27/07/2026
எமது ஊரைச் சேர்ந்த, மஹாஸினுல்உலூம் அரபுக் கல்லூரியின் முதலாவது மாணவரும் முதலாவது ஹாபிழும் மஹாஸினுல்உலூம் கல்லூரியின் விரிவுரையாளரும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவருமான M.H.M. ஷிப்கான் (மஹாஸினி), கலாநிதி M.A.M. சுக்ரியின் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
25.07.2026 அன்று ஏ.ஆர்.எம்.எம். மன்சூர் ஞாபகார்த்த மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் (2019/2020 Batch) இஸ்லாமிய கற்கைகள் மற்றும் நாகரிகத் துறையில் விசேட (Special) கற்கைநெறியில் GPA 3.89/4.00 பெற்று, முதலாம் தர (1st Class) அதிசிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்தமைக்காக இத்தங்கப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பல வெற்றிகளை பெற பிராத்தனைகள்
-ஊடகப் பிரிவு-
அம்ரி அஹமட்
(முன்னாள் தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்)