RiseUp Kalkudah

RiseUp Kalkudah மாற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! எழுச்சி பெறுவோம்!

16/03/2026

வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையிலான போர்!

மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கம் நமது வாயில் கதவுகளையும் தட்ட தொடங்கியுள்ளது.

இன்று முதல் அமுலாகும் எரிபொருளிற்கான QR code system தொடர்பான அறிவிப்பு, மக்களை மீண்டும் ஒரு பதட்ட நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

எங்கோ நடக்கும் போர்தானே, நாம் ஜாலியாக இருக்கலாம் என்று உலகின் வேறு பாகங்களில் உள்ள பலர் நினைத்துக்கொண்டிருக்க, இல்லை இது எல்லோருக்குமான போர் என்பதை ‘எண்ணெய்’ தட்டுப்பாடு தீர்மானிக்கிறது.

எண்ணெய் பற்றாக்குறை அளவு கடக்கும் போது மின்தடை வரும். அதன் பிறகு பொருட்களின் பற்றாக்குறை, பதுக்கல், பயக்கொள்வனவு ( panic buying) என்பன பரவும்.

உலகம் தன் வழமையான இயக்கத்தை விட்டு ஒதுங்கி ஒரு போர்கால மேகத்துக்குள் மூழ்கும்.

போர் தொடர்ந்தால் இவை சாதாரணமாக நிகழச்சாத்தியமானவை.

ஆனால் ஏதோ ஒரு வகையில் இந்த போர் முடிவிற்கு வந்தால் உலகம் வழமைக்கு திரும்பும் ஆனாலும் போரினால் விளைந்த பொருளாதார தாக்கத்தின் காயங்கள் தீர நாளாகும்.

ஈரானியர்கள் போரில் மரணிப்பதை பெரும் பேறாக நினைத்து போராடுகிறார்கள்.

எதிர் தரப்பு வாழ்வதற்கான ஆசையில் போராடுகிறார்கள்.

இதுதான் இந்த போரின் பெரும் highlight.

இறந்தாலும் பரவாயில்லை என்று போராடுகின்ற ஒரு தேசத்தை இலகுவில் சரணடைய வைக்க இயலாது.

ஈரான் மீது எதிரிப்படை அணுவாயுதத்தை பிரயோகித்தால் ஒரு வேளை போர் ஓயும் என்று நோக்கர்கள் கூறுகிறார்கள். இறைவன் அந்த கொடிய நிலையினை விட்டும் உலகை காக்க வேண்டும்.

ஜப்பானில் அணுவாயுதத்தை அமெரிக்கா பாவித்த கையோடு இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்தது.

அப்படி என்றால் யாருடைய கையில் அணுவாயுதம் இருக்க கூடாது என்பது வெளிப்படை.

இந்த யோக்கியதையில்தான் அமெரிக்கா ஈரானிடம் அணுவாயுதம் வந்து விடக்கூடாதென்று சட்டாம்பிள்ளை வேலை பார்க்க தொடங்கியது.

இரண்டாம் உலகப்போரில் இரு பெரும் நகரங்களை அழித்து, இன்றும் அதன் சந்ததிகளை ஊனமாக்கி விட்டுள்ள அமெரிக்காவிற்கு அணுவாயுதம் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என ஈரானின் புதிய ஆன்மீகத்தலைவர் கூறியுள்ளார்.

இந்த வேண்டாத யுத்தத்தை சியோனிஸ குளிசையினை விழுங்கிய ட்ரம்ப் வலிந்து இழுத்தார்.

இன்று ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறார்.

ஒரு அமைதிப்பேச்சுவார்த்தைக்கு இந்த நாடுகளை இணங்க வைக்க ஒரு மீட்பர் வரமாட்டாரா என்று உலகம் தற்போது ஏங்குகிறது.

ஹுர்மூஸை மூடி உலகத்தின் சுவாசக்குழாயினை நசுக்க ஈரான் எடுத்த முடிவு அதன் உச்ச கட்ட போர்த்தந்திரமாகும்.

உலகம் இந்த போரை திரும்பி பார்க்க வேண்டும் இதில் உள்ள நியாய அநீதிகளை மற்ற நாடுகள் வாய்திறந்து பேச வேண்டும் என்பதே ஹுர்மூஸ் குரல்வளை நசுக்கலின் பின்னால் உள்ள போர்த்தந்திரமாகும்.

எரி பொருளும் தீர்ந்து, மின்சாரமும் கட்டு மீறி தடை ப்பட்ட போது, ஒரு இருள் சூழ்ந்த பொழுதில் கோட்டாவின் வீட்டை இலங்கையர்கள் முற்றுகையிட தொடங்கி பின்னர் அவரை நாட்டை விட்டு விரட்டியது போல, உலகமும் தன்னால் தாங்க இயலாத நெருக்கடிக்குள் வீழும் போது இந்த போரை வலிந்து இழுத்தோருக்கு ஒரு வழி பண்ணக்கூடுமல்லவா?

பசியிலும், பட்டினியிலும், நெருக்கடியிலும்தானே உண்மையும், நியாயமும் பலருக்கு துலங்க தொடங்கும்.

நெருக்கடியில் அகப்பட்ட உலகம் போர் நிறுத்தத்திற்கான முயற்சியை செய்ய தொடங்கு முன், யாரும் அணுவாயுதத்தை பாவிக்காமல் இருக்க பிரார்த்திப்போம்.

உலகம் நெருக்கடியில் வீழ முன்னரே மத்திய கிழக்கில் அமைதி திரும்ப பிரார்த்திப்போம்.

ஆக்கம் : Mujeeb Ibrahim

வெள்ள அனர்த்த நிவாரணம் பற்றிய பதிவு (ஆக்கம் : பிரதிசெய்யப்பட்டது) Noor Mohamed Mifly வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர...
14/12/2025

வெள்ள அனர்த்த நிவாரணம் பற்றிய பதிவு

(ஆக்கம் : பிரதிசெய்யப்பட்டது)
Noor Mohamed Mifly

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் பிரதேச செயலகங்களில் முறையாக காட்சிப்படுத்தப்படும். நீங்கள் உண்மையாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் எனில் உங்கள் பெயரை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஏனைய நிவாரணங்கள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகும்.

இவற்றில் சில ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ளன. (ஒன்று கிடைக்காவிட்டால் மற்றையதையும் பெறமுடியாது. அதே நேரம் ஒன்று கிடைத்தால் கட்டாயமாக மற்றையதும் கிடைக்க வேண்டும் என்ற தேவைப்பாடும் இல்லை)

15 வகையான நிவாரணங்கள் பற்றி சுற்றறிக்கையில் விபரமாக கூறப்படுள்ளன.

பிரதேச செயலகத்தின் கீழ் பெறக் கூடிய நிவாரணங்கள்,

🔴வீடு சுத்தம் செய்ய - ரூ. 25,000
🔴வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவிற்காக - ரூ. 50,000
🔴வீடு அழிவடைந்தால் 6 மாதம் வரை வாடகைப் பணமாக - ரூ. 25,000
🔴வீடு அழிவடைந்து புதிய வீடு கட்ட வேண்டிய தேவையேற்படின் - ரூ 50 லட்சம்
🔴காணிக் கொள்வனவிற்காக - ரூ 50 லட்சம் வரை
🔴வீடு திருத்தப் பணிகளுக்காக - ரூ. 25 லட்சம்
🔴உயிர்ச்சேதம்/அங்கப்பாதிப்பு எனில் - ரூ 10 லட்சம் (நபருக்கு)

வாழ்வாதாரம் இழந்தோருக்கான நிவாரணங்கள் :

1. 2 பேருக்கு குறைவான குடும்பம் ஒன்றுக்கு ரூ. 25,000 வீதம் 03 மாதங்களுக்கு வழங்கப்படும்.

2. 2 பேருக்கு மேற்பட்ட குடும்பம் எனில் ரூ. 50,000 வீதம் 03 மாதங்களுக்கு வழங்கப்படும்.

3. பாடப் புத்தகம் மற்றும் உடைகள் கொள்வனவிற்கு ஒரு மாணவனுக்கு - ரூ. 15,000, தேவைக்கேற்ப மேலதிகமாக ரூ. 10,000 (இடம்பெயர்ந்த மாணவர் ஒவ்வொருவருக்கும்)

4. சிறுதொழில் முயற்சிகளை மீட்க - ரூ. 2 லட்சம்.

5. வணிகக் கட்டடம் திருத்த - சேத மதிப்பீட்டுக்கமைவாக ரூ. 50 லட்சம் வரை

கீழ்வருவன கமநல திணைக்களங்களால் வழங்கக் கூடிய நிவாரணங்களாகும்.

🔴தானிய பயிர் அழிந்தால் - ரூ150,000 (ஹெக்டயருக்கு)
🔴மரக்கறி பயிர் அழிந்தால் - ரூ200,000 (ஹெக்டயருக்கு)

கால்நடைகள் திணைக்களத்தால் வழங்கக்கூடிய நிவாரணங்கள் :

🔴பதிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணை அழிந்தால் - ரூ 200,000 (உரிமையாளருக்கு)

கடற்றொழில் திணைக்களத்தால் வழங்கக்கூடிய நிவாரணங்கள் :

🔴மீன்படி படகு சேதமடைந்தால் - ரூ. 400,000 (படகொன்றுக்கு)

மேலே கூறப்பட்ட நிவாரணங்கள் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை. முறையாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டோர் இருப்பின் உடனடியாக பிரதேச செயலகத்திற்குச் செல்லுங்கள், உங்கள் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என மீள் பரிசீலனை செய்யுங்கள், பெயர் உள்வாங்கப்பட்டிருப்பின் வங்கிக்கணக்கில் நிவாரணம் வைப்பிலிடப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

உரிய தகவல்களை வழங்கியும் உங்கள் உள்வாங்கப்படவில்லையாயின் அல்லது ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின்,
பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளரிடம் நேரடியாக முறையிடவும்.

பிரதேச செயலாளரிடம் உங்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை எனில்,
மாவட்ட செயலகத்தில் முறையிடுங்கள்.

அங்கும் தீர்வு இல்லையேல்,
ஜனாதிபதி செயலகத்துக்கு முறையிடவும்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக சமையலறை உபகரணங்கள் சேகரிப்பு. -----------------------------------------...
06/12/2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக சமையலறை உபகரணங்கள் சேகரிப்பு.
-----------------------------------------------------

இறைவனருளால் இன்னும் ஓரிரு தினங்களில் உணவு சமைக்கும் கரங்கள் தயாராகிவிடும் ; ஆனால் சமையலறை உபகரணங்கள் மற்றும் இதர பாத்திரங்களில் தான் வெள்ளக் கறை படிந்திருக்கும். நம் கொடையால் அவர்களின் சமையலறையும் நம்பிக்கையும் மீண்டும் புத்துயிர் பெற்றிட.

அல்-இஸ்லாஹ் சமூக சேவை அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கீழ்வரும் வெள்ள நிவாரண சமையலறை உபரணங்கள் மற்றும் குடிநீர் ஆகியன 06.12.2025 (சனிக்கிழமை) முதல் 09.12.2025 (செவ்வாய்க்கிழமை) வரை தினந்தோறும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி சேகரிக்கப்படும்.

சேகரிப்பு மையம்-
COMRADE MOBILES
(ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில்)

Location -
https://maps.app.goo.gl/P3f6zFGSG1gptx218

சேகரிக்கப்படும் உபகரணங்கள்

1.Gas அடுப்பு
2.Rice cooker
3.உலோக சமையலறை பாத்திரங்கள்
4.பாய்
5.மேசை பேன்
6.புதிய ஆடைகள்(சாரன், bedsheets)
7. குடி நீர்
8. ஏனைய சமையலறை உபகரணங்கள்

அத்தோடு பணமாக பங்களிப்பு செய்ய விரும்பும் நல் உள்ளங்கள் கீழ் உள்ள அமைப்பின் வங்கி கணக்கிற்கு வைப்பிலிட முடியும்.

AL ISLAH ASSOCIATION
0110449030001
AMANA BANK
ODDAMAVADI BRANCH

மேலதிக தொடர்புகளுக்கு
Mr.Anees Mohideen -
President, AL ISLAH
0777 245525

Mr.SMM.Siyam
Secretary, AL ISLAH
076 9697 865

வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் மற்றும் அதன் கீழியங்கும் எட்டு பள்ளிவாயல்கள் ஒன்றினைந்து மேற்கொள்ளும் நிவாரணப் பொ...
01/12/2025

வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் மற்றும் அதன் கீழியங்கும் எட்டு பள்ளிவாயல்கள் ஒன்றினைந்து மேற்கொள்ளும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பணியில் நாமும் எமது பங்களிப்புகளை வழங்கிடுவோம்.

2016 O/L மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வுயரிய பணியில் நாமும் பங்குதாரர்களாவோம்.வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட...
01/12/2025

2016 O/L மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வுயரிய பணியில் நாமும் பங்குதாரர்களாவோம்.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிடுவோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை:   ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்ற...
30/11/2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை:


ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும். இதனை நாம் வெற்றி கொள்ள வேண்டும். இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். அன்பான பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, இந்தப் பேரழிவில் இறந்த அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தால், எந்த சூழ்நிலையிலும் அதைச் செய்வதற்கு நாங்கள் இருமுறை யோசிக்க மாட்டோம். ஆனால் நாம் யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்தவர்கள் தொடர்பான வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும். இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது. இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது அனுதாபத்துடன் மட்டும் நின்றுவிடாமல் அந்த உயிர்களை அந்த குடும்பங்களுக்குத் திரும்பக் கொண்டுவர முடியாவிட்டாலும், ஏனைய அனைத்தையும் வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதேபோன்று காணாமல் போனவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பலருடைய துன்பத்தைத் தணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாக இருப்பதற்காக முன்வந்த அனைவரையும் நாம் அன்புடன் அரவணைக்கிறோம்.

இயற்கை அனர்த்தங்களை முறையாக கட்டுப்படுத்த முடியாத போதும் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைமைகளை உரிய வகையில் முகாமைத்துவம் செய்தல் , பழைய நிலைக்கு அல்லது முன்பை விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பும் மூன்று செயல்முறைகளின் முக்கியத்துவம் அரசாங்கத்திற்குரியது. அதற்குத் தேவையான மற்றும் சாத்தியமான நடவடிக்கைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ளும் போது, ​​மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் கருவிகளைக் கொண்ட ஒரு நாட்டில், நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற மனித வளம் வேறு எதையும் விட மதிப்புமிக்கது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். தன்னம்பிக்கை நிறைந்த மற்றும் அனர்த்தத்தின் போது விட்டுச் செல்லாத அனைத்து சந்தர்ப்பங்களிலும் உள்ள மனஉறுதியுடனான எமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் நாம் பெருமைப்படுகிறோம்.

நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மறுசீரமைப்பு முன்னெடுப்பு மற்றும் மீளக் கட்டியெழுப்பும் பணியை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அழிவின் அளவை மதிப்பிடுவது மிகவும் பாரதூரமானது. ஆனால், வெள்ளம், புயல் அல்லது ஏதேனும் பேரழிவுக்குப் பின்னர், நம் நாட்டு மக்களின் முதல் பணியாக அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணத்தை வழங்குவதுமாகவே உள்ளது. அதற்காக, எங்கள் முழு அரச பொறிமுறையையும் மிகவும் திறமையாக வழிநடத்த முயற்சி செய்தோம். குறிப்பாக, எங்கள் முப்படையினரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் உயிரை துச்சமாக மதித்து இந்தப் பணியில் துணிவுடன் செயலாற்றினார்கள். அவர்கள் தொடர்பில் பெருமை அடைகிறோம்.

அதேபோன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் கிராம அலுவலர் வரை முழு அரச பொறிமுறையும் இந்தப் பணிக்காக மிக விரைவாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பாரிய பங்காற்றி வருகின்றனர். அவர்கள் அதை தங்கள் கடமைக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமானப் பணியாகப் உணர்ந்து, அர்ப்பணிப்புடன் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஏராளமான மக்கள் தாமாகவே முன்வந்து பங்களித்தனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் பெரும் மனிதாபிமானத்துடன் அவர்கள் பங்காற்றினர். இந்த நேரத்தில் நாம் அதை நினைவுகூர வேண்டும்.

மேலும், இந்த மீட்புப் பணியில், நமது அயல் நாடுகளும் நட்பு நாடுகளும் எங்களுக்கு பெருமளவு உதவிகளைச் செய்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் நிவாரண மற்றும் மீட்புப் படைகளை வழங்குவதன் மூலம் வெளிநாடுகள் ஏற்கனவே எங்களுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளன. நமது நாட்டு மக்கள் சார்பாக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

சில சுற்றறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த சுற்றறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் மாற்றியமைத்து, அவர்கள் எங்கு இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது எங்கு வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அரசாங்க நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளோம். சில சுற்றறிக்கைகள் அதிகாரிகளுக்கு தேவைக்கேற்ப பணத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த சுற்றறிக்கைகளை நாங்கள் மாற்றியுள்ளோம். ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் ரூபா வரை செலவிட அனுமதி அளித்துள்ளோம்.

மேலும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 3,000 கோடி ரூபாய் எங்களிடம் உள்ளது.அதை நாங்கள் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் செலவிட முடியும். அதனை இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம். மாவட்ட செயலாளர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதையெல்லாம் வழங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாவிட்டால்,குறைமதிப்பீட்டின் ஊடாக மேலும் நிதியை வழங்கலாம். வழங்கியுள்ள நிதியின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, சுகாதார உதவிகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த அனர்த்த சூழ்நிலை காரணமாக, ஏராளமான அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சார வலையமைப்பு சேதமடைந்துள்ளது. தகவல் தொடர்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரவேச வீதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் அழிக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை துரிதமாக மீளமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத பகுதி ஊழியர்கள் இந்த உள்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சுக்களுக்கு நிறுவனங்களுக்கு வேறு பணிகள் இருந்தாலும் பிரதான பணியாக கருதி இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதற்காக நாம் ஏற்கெனவே திட்டமொன்றை தயாரித்துள்ளோம். மின்சார சபை , நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை , தகவல் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் தேவையான பங்களிப்பையும் வழிகாட்டுதலையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அதனால், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

வீதிகள் மற்றும் பாலங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் நீர் வசதிகள் வரை உள்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்ய பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

சீராகவும் முறையாகவும் எழுந்து நிற்கப் போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டிற்கு இந்த நிலைமை சாதாரண சவாலல்ல. சிறு சுயதொழில் முயற்சி முதல் பாரிய அளவிலான கைத்தொழில்கள் வரை, சிறு தொழில்முனைவோர் முதல் பாரிய அளவிலான தொழில்முனைவோர் வரை, அனைத்துத் தரப்பினரும் தங்கள் வருமானத்தை இழந்துள்ளன. விவசாயம், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

எனவே, இவை அனைத்தையும் மிக விரைவாக மேம்படுத்துவதற்கு நமக்கு ஒரு துரித திட்டம் அவசியம் . அதனால்தான், இந்த அனர்த்த சூழ்நிலையை முகாமைத்துவம் செய்து , விரைவான மற்றும் திறமையான மீள்கட்டமைப்புக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் வளங்களை வழங்க அவசரகால நிலையை அறிவித்துள்ளோம். இந்த அனர்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும் , நமது நாட்டை செயற்திறனுடன் கட்டியெழுப்புவதற்காக அன்றி வேறு எந்த அடக்குமுறை நடவடிக்கைக்கும் இந்த அவசரகால நிலையைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை இந்த நாட்டின் பிரஜைகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக , அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை ஏற்கனவே நியமித்துள்ளோம். அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மையப்படுத்தியுள்ளோம். அத்தியாவசிய சேவை அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் மூலம் மிகவும் திறமையான மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டை மேற்கொள்ள ஒரு திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். அதேபோன்று , நமது நாட்டை முன்பு இருந்ததை விட மிகவும் முன்னேற்றமான நாடாக மாற்ற வேண்டியது எமது அடுத்த பணியாகும். அந்த நோக்கத்திற்காக, புனரமைப்புக்குத் தேவையான நிதியை வழங்க ஒரு நிதியத்தை நிறுவ எதிர்பார்க்கிறோம். அந்த நிதியத்தை நிர்வகிக்க தனியார் துறை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன அடங்கிய கூட்டு முகாமைத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரிய பொறுப்பை நாம் வழங்கியுள்ளோம்.

நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியை நாம் பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியும். எங்கள் நட்பு நாடுகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி அவர்களின் உதவியைப் பெறுதல், பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியை பெறுதல், உள்நாட்டு வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் உதவியை நாடுதல் ஊடாக அதனை பெறலாம். குறிப்பாக இலங்கைக்கு வெளியே வசிக்கும் இலங்கையர்கள் உதவியை வழங்க கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, இந்த அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வலுவான நிதியமொன்றை உருவாக்க வேண்டும்.

அதேபோன்று தமது துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மீள்கட்டமைப்புக்குத் தேவையான நிதி தொடர்பான ஒழுங்கான பட்டியலைத் தயாரிக்க அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம். துல்லியமான தரவு மற்றும் துல்லியமான தகவல்கள் இல்லாததால் ஏற்படும் பாதகங்களை நாங்கள் அனுபவித்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, எங்களுக்கு துல்லியமான தரவு மற்றும் தகவல்கள் அவசியம். அதன் படி அனைத்து அரச நிறுவனங்களும் அதற்காக பணியாற்றி வருகின்றன.

இந்த துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். நீண்டகால இலக்குகளை அடையவும், நாடென்ற வகையில் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வரலாறு தவறவிட்டுள்ளது. இந்தத் தடவை அதனை தவறவிடாது நிறைவேற்றும் உறுதிப்பாடு நமக்கு உள்ளது. இந்த கடினமான நேரத்தில் ஏற்கனவே முன்வந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகள், அவற்றின் தலைவர்கள், பிரஜைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற முறையான பொறிமுறையை நிறுவியுள்ளோம்.

இந்த பேரழிவு நடந்துள்ள தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும். குறிப்பாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறேன். நமது நாட்டின் பிரஜைகள் தொடர்பில் முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. நமது நாட்டின் முப்படைகள், பொலிஸார் மற்றும் நமது நாட்டின் அரச சேவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்த நாட்டிலுள்ள கைத்தொழிற்துறையினர், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் புத்தாக்குநர்கள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் நட்பு நாடுகள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையுடன், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த விடயத்தில் நாங்கள் தலையிட்டுள்ளோம். நாங்கள் நிச்சயமாக முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். அதனை பூச்சியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்ற போதும் அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

குறுகிய வேறுபாடுகள் இல்லாமல் இந்த கூட்டு முயற்சியில் சேர அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் . ஒரு தேசிய மற்றும் சர்வதேச திட்டத்தின் மூலம், சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு நமது மனசாட்சிக்கு அமைவாக எதிர்பார்க்கும் இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிக்குமாறு கோருகிறேன்.

எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்துவோம் . சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-11-30

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினைத் தொடர்ந்து அனைத்து வைத்தியசாலைகளிலும் இரத்த தட்டுப்பாடு நிலவுவதனால் இரத்ததான நி...
30/11/2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினைத் தொடர்ந்து அனைத்து வைத்தியசாலைகளிலும் இரத்த தட்டுப்பாடு நிலவுவதனால் இரத்ததான நிகழ்வொன்று நாளை ஏறாவூரில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் அல்-அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நாளை திங்கள் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வில் அனைவரும் கலந்து பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவுமாறு மிகத் தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.

ஏற்பாடு:
ஏறாவூர் வாசிப்பு வட்டம், Hearts & Hands

மற்றும்

உள்வாரி பட்டதாரிகள் சங்கம் (UGASS)

மகாவலி கங்கையின் பெருக்கெடுப்பும் மாவிலாற்றின் உடைப்பும் குளங்களின் வான் கதவுகளின் திறப்பும் மூதூரை தூழவுள்ள  கிராமங்களி...
30/11/2025

மகாவலி கங்கையின் பெருக்கெடுப்பும் மாவிலாற்றின் உடைப்பும் குளங்களின் வான் கதவுகளின் திறப்பும் மூதூரை தூழவுள்ள கிராமங்களில் உட் புகுந்து மக்களின் இயல்பு வாழ்வைப் பெருமளவு பாதித்துள்ளது.

திருகோணமலை மூதூர் பிரதான தரைவழிப் பாதை உடைப்பெடுத்துள்ளது வயல் வெளிகள் யாவுமே கடல்போல் காட்சியளிக்கின்றன.

மீட்பு நடவடிக்கைகள் விமானம் படை மீட்பு பணிகளில் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லபடுகின்றனர்.

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் உத்தியோகபூர்வ வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் கைகோர்க்கிறது.பிரேமதாசா ம...
30/11/2025

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் உத்தியோகபூர்வ வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் கைகோர்க்கிறது.

பிரேமதாசா மைதானம் வெள்ளியிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகமமண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!நேற்றிரவு (29.11.2025)...
30/11/2025

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம
மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!

நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது?

இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது வீடுகளை முழுவதுமாக விழுங்கிக் கொள்கிறது. உள்ளே மனிதர்கள் குழந்தைகள் முதியோர்கள் நோயாளர்கள் எல்லோரும்தான்.

நீரில் கசிந்து வீடுகளில் வீழ்ந்த மண்மேடுகள் பெரும் பெரும் வீடுகளைக் கூட முழுமையாக மூடிக் கொள்கின்றன. மக்கள் மூச்சுக்காற்றை மட்டுமன்றி முகவரியைக் கூட இழந்த பரிதாபம் இது.யாரும் உடனடியாகச் சென்று உதவ முடியாதவாறு பாதைகள், சிறு வீதிகள் எல்லாமே சிதைந்து போனது.அதனால் பல மணித்தியாலங்கள் இந்த கிராமம் உலகப்பார்வையிலிருந்தே துண்டிக்கப்பட்டது.

இப்போதுதான் மக்கள் அங்கே படையெடுக்கிறார்கள்.ஆனால் யாருக்கும் எதுவுமே செய்ய முடியாத நிலை. அந்தப்பிரமாணடமான மண் சரிவுக்கு முன்னால் அவர்கள் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது. இலங்கை இராணுவம் முழு மூச்சாக முயன்றதில் சுமார் பத்துப்பேரின் ஜனாஸாக்களை மட்டும் தோண்டியெடுக்க முடிந்தது. அதற்கு மேல் தம்மால் எதுவுமே செய்ய முடியாதென அவர்களும் கையை விரத்துவிட்டதாகத்தகவல். எஞ்சியுள்ள ஜனாஸாக்களை தோண்டியெடுக்க என்ன செய்யலாம் என அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்.

சுமார் 50 குடும்பங்களைச்சேர்ந்த 200 அல்லது 180 பேரளவில் இந்த கிராமத்தில் மண்மேடுகளால் காவுகொள்ளப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. காரணம் ஒரு வீட்டில் சுமார் நான்கு பேர் உறங்கியிருந்தாலும் அவர்களது மொத்தம் 200.ஆகக்குறைந்தது மூன்றுபேர் என்றாலும் 150 பேர். ஜனாஸாக்களை காலம் கடத்தி தோண்டி எடுப்பது மிகவும் சவால் நிறைந்து.நிஷ்டையில் உயிர்பிரிந்த தியாகிகளின் ஒரு கூட்டு மக்பராகவே அது மாறியுள்ளது. இந்தத்துயரத்தை அல்லாஹ்வை அன்றி யாருடன்தாம் நாம் சொல்லியழ? சுப்ஹானல்லாஹ்!

இந்தக் கிராமம் எங்கேயுள்ளது?
--------------------------------------------------

ரம்புக்வெல விலானகம கிராமம் அக்குரணை நகரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அன்கும்புர-அளவத்துகொட வீதியில் அமைந்துள்ளது. இது அகுரணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 590ஆவது கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ளது. சூழ இருக்கின்ற தமிழ் சிங்கள சமூகத்தையும் உள்ளடக்கிய சனத்தொகை 800 குடும்பங்கள் . முஸ்லிம்கள் சுமார் 400 குடும்பங்கள். அவர்களில் 50 குடும்பமே இந்த வரலாற்றுத் துயரத்தினை எதிர்கொண்டுள்ளன.

இந்த ஊரில் ஒரு ஜீம்ஆ பள்ளியும் இரண்டு தக்யாக்களும் உள்ளன.சுமார் நானூறு மாணவர்களைக்கொண்ட ஒரு Type 2 பாடசாலையும் உண்டு. இந்தப்பாடசாலைக்கு ஒரு முறை (2016) ஆசிரியர் வலுவூட்டும் நிகழ்ச்சியில் வளவாளராக கலந்து கொண்டுள்ளேன்.மிக ரம்மியமான கிராமம் இது. பல்வேறு வகையான புவியமைப்பைக்கொண்ட (Landscaping) இந்த அழகிய கிராமம் இயற்கையின் மடியில் சயனித்திருந்தது கண்டு நான் வியப்பைத் தேன். இப்போது சயனத்தில் இருந்த மக்கள் மண்மேடுகளால் ஷஹீதானது கண்டு மனம் வெம்புகிறேன். இதயத்தையே உடைத்துச் போடும் இது போன்ற துயரங்கள் சகிப்பது சாதாரண மனிதர்களால் முடியாத காரியம்.

இந்த மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கதறியழும் காட்சிகளை காண்கையில், அவர்களது அழுகுரல்களைக் கேட்கையில் கண்கள் பனிக்கின்றன. இதயம் கனக்கின்றது. வரலாற்றில் இவர்கள், 2025 இல் ஈழத்தில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தத்தின் "ஷஹீதுகள்" என நிச்சயம் பதிவாகுவார்கள். இந்த ஷஹீத்களுக்காக இருகரமேந்தி இறைவனைப்பிரார்த்திப்போமாக!

கலாநிதி றவூப் ஸெய்ன்
30/11/2025

Address

Old People's Bank Road
Oddamavadi
30400

Website

Alerts

Be the first to know and let us send you an email when RiseUp Kalkudah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category