Divisional Secretariat Manthai East

Divisional Secretariat Manthai East Our Vision
To be the excellent government institution that helps the life styles of the community in a beneficial way to the society.

மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தின் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2025 ஆண்டு சிறப்பாக செயலாற்றி சிறந்த ...
22/05/2026

மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தின் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2025 ஆண்டு சிறப்பாக செயலாற்றி சிறந்த முறையில் இலக்குகளை அடைந்து உச்ச செயற்றினை வெளிப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கான மெச்சுரை மாவட்ட செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட மெச்சுரைகளை பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், மாவட்ட சமூக பாதுகாப்பு சபைக்கு பொறுப்பான உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Capacity Building Training  Programme  (2)2026======================================எமது பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்...
21/05/2026

Capacity Building Training Programme (2)2026
======================================
எமது பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கோப்பு முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான பயிற்சி நெறி 2026.05.20 நேற்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.

குறித்த பயிற்சி நெறியினை வேலணை பிரதேச செயலக நிதி உதவியாளர் திரு.கி.உதயராஜ் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு சிறப்பான முறையில் நடாத்தியிருந்தார்.

இப்பயிற்சி நெறி மூலம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலக நடைமுறை தொடர்பான மேலதிக அறிவினை பெற்றுக்கொண்டதுடன் குறித்த பயிற்சி மூலம் பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான முறையில் சேவைகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

~ஊடகப்பிரிவு

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையுடன் மாந்தை கிழக்குப் பிரதேச கலைஞர்களின் ஒன்றுகூடலும் ஆற்றுகை நிகழ்வும் ம...
08/05/2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையுடன் மாந்தை கிழக்குப் பிரதேச கலைஞர்களின் ஒன்றுகூடலும் ஆற்றுகை நிகழ்வும் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 07.05.2026 (வியாழன்) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அத்துடன் பிரதேச கலாசார பேரவையின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தெரிவு என்பனவும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த (20/04/2026) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடாத்தியசமுர்த்தி அபிமானி கண்காட்ச...
27/04/2026

கடந்த (20/04/2026) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடாத்திய
சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் நிகழ்வானது எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மு. ஜெஸ்லி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் செல்வி ம. சர்மிலி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கணக்காளர் மதிப்பார்ந்த திருமதி ம.சங்கவி மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு சி.வினோதன் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். மேலும் நிகழ்வில் சமுர்த்தி வங்கி முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

பகிரங்க ஏல விற்பனை அறிவித்தல்
17/04/2026

பகிரங்க ஏல விற்பனை அறிவித்தல்

எமது அலுவலக கைவிசேடம் வழங்கும் நிகழ்வு
16/04/2026

எமது அலுவலக கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

07/04/2026
Capacity Building Training  Programme  (1) 2026======================================எமது பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத...
01/04/2026

Capacity Building Training Programme (1) 2026
======================================

எமது பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு உற்பத்திதிறன் தொடர்பான பயிற்சி நெறி 2026.03.31 இன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.

குறித்த பயிற்சி நெறியினை வேலணை பிரதேச செயலக உற்பத்திதிறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் Y.ஜெமேனா அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு சிறப்பான முறையில் நடாத்தியிருந்தார்.

இப்பயிற்சி நெறி மூலம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உற்பத்திதிறன் தொடர்பான மேலதிக அறிவினை பெற்றுக்கொண்டதுடன் குறித்த பயிற்சி மூலம் பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான முறையில் சேவைகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

~ஊடகப்பிரிவு

"தேசத்தை கட்டியெழுப்புகின்ற  வளமான கிராமம்" கொல்லவிளாங்குளம் மேற்கு சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம ஆரம்ப வைபவ நிகழ்வு...
16/03/2026

"தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம்" கொல்லவிளாங்குளம் மேற்கு சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம ஆரம்ப வைபவ நிகழ்வு 16.03.2026 இன்று பாலிநகர் முத்துவிநாயகர் சனசமூக நிலையத்தில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடாத்தப்பட்டது.நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் கலந்து கொண்டதுடன் மாதிரி கிராம பெயர்ப்பலகையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கிராமப் பங்குதாரர்கள் ,கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன் கலைநிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.

இன்றையதினம் மாந்தைகிழக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் ஒழுங்கற்ற வரவினை கண்காணித்து பெற்றோருக்கு தான...
06/03/2026

இன்றையதினம் மாந்தைகிழக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் ஒழுங்கற்ற வரவினை கண்காணித்து பெற்றோருக்கு தானியக்க முறை மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் மென்பொருள் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த மென்பொருளானது எமது பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் எமது பிரிவுக்குட்பட்ட ஏனைய பாடசாலைகளுக்கும் இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும்.

குறித்த மென்பொருளின் நன்மைகள்
----------------------------------------------------------------------------
1. மாணவர்களின் வரவினை பாடசாலை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன கண்காணிக்க முடியும்.

2. பாடசாலை மாணவர்களுக்கு QR code உடன் பாடசாலை அடையாள அட்டை வழங்கப்படுதல்.

3. பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவரின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி தானியக்க முறையில் அனுப்பப்படும்.

4. மாணவரின் மாதாந்த மற்றும் வருடாந்த வரவு அறிக்கையினை குறுகிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

5. தினமும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் வரவு தொடர்பான விபரங்களை பிரதேச செயலக பொறுப்பான உத்தியோகத்தர் மென்பொருள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

6. தனது கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மாணவர்களின் பாடசாலை வரவு தொடர்பான விடயங்களை கிராம சேவையாளரால் பார்வையிட முடியும்.

எமது பிரதேச செயலகத்துடன் றகமா நிறுவனம் இணைந்து நடாத்திவரும் பாலிநகர் கிராம சிறுவர் கழகத்தினை  மதிப்புக்குரிய மாவட்ட செயல...
19/02/2026

எமது பிரதேச செயலகத்துடன் றகமா நிறுவனம் இணைந்து நடாத்திவரும் பாலிநகர் கிராம சிறுவர் கழகத்தினை மதிப்புக்குரிய மாவட்ட செயலாளர், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் றகமா நிறுவன பணியாளர்கள் ஆகியோர் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டனர். குறித்த கள விஜயத்தில் மாவட்ட செயலாளர் அவர்கள் சிறுவர்களின் செயற்பாடுகளை அவதானித்ததோடு அவர்களுக்கு பல அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கியதோடு சிறுவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Address

Pandiyankulam
Naddankandal

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212283470

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Manthai East posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Manthai East:

Share