28/07/2026
முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஆளுகைக்கு கீழ் ஐயங்கன்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் புத்துவெட்டுவான் கிராமத்தில்
2026 சிறுபோகத்தில் நடைமுறைப்படுத்தபட்ட யா யா நெற் செய்கை கண்ட முறை திட்டத்தின் வயல் விழா ஆனது ஈஸ்வரநாதன் எனும் விவசாயியின் முன்மாதிரி செய்கை பண்ணப்பட்ட பரசூட் முறையில் செய்கை பண்ணப்பட்ட வயலில் இடம்பெற்றது வயல் விழா நிகழ்வு 23.07.2026 அன்று நடைபெற்றது.
ஐயங்கன்குளம் விவசாயப் போதனாசிரியர் சயுத்பவான் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் அதிதிகளாக முல்லைத்தீவு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் ,பாடவிதான உத்தியோகத்தர்(மறு வயல் பயிர்கள்)
விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது அமைப்புக்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர் . மேற்படி அறுவடை விழாவில் யா யா நெற் செய்கை கண்ட முறை தொடர்பிலும் பரசூட் முறை தொடர்பாகவும் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது