Governor's Office Northern Province

Governor's Office Northern Province Official News Page of the Hon. Governor of Northern Province
(1)

29/04/2026

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (29.04.2026) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது மணல் விநியோகப் பொறிமுறை தொடர்பான விடயம் ஆராயப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொலி.

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு

வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத...
29/04/2026

வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பேருந்து நிலையத்தில் குறித்த தனியார் பேருந்துகள் தமக்குரிய சுழற்சி முறைஇருந்தும், அதிகார சபைக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றித் தமது சேவையைத் தன்னிச்சையாக இடைநிறுத்தியுள்ளன. இதனால், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெருமளவான பயணிகள் ஒரு நாள் முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், அதிக கட்டணங்களைச் செலுத்தி மாற்றுத் தனியார் வாகனங்களில் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பயணிகளை நடுத்தெருவில் விட்ட இந்தப் பொறுப்பற்ற செயல் தொடர்பில் அதிகார சபையின் கவனத்துக்;குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகப் பின்வரும் கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன:

முதற்கட்டமாக குறித்த பேருந்து உரிமையாளர்களுக்கு தலா 3,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரங்கள் 27.04.2026 முதல் 03.05.2026 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தடை நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில், குறித்த பேருந்துகளில் பதிவு செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் வழியனுமதிப்பத்திரம் பெற்று சேவையில் ஈடுபடும் வேறு எந்தவொரு பேருந்திலும் கடமையாற்றுவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன்:
'பயணிகளின் நலனே எமது முதன்மை நோக்கமாகும். தமக்கு வழங்கப்பட்டுள்ள சுழற்சி முறையில் பொறுப்பற்ற விதத்தில் சேவைகளை இடைநிறுத்தி பொதுமக்களை அலைக்கழிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அதிகார சபை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்விதப் பாரபட்சமுமின்றித் தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் வேண்டுமென்றே ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது முறைகேடுகள் இடம்பெற்றாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
29.04.2026

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு.

மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் குளப் புனரமைப்புப் பணிகளின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வி...
29/04/2026

மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் குளப் புனரமைப்புப் பணிகளின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடுவதற்கு ஏதுவாக பொது மக்கள் பாதுகாப்பு கௌரவ அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29.04.2026) புதன்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேகம் திருப்தியளிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். 'குறிப்பாக வீதி அபிவிருத்திப் பணிகள் எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை. தேசியப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் உரிய காலத்தில் செலவு செய்யப்படவில்லை. திறைசேரியால் போதுமான நிதி விடுவிக்கப்பட்டாலும், திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்யாமல் அதிகாரிகளால் வெறுமனே காரணங்கள் மட்டுமே கூறப்படுகின்றன.

நான் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருக்கின்றேன். மன்னார் மாவட்டத்தில்தான் 2024ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வர முன்னர் இருந்த நிலையிலேயே சில அதிகாரிகள் தொடர்ந்தும் செயற்படுகின்றனர். அவர்கள் பழைய அரசியல்வாதிகளுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டு, இங்கு நாம் கூறுபவற்றுக்குத் தலையாட்டிவிட்டு, பின்னர் அந்தப் பழைய அரசியல்வாதிகளுடன் இணைந்து மக்களின் அபிவிருத்திப் பணிகளைச் செய்ய மறுக்கின்றனர். அந்தத் தொடர்புகளை உடனடியாகத் துண்டியுங்கள். இங்கு என்ன நடக்கின்றது என்பதை நாம் அறியாமல் இல்லை' என அதிகாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான புதிய திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது, சுற்றுலா மேம்பாடு, விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு, பிரஜா சக்தி செயற்றிட்டம், பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு, இறங்குதுறை எல்லை நிர்ணயம், எல்லை மீள் நிர்ணயம், 'சார்ப்' திட்டத்தின் கீழான குளப் புனரமைப்பு, போக்குவரத்து அமைச்சின் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியனவற்றுக்கான அனுமதிகள் தொடர்பில் விரிவாக விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.

மேலும், மன்னாரில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றம் குறித்தும், கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னைய தீர்மானத்துக்கு அமைவாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன்னேற்றம் தொடர்பில் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கூராய்க்குளம் விவகாரம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மணல் அகழ்வு தொடர்பில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்ட பின்னரும், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்வதாக உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

நேரமின்மை காரணமாக இன்றைய கூட்டத்தில் சில விடயங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த மணல் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய முக்கிய விடயங்களை ஆராய்வதற்காக அடுத்த மாதமே விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்றை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், து.ரவிகரன், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாணத் திணைக்களப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், மத்திய திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
29.04.2026

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு.

29/04/2026

நனவாகும் சொந்த வீட்டுக் கனவு. முல்லைத்தீவில் விறுவிறுப்பாக முன்னெடுக்கப்படும் 'தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2026'

​ஜனாதிபதி செயலகத்தின் நேரடி வழிகாட்டலில், மாகாண சபைகளின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் வடக்கு மாகாணத்தில் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு

28/04/2026

வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் இன்று (28.04.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் ஆற்றிய உரையின் ஓர் பகுதி.

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீத...
28/04/2026

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையின் நிர்வாகச் சீரின்மை, அதிகார துஷ;பிரயோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் தூர்வாருதலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்காக, கௌரவ ஆளுநரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் அவர்கள் தனிநபர் விசாரணை ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த விசாரணை ஆணைக்குழுவின் விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்:

திருநாவற்குளம் கழிவுநீர் வாய்க்கால் முறைகேடு மற்றும் கொடுப்பனவு நிறுத்தம்:

திருநாவற்குளம் பிரதான கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் சட்ட ஏற்பாடுகளை மீறியுள்ளமை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைக்குரிய கொடுப்பனவைக் கோரிச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை எனவும், சபை ஏகமனதான தீர்மானத்துக்கு அப்பாற்பட்டுத் தனிநபரின் சொந்த விருப்பத்துக்கு அமையவே இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, சட்டவிரோதமான இந்த வேலைத்திட்டத்துக்குரிய எந்தவொரு கொடுப்பனவையும் மாநகர சபையின் நிதியிலிருந்து வழங்க வேண்டாம் என ஆளுநரால் திட்டவட்டமாகக் கட்டளையிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத காணிப் பகிர்வு, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் திருத்த பரிந்துரைகள்:

வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான காணி, சட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாது வியாபாரிகளுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளமை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சரின் அனுமதி பெறப்படாமை, சபைத் தீர்மானம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டமை, அரச பெறுகை நடைமுறைகள் பின்பற்றப்படாமை மற்றும் ஒப்பந்தங்கள் இன்றி காணி வழங்கப்பட்டமை போன்ற கடுமையான மீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதனையடுத்து, விசாரணை அறிக்கையில் பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட காணித்துண்டுகள் தொடர்பான நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்;.

காணி வழங்கும் செயற்பாடுகள் அனைத்தும் சட்ட விதிமுறைகள் மற்றும் சபைத் தீர்மானங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்;.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இடம்பெயர்க்கப்பட வேண்டிய சூழலில், முன்னுரிமை அடிப்படையில் மற்றும் சட்டப்பூர்வமான முறையில் மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும்;.

அனைத்து ஒப்பந்தங்களும் உரிய அதிகாரிகளின் கையொப்பங்களுடன் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்;.

மாநகர சபைக்கு உரிய வருவாய்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு அறவிடப்பட வேண்டும்.

மேலும், மேற்கண்ட முறைகேடுகளின் காரணமாக, சட்டபூர்வமற்ற முறையில் வழங்கப்பட்ட காணித்துண்டுகளில் உள்ள வியாபாரிகளிடமிருந்து மாநகர சபையால் அறவிடப்பட்டு வரும் வியாபார வரிகளை உடனடியாக நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கௌரவ ஆளுநரின் இந்த உத்தரவுகளுக்கமைவாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் அவர்கள், வவுனியா மாநகர சபை ஆணையாளருக்கு இன்று (28.04.2026) விசேட எழுத்துமூல பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்படி, கௌரவ ஆளுநரால் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை இரண்டு வார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
28.04.2026

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு.

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்...
28/04/2026

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் இன்று (28.04.2026) செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

'அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் தாமதம் அல்லது அலட்சியம் காரணமாக மக்கள் மத்தியில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்ற தவறான தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்றது. எமது மாகாண நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் இவ்வாறான நிலை ஏற்படாமல் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்;' என ஆளுநர் அறிவுறுத்தினார்.

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இவ்வாண்டில் 226 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 33 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வட மாகாணத்தில் உள்ள மாற்றுவலுவுடையோர் தொடர்பான முழுமையான 'முதன்மைப் பட்டியலை' திணைக்களம் வசம் வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறும், அவர்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யுமாறும் ஆளுநர் பணித்தார்.

மகளிர் விவகார அமைச்சின் கீழ் வாழ்வாதார உதவி வழங்கல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

தொழிற்துறை திணைக்களத்துக்கு 151 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்களின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஆராயப்பட்டன. நெடுந்தீவு மக்களின் போக்குவரத்துத் தேவையைக் கருத்திற்கொண்டு, 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 'சமுத்திர தேவா' பயணிகள் படகைப் புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.

பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் மதுவரித் திணைக்களத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

சில திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் மீள் பரிசீலனை மேற்கொள்ளுமாறும் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், தொழிற்துறை திணைக்களப் பணிப்பாளர், சமூகசேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
28.04.2026

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு.

28/04/2026

வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் இன்று (28.04.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு

மாபியாக்களுடன் 'டீல்' வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்...
28/04/2026

மாபியாக்களுடன் 'டீல்' வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்லது அவர்கள் கோருபவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்களை வழங்கினால் என்னை ஒரு நல்ல ஆளுநர் என்று பலரும் புகழ்வார்கள். ஆனால், அதைவிடுத்து சரியானது எதுவோ அதைச் செய்தால் தூற்றுவார்கள். இப்படியானதொரு சவாலான சூழலுக்குள்தான் நீங்களும் பணியாற்றப் போகின்றீர்கள். யார் என்ன சொன்னாலும், நீங்கள் மக்கள் நலன் சார்ந்த சரியான விடயங்களையே செய்ய வேண்டும். நேர்மையாகச் செயற்படும் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் இன்று (28.04.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்:

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன. அரசாங்க சேவையில் இரு வகையான உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தங்களை நாடி வரும் பொதுமக்களை எவ்வாறு தட்டிக்கழித்து அலைக்கழிக்கலாம் என எண்ணுவார்கள். மற்றையவர்கள், பொதுமக்களுக்கு எப்படியாவது சேவையைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் நினைப்பார்கள். நீங்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அல்லது கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் நினைத்திருந்தால், தங்களின் ஆதரவாளர்களின் பட்டியலை எம்மிடம் தந்து அவர்களுக்கு வேலைகளை வழங்குமாறு கோரியிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், இந்தப் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமாக இயங்கியமையால்தான் நீங்கள் அனைவரும் இன்று தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த நியமனங்களுக்கான அனுமதிகள் அவ்வளவு இலகுவாக எமக்குக் கிடைத்துவிடவில்லை. சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களுக்கான நியமன அனுமதிகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் விசேட முயற்சியால் பெற்றுத் தரப்பட்டன. அத்துடன், இந்தச் செயன்முறையைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் பெரும் பங்களிப்பைச் செய்திருந்தனர். அவர்களை நாம் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதாலேயே பலரின் தூற்றுதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது. எனினும், நேர்மையாகச் செயற்படுவர்களுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கபலமாக இருக்கும். கடந்த காலங்களில் நியமனங்கள் இலங்கை முழுவதற்குமாக வழங்கப்பட்டன. ஆனால் இப்போது வடக்கு மாகாணத்துக்குள்ளேயே உங்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே, நீங்கள் வடக்கு மாகாணம் முழுவதிலும் எந்தவொரு இடத்திலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் சேவையின் ஊடாக மக்கள் ஒரு சிறந்த மாற்றத்தை உணர வேண்டும், என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் அவர்கள், கடந்த கால அரசாங்கங்கள் நியமனங்களை வழங்காமல் அரச இயந்திரத்தைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்தன. ஆனால், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், தகுதியானவர்களுக்கு நியமனங்களை வழங்கி அரச சேவையை மீண்டும் வலுப்படுத்தி வருகின்றது, எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய கௌரவ பிரதி அமைச்சரும், வன்னித் தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்கள், 'இந்த நியமனங்களில் எமக்கு வேண்டியவர்களை நியமிக்குமாறு எந்தவொரு கட்டத்திலும் நாம் தலையிடவில்லை. முழுச் செயன்முறையும் அதிகாரிகளால் முற்றிலும் சுயாதீனமாகவே மேற்கொள்ளப்பட்டது' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் நிலவிய வெற்றிடங்களுக்காகத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 37 பேர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் 14 பேர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 44 பேர் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
28.04.2026

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு

வடக்கு மாகாணத்தில் கடமை நேரத்தில் ஒழுக்க விதிகளை மீறி, இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) நடத்துனருடன் முரண்பட்டுத் தரக...
26/04/2026

வடக்கு மாகாணத்தில் கடமை நேரத்தில் ஒழுக்க விதிகளை மீறி, இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) நடத்துனருடன் முரண்பட்டுத் தரக்குறைவாக நடந்துகொண்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு மறுஅறிவித்தல் வரை பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கடமையிலிருந்த குறித்த தனியார் பேருந்து நடத்துனர், இ.போ.ச. பேருந்து நடத்துனரை நோக்கித் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி ஆதாரங்கள் அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்:

'கிடைக்கப்பெற்ற காணொலி ஆதாரங்களை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட நபர் ஒரு பேருந்து நடத்துனருக்குரிய அடிப்படை ஒழுக்கத்தைப் பேணத் தவறியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த நபர் வடக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு பயணிகள் பேருந்திலும் நடத்துனராகப் பணியாற்றுவதற்கு மறுஅறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுடனும், ஏனைய போக்குவரத்துச் சேவையாளர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறான ஒழுக்க மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பணித்தடைகள் விதிக்கப்படும்' என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் வேண்டுமென்றே ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது முறைகேடுகள் இடம்பெற்றாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
26.04.2026

ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ (SLTB) කොන්දොස්තරවරයෙකු සමඟ අශෝභන ලෙස හැසිරීම සම්බන්ධයෙන් පෞද්ගලික බස් රථ රියදුරුගේ සේවය නැවත දැනුම් දෙන තුරු අත්හිටුවා ඇත

උතුරු පළාතේ රාජකාරියේ යෙදී සිටියදී ශ්‍රී ලංගම කොන්දොස්තරවරයෙකු සමඟ අශෝභන ලෙස හැසිරීම සම්බන්ධයෙන් පෞද්ගලික බස් රථ රියදුරෙකුගේ සේවය නැවත දැනුම් දෙන තුරු අත්හිටුවා ඇති බව උතුරු පළාත් මාර්ගස්ථ මගී ප්‍රවාහන අධිකාරියේ සභාපති ඉංජිනේරු සු. විමලේෂ්වරන් මහතා පැවසීය.

මෑතකදී සිදු වූ සිදුවීම අතරතුර, රාජකාරියේ යෙදී සිටි පෞද්ගලික බස් රථ රියදුරු අසභ්‍ය භාෂාව භාවිතා කළ අතර ශ්‍රී ලංගම බස් රථ කොන්දොස්තරවරයාට අශෝභන ලෙස හැසිරුණි. සිද්ධිය පිළිබඳ වීඩියෝ සාක්ෂි අධිකාරියේ අවධානයට යොමු කිරීමෙන් පසුව මෙම පියවර ගෙන තිබේ.

මේ සම්බන්ධයෙන්, අධිකාරියේ සභාපති ඉංජිනේරු සු. විමලේෂ්වරන් මහතා තවදුරටත් මෙසේ පැවසීය:

'පවතින වීඩියෝ සාක්ෂි පරීක්ෂා කිරීමෙන් පසු, අදාළ පුද්ගලයා බස් රථ රියදුරෙකුගේ මූලික ආචාර ධර්ම පවත්වා ගැනීමට අපොහොසත් වී ඇති බව තහවුරු වී ඇත. එහි ප්‍රතිඵලයක් ලෙස, අදාළ පුද්ගලයාට නැවත දැනුම් දෙන තුරු උතුරු පළාතේ කිසිදු මගී බස් රථයක් ධාවනය කිරීම තහනම් කර ඇත.

පොදු ප්‍රවාහන සේවාවන්හි නියැලී සිටින රියදුරන් සහ කොන්දොස්තරවරුන් මගීන් සහ අනෙකුත් ප්‍රවාහන සේවකයින් සමඟ ගෞරවනීය ලෙස හැසිරිය යුතුය. එවැනි ආචාර ධර්ම උල්ලංඝනය කිරීම්වල නියැලෙන අයට එරෙහිව කිසිදු භේදයකින් තොරව දැඩි ක්‍රියාමාර්ග සහ අත්හිටුවීම් පනවන බවට ඔහු තරයේ අනතුරු අඟවා ඇත.

ඒ සමඟම, පොදු ප්‍රවාහනය අතරතුර මගී සේවා සැපයීමේදී හිතාමතාම අපහසුතාවයක් ඇති කරන්නේ නම් හෝ අක්‍රමිකතා සිදු කරන්නේ නම්, මහජනතාවට වහාම අධිකාරියේ WhatsApp අංකය 071 9090900 වෙත සුදුසු සාක්ෂි (ටිකට් පත, ඡායාරූප හෝ වීඩියෝ) සමඟ දැනුම් දිය හැකි බව අධිකාරිය නැවත අවධාරණය කරයි.

උතුරු පළාත් ආණ්ඩුකාර මාධ්‍ය අංශය
2026.04.26

Private Bus Conductor Suspended Until Further Notice for Misconduct Toward Sri Lanka Transport Board (SLTB) Conductor

A private bus conductor who behaved in a disorderly and inappropriate manner during duty hours in the Northern Province, following a dispute with a Sri Lanka Transport Board (SLTB) conductor, has been suspended from service until further notice. This was stated by the Chairman of the Northern Province Road Passenger Transport Authority, Engineer S. Vimaleswaran.

During the recent incident, the private bus conductor on duty reportedly used abusive language toward the Sri Lanka Transport Board (SLTB) conductor and acted in an indecent manner. This disciplinary action was taken after video evidence related to the incident was brought to the attention of the Authority.

Further commenting on the matter, Chairman Engineer S. Vimaleswaran stated:
“Upon reviewing the available video evidence, it has been confirmed that the individual failed to uphold the basic standards of conduct expected of a bus conductor. As a result, the individual has been prohibited from working as a conductor on any passenger bus operating within the Northern Province until further notice.

Drivers and conductors engaged in public transport services must behave respectfully toward passengers as well as fellow transport service personnel. Strict and impartial disciplinary actions, including suspensions, will be taken against those who engage in such misconduct,” he warned firmly.

Meanwhile, the Authority reiterates that if passengers face any inconvenience or witness misconduct by service providers during public transport, they may report such incidents immediately to the Authority’s WhatsApp number 071 9090900, along with appropriate evidence (such as tickets, photographs, or videos).

Northern Province Governor’s Media Division
26.04.2026

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு.

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை ...
25/04/2026

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அவற்றை நிவர்த்திப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் (வடக்கு) பிராந்தியப் பொது முகாமையாளருக்கு எழுத்துமூலமான கோரிக்கைகளை அதிகார சபையின் தலைவர் முன்வைத்திருந்தார். இதனடிப்படையில், இலங்கை போக்குவரத்துச் சபையால் சம்பந்தப்பட்ட சாலை முகாமையாளர்களுக்குக் கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் - தோட்டவெளி வழித்தடத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகள் சீரற்றுக் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, குறித்த சேவையைத் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு மன்னார் சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இச்சேவை சீராக நடைபெறத் தவறும் பட்சத்தில், மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யத் தனியார் துறையினருக்கு பிரவேசிக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கிச் செல்லும் பேருந்துகள் காலதாமதமாகச் செல்வதால், மாணவர்கள் முதலாவது பாடவேளையைத் தவறவிடும் நிலை காணப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி குறித்த பேருந்து காலை 7.25 மணிக்குள் பாடசாலையை வந்தடைவதை உறுதி செய்யுமாறு சாலை முகாமையாளருக்குப் பிராந்திய முகாமையாளரால் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குப்பிளானிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து சேவைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஏழாலை மேற்கு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமக்கான போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்கி, வினைத்திறனான மற்றும் முறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

எனவே, போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளைத் பொதுமக்கள் எமது அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் எனத் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
25.04.2026

මහජනතාව විසින් කරන ලද පැමිණිලිවලට ප්‍රතිචාර වශයෙන් උතුරු පළාත් මාර්ග ප්‍රවාහන අධිකාරිය විසින් ගනු ලැබූ ක්‍රියාමාර්ග

උතුරු පළාතේ ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලය (SLTB) විසින් ක්‍රියාත්මක කරනු ලබන සමහර බස් සේවාවන්හි අක්‍රමිකතා සහ ප්‍රමාදයන් සම්බන්ධයෙන් මහජනතාවගෙන් ලැබුණු පැමිණිලි අනුව, උතුරු පළාත් මාර්ගස්ථ මගී ප්‍රවාහන අධිකාරියේ සභාපති ඉංජිනේරු සු. විමලේෂ්වරන් මහතා ප්‍රකාශ කළේ, ඒවා විසඳීමට අධිකාරිය කඩිනම් පියවර ගෙන ඇති බවයි.

ඉදිරිපත් කර ඇති අඩුපාඩු කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කර වහාම ඒවා විසඳන ලෙස අධිකාරියේ සභාපතිවරයා ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ (උතුර) ප්‍රාදේශීය සාමාන්‍යාධිකාරීවරයා වෙත ලිඛිත ඉල්ලීම් ඉදිරිපත් කර තිබුණි. මේ මත පදනම්ව, ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලය අදාළ මාර්ග කළමනාකරුවන්ට දැඩි උපදෙස් නිකුත් කර ඇත.

මන්නාරම-තොටවේලි මාර්ගයේ ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලය විසින් සපයනු ලබන අක්‍රමවත් බස් සේවා හේතුවෙන් ප්‍රදේශයේ ජනතාව දැඩි දුෂ්කරතාවන්ට මුහුණ දෙන බවට ලැබුණු පැමිණිල්ලක් අනුව, සේවාව බාධාවකින් තොරව කරගෙන යාමට මන්නාරම මාර්ග කළමනාකරුට උපදෙස් දී තිබේ. මෙම සේවාව සුමටව ක්‍රියාත්මක වීමට අපොහොසත් වුවහොත්, ජනතාවගේ ප්‍රවාහන අවශ්‍යතා සපුරාලීම සඳහා පෞද්ගලික අංශයට ඇතුළු වීමට සිදුවන බවට අනතුරු අඟවා ඇත.

වවුනියාවේ සිට ඕමන්ත දක්වා යන බස් රථ ප්‍රමාද වී ධාවනය වන බවට පැමිණිල්ලක් ඉදිරිපත් වූ අතර, එමඟින් සිසුන්ට ඔවුන්ගේ පළමු පාඩම මග හැරෙන බවට පැමිණිල්ලක් ඉදිරිපත් විය. මෙයින් පසු, සිසුන්ගේ යහපත සඳහා බස් රථය පෙ.ව. 7.25 වන විට පාසලට ළඟා වන බව සහතික කරන ලෙස ප්‍රාදේශීය කළමනාකරු මාර්ග කළමනාකරුට හදිසි නියෝගයක් නිකුත් කර ඇත.

කුප්පිලාන් සිට යාපනය දක්වා යන බස් සේවාවන්හි අඩුපාඩු සම්බන්ධයෙන් එසලෙයි බටහිර ජනතාව විසින් කරන ලද ඉල්ලීම් ද සලකා බලා ඇත. මේ සම්බන්ධයෙන් සුදුසු පියවර ගන්නා ලෙස මාර්ග කළමනාකරුට උපදෙස් දී ඇත.

උතුරු පළාත් මාර්ගස්ථ මගී ප්‍රවාහන අධිකාරිය මහජනතාවට තම ප්‍රවාහන සේවාවන්ට ප්‍රවේශ වීමේදී මුහුණ දෙන අපහසුතාවයන් ඉවත් කිරීමෙන් කාර්යක්ෂම හා නිසි ප්‍රවාහන සේවාවන් සහතික කිරීම සඳහා කැපවීමෙන් කටයුතු කරනු ඇත.

එබැවින්, ප්‍රවාහන සේවා සම්බන්ධ පැමිණිලි සහ යෝජනා අපගේ අධිකාරියේ අවධානයට යොමු කළ හැකි බව සභාපති ඉංජිනේරු සු. විමලේස්වරන් මහතා පැවසීය.

උතුරු පළාත් ආණ්ඩුකාර මාධ්‍ය අංශය
2026.04.25

Actions Taken by the Northern Provincial Road Passenger Transport Authority Regarding Public Complaints

Following complaints received from the public regarding irregularities and delays in certain bus services operated by the Sri Lanka Transport Board (SLTB) in the Northern Province, the Northern Provincial Road Passenger Transport Authority has taken prompt measures to address these issues, according to the Authority’s Chairman, Engineer S. Vimaleswaran.

Giving special attention to the reported shortcomings, the Chairman had submitted written requests to the Regional General Manager (Northern) of the Sri Lanka Transport Board to rectify them immediately. Accordingly, strict instructions have been issued by the SLTB to the relevant depot managers.

In response to complaints that bus services operated by the SLTB on the Mannar–Thoddaveli route are irregular, causing significant inconvenience to the public in that area, instructions have been given to the Mannar depot manager to ensure uninterrupted and continuous service. It has also been warned that if the service fails to operate properly, private operators may be allowed to step in to meet the transportation needs of the public.

Complaints were also received that buses traveling from Vavuniya to Omanthai are running late, causing students to miss their first school period. In response, the Regional Manager has issued an urgent directive to the depot manager to ensure that the relevant bus reaches the school before 7:25 a.m., considering the welfare of the students.

Requests made by residents of Earlalai West regarding deficiencies in bus services operating from Kuppilan to Jaffna have also been taken into consideration. Instructions have been issued to the depot manager to take appropriate action in this regard.

The Northern Provincial Road Passenger Transport Authority remains committed to eliminating inconveniences faced by the public in accessing transport services and to ensuring efficient and systematic transportation services.

Therefore, the Chairman, Engineer S. Vimaleswaran, has stated that the public may continue to bring complaints and suggestions regarding transport services to the attention of the Authority.

Northern Province Governor’s Media Division
25.04.2026

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு.

Address

Governor's Secretariat, Northern Province, Old Park, Chundukkuli
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Governor's Office Northern Province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Governor's Office Northern Province:

Share