21/08/2019
பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவிற்கும் வைத்தியசாலை வைத்தியர்களுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் இராப்போசன நிகழ்வும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.ஏ.அஹமட் முனாசுதீன் அவர்களின் தலமையில் சனிப்பா ஹோட்டலில் இடம்பெற்றது.
வைத்தியசாலையில் தற்போதிருக்கின்ற வளங்களைக் கொண்டு எமது பிரதேச மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற வைத்திய அத்தியட்சகர், பொது வைத்திய நிபுணர், பொது சத்திரை சிகிச்சை நிபுணர், வைத்தியர்கள், உத்தியாகத்தர்கள் மற்றும் ஊழியர்களது சேவையினை நினைவுகூர்ந்து பேசியதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், வைத்தியசாலையில் குறுகிய காலத்தில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற மக்கள் மனதிலும் இடம்பிடித்த திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டீ.எஸ்.ஆர்.டீ.ஆர்.ரஜாப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.