலை கல்விசாரா ஊழியர்களின் ...
23/05/2026

ஏறாவூர் தொழில் சங்க பொறுப்பாளர்
தோழர் எம்.எல்.எம்.இம்தியாஸ் அவர்களின் தலைமையில் ஏறாவூரில் பாடசாலை கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டம்

பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கான தொழிற்சங்க கூட்டம் இன்று (சனி) பிற்பகல் 4 மணியளவில் ஏறாவூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளரும் வாழைச்சேனை காகித ஆலையின் தவிசாளருமான தோழர் உபாலி ரத்நாயக்க கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்தார்.

கூட்டத்தில் கருத்து தெரிவித்த தொழிற்சங்க உப செயலாளர், கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக கடந்த காலங்களில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகள் முன்வைத்த போதிலும் இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசிலும் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறையில் உள்ள பதவி உயர்வு முறை, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் நீதி மற்றும் நியாயமான முறையில் பிரச்சினைகளை தீர்க்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இப்பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு என்றும் நன்றியுடன் இருப்போம் என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த தோழர் உபாலி ரத்நாயக்க, குறித்த பிரச்சினையை உரிய அமைச்சுகளுக்கும் திணைக்களங்களுக்கும் கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக கூறினார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் NPP குழுவினர் கலந்து கொண்டதுடன், கல்விசாரா ஊழியர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

22/05/2026
20/05/2026

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு | மட்டக்களப்பு | 2026.05.20

போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கின்ற“முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடுஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமை...
18/05/2026

போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கின்ற
“முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில்

மே 20 பிற்பகல் 1.30 மணிக்கு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில்

அனைவரும் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். எவரும் பெரியவர் அல்ல. சகலரும் சமம்.- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
18/05/2026

அனைவரும் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். எவரும் பெரியவர் அல்ல. சகலரும் சமம்.

- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சிறிய அளவிலான முட்டை கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கான திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இத்திட்டத்த...
12/05/2026

சிறிய அளவிலான முட்டை கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கான திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் அரச கால்நடை வைத்திய பிரிவினுள் ஏற்கனவே முட்டைக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் அடுத்ததாக பயனாளி ஏற்கனவே 50 முட்டைக்கோழிகளை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும் நமது திட்டத்தின் மூலம் பயனாளி தன்னுடைய பண்ணையை 150 தொடக்கம் 200 கோழிகள் வளர்ப்பதற்காக விஸ்தரிப்பதற்கான திட்டமே இது இம் முட்டை க்கோழி வளர்ப்பின் முட்டை கோழி வளர்ப்பதற்கான விஸ்தீரனத்திற்காக பயனாளி தன்னிடம் ஏற்கனவே உள்ள கொட்டில் அல்லது புதிய கொட்டில் ஒன்றினை நிர்மாணிக்க வேண்டும் திணைக்கள பங்களிப்பாக அது உச்ச தொகையாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் 150 ஆயிரம் தொகை வழங்கப்படும் பயனாளி தன்னுடைய பங்களிப்பாக 3 லட்சத்துக்கு அதிகமான பெறுமதியான கொட்டில் மற்றும் கோழி வளர்ப்பு அதற்கான தீவனம் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிதி வசதியினை கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும் அவருடைய கொட்டில் அமைந்துள்ள காணி அவருடைய சொந்த காணியாக காணப்பட வேண்டும் இல்லாத பட்சத்தில் காணி உரிமையாளர் உடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் இதற்கு பொருத்தமான பயனாளிகள் தங்கள் பிரிவுகளில் காணப்படுமானால் உடனடியாக அரசர் கால்நடை வைத்திய அலுவலகத்தனுக்கு வருகை தந்து தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள் தங்கள் ஒத்துழைப்புக்கு மேலான நன்றி அரசர் கால்நடை வைத்திய அலுவலகம் ஏறாவூர்

கந்தசாமி பிரபு அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் மாவட்...
12/05/2026

கந்தசாமி பிரபு அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் மாவட்டத்தின் சுகாதாரத் துறைக்கு புதிய முன்னேற்றங்களையும் வலுசேர்க்கும் நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு அவர்கள், மக்களின் சுகாதார நலனை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்ற நிலையில், அவரின் தலைமையின் கீழ் மாவட்டத்தின் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் மேலும் மேம்படும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அவரது புதிய பொறுப்பிற்காக பல தரப்பினரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Address

Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when Eravur Political - Government - News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share