18/11/2024
#ஒழுங்கமைக்கப்பட்ட_கழிவகற்றல்_முகாமைத்துவம் #ஊடாக_சுத்தமானதும்_பசுமையானதுமான #பிரதேசத்தைக்_கட்டியெழுப்புதல்
#பிரதேச_சபை_இறக்காமம்
திண்மக் கழிவுகளை முறையாக அகற்றும் திட்டமொன்றை எமது பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக எமது இறக்காமம் பிரதேச சபையின் அதிகார எல்லையிலுள்ள பிரதேச குடியிருப்பாளர்கள், வியாபார உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் ஏனைய நிறுவனங்கள் என்பன முறையான திண்மக் கழிவகற்றலை ஒழுங்குபடுத்துவதற்காக கீழ்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
1. தங்களது திண்ம, திரவ கழிவுகளை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வீதிகளிலோ, வீதி ஓரங்களிலோ, நீர் ஓடைகளிலோ, குளத்திலோ, வடிகான்களிலோ. வெற்றுக்காணிகளிலோ, பொது இடங்களிலோ அல்லது அதனை ஒத்த இடங்களிலோ வீசுதல் கூடாது.
2. குடியிருப்பாளர்கள் தங்களின் பயன்பாட்டிலுள்ள கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை முறையான பராமரிப்புக்கு உட்படுத்துவதுடன், அவற்றினை ஏனையோர் தங்களது கழிவுகளை கொட்டும் இடங்களாகப் பயன்படுத்துவது தடை செய்யப்படவேண்டும்.
3. சமையலறை, குளியலறை மற்றும் வியாபாரஸ்தலங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் கழிவு நீரை வீதிகளிலோ, வடிகானிலோ இடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
4. திண்மக்கழிவுகளை கீழ்வரும் முறைக்கமைவாக ஒழுங்குபடுத்தி கால அட்டவணைக்கமைவாக தங்கள் பகுதிக்கு பிரதேச சபை வாகனம் வருகை தரும் போது ஒப்படைக்க வேண்டும்.
5. கழிவுப் பைகளில் சாம்பல், மணல், கட்டிடக்கழிவுகள் மற்றும் உடைந்த கண்ணாடிக் கழிவுகள் போன்வற்றினை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இவை எம்மால் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது.
6. எம்மால் வழங்கப்பட்டுள்ள இரண்டு பைகளுக்குள் உள்ளடக்கத்தக்க வகையில் தங்களின் கழிவுகளை வழங்க வேண்டும்.
7. தங்களினால் கொடுக்கப்படும் கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தத்தக்க வகையில் எம்மால் வழங்கப்பட்ட இரண்டு நிறப்பைகளிலும் வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
குறிப்பு.
• மரக்கிளைகள், தோட்டக் கழிவுகள், தென்னை ஓலை, வாழை மரங்கள் போன்ற பெருங் கழிவுகளை பிரதேச சபைக்கு அறிவித்து குறித்த கட்டணத்தை செலுத்துவதன் மூலம் அகற்றிக் கொள்ளலாம்.
• கழிவுகள் அகற்றும் வாகனம் வரும் நேரத்தில் மாத்திரமே வீதிகளில் கழிவுகளை வைக்க வேண்டும்.
• பிரிக்கப்பட்டு உரிய பைகளில் வழங்கப்படாத கழிவுகள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
• கழிவுகளை குவித்து சுற்றாடலை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
• கழிவுகளை அகற்றுவதற்கான மாதாந்த கட்டணம் அறவிடப்படும்.
எனவே. “தூய்மையானதும், சுபீட்சமானதும் பசுமையானதுமாக” எமது பிரதேசத்தை மிளிரச் செய்ய தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பிரதேச சபை
இறக்காமம்