03/09/2026
තිල්ලිඅඩිය කඩොලාන වනාන්තරය වනස්පති යටතේ ආරක්ෂා වුණා
පුත්තලම දිස්ත්රික්කයේ, කල්පිටිය ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසය තුළ, පුත්තලම කලපුවට මායිම්ව හෙක්ටයාර් 13.06ක (අක්කර 32කට ආසන්න) භූමි ප්රමාණයක පැතිර පවතින "තිල්ලිඅඩිය කඩොලාන වනාන්තරය" යනු හුදෙක් ගස් කොළන් රැසක් පමණක් නොවේ. එය ජෛව විවිධත්වයෙන් අනූන, දැඩි සංවේදී සහ අමිල පාරිසරික සේවාවන් රැසක් සපයන ජීවමාන පද්ධතියක්.
මෙම වනාන්තරයෙහි සුවිශේෂත්වය වන්නේ එය "අන්තර් උදම් කලාපය" (Intertidal Zone) තුළ පිහිටා තිබීමයි.
එනම්, දිනපතා සිදුවන වඩදිය සහ බාදිය නිසා වරෙක ජලයෙන් යටවන, තවත් වරෙක වියළෙන කලාපයක මෙම ශාක ප්රජාව වැඩෙයි. මෙම අභියෝගාත්මක පරිසරයට අනුවර්තනය වෙමින්, ලවණතාව දරාගැනීම සහ ඔක්සිජන් අවම මඩ සහිත පසෙහි ස්ථාවරව සිටීම සඳහා කඩොලාන ශාක සතු සුවිශේෂී අනුවර්තන (විශේෂිත මුල් පද්ධති, බීජ ප්රරෝහණය) මෙම වනාන්තරය තුළ මැනවින් දැකගත හැකියි.
මෙම සංවේදී පරිසර පද්ධතිය 'වනස්පති' ජාතික වැඩසටහන හරහා නීතිමය වශයෙන් රක්ෂිතයක් බවට පත් කිරීමේ තීරණය කාලෝචිත සහ අත්යවශ්ය පියවරක්.
'வனஸ்பதி' தேசிய திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட தில்லியடி கண்டல் காடு
புத்தளம் மாவட்டம், கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் புத்தளம் களப்பை அண்டி 13.06 ஹெக்டேர் (சுமார் 32 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள "தில்லியடி கண்டல் காடு" என்பது வெறும் தாவரங்களின் தொகுப்பு மட்டுமல்ல; மாறாக, அது பல்லுயிர் வளம் நிறைந்த, அதீத உணர்திறன் கொண்ட மற்றும் விலைமதிப்பற்ற சூழலியல் சேவைகளை வழங்கும் ஒரு உயிருள்ள அமைப்பாகும்.
இக்காட்டின் தனித்துவம் என்னவெனில், இது "இடை அலை வலயத்தில்" (Intertidal Zone) அமைந்துள்ளது. அதாவது, நாளாந்தம் ஏற்படும் ஏற்ற வற்றல் அலைகளின் காரணமாக ஒரு வேளையில் நீரினால் மூழ்கடிக்கப்பட்டும், மற்றொரு வேளையில் வறட்சியடைந்தும் காணப்படும் வலயத்தில் இத்தாவர சமூகம் செழித்து வளர்கிறது. அதீத உவர்த்தன்மையை தாங்கிக்கொள்ளல் மற்றும் ஒக்சிஜன் குறைவான சேற்று மண்ணில் நிலைத்து நிற்றல் போன்ற சவாலான சூழலுக்கு ஏற்ப, கண்டல் தாவரங்கள் கொண்டுள்ள தனித்துவமான தகவமைப்புகளை (விசேட வேர்த் தொகுதிகள், வித்தூன்றி முளைத்தல்) இக்காட்டில் தெளிவாகக் காண முடியும்.
இந்த உணர்திறன் மிக்க சூழலமைப்பை 'வனஸ்பதி' தேசிய திட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக காப்புக்காடாகப் (Reserve Forest) பிரகடனப்படுத்தும் தீர்மானம் மிகவும் காலோசிதமானதும் அத்தியாவசியமானதுமான ஒரு நடவடிக்கையாகும்.
Thilliadiya Mangrove Forest Protected Under the 'Vanaspathi' National Program
Spanning 13.06 hectares (nearly 32 acres) bordering the Puttalam Lagoon in the Kalpitiya Divisional Secretariat Division of the Puttalam District, the "Thilliadiya Mangrove Forest" is far more than just a cluster of trees. It is a living, highly sensitive ecosystem rich in biodiversity that renders invaluable ecological services.
The uniqueness of this forest lies in its location within the "intertidal zone." As a result of daily tidal cycles, this floral community thrives in an environment that is alternately submerged by high tide and exposed to dry air at low tide. Mangrove flora's remarkable adaptations to this demanding environment—such as specialized root systems and unique seed germination (vivipary) enabling them to withstand high salinity and remain anchored in oxygen-depleted muddy soils—are prominently displayed throughout this forest.
The decision to legally declare this sensitive ecosystem a protected forest reserve under the 'Vanaspathi' National Program is a timely and vital measure.