22/05/2026
மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தின் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2025 ஆண்டு சிறப்பாக செயலாற்றி சிறந்த முறையில் இலக்குகளை அடைந்து உச்ச செயற்றினை வெளிப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கான மெச்சுரை மாவட்ட செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட மெச்சுரைகளை பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், மாவட்ட சமூக பாதுகாப்பு சபைக்கு பொறுப்பான உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.