31/07/2026
அம்பாறை மாவட்டத்தில் அதாஉல்லாஹ் காலத்தில் மறக்கபடாத பெயர்.
( ஏ.எல்.றமீஸ்)
பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். பேரியல் அஷ்ரப்.ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது தமிழ் பேசும் சமூகங்கள் மாத்திரமல்ல பெரும்பான்மை சமூகங்களும் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நீதியாகவும் இதய சுத்தியுடன் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் வரலாறு காணாத அபிவிருத்தியில் மூழ்கியது.
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக.பிரதிக் கல்வி அமைச்சராக. இராஜாங்க அமைச்சராக கெபினட் அமைச்சராக வலம் வந்தவர்.
தான் வகித்த ஒவ்வொரு துறைசார்ந்த அமைச்சுக்களின் மூலம் பார்த்து பார்த்து நாடுமுழுவதும் நிலைத்து நிற்கக் கூடிய பெரும் அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தினார். அதிலும் அம்பாறை மாவட்டத்தில் எந்த பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் அதாஉல்லா அவர்களின் திட்டங்கள் இல்லாத இடமே இல்லை என்று கூறலாம்.
வாழும் போதே நம் கண் எதிரே தோன்றும் பெரும் வரலாற்றைக் கொண்ட தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா அவர்களோடு அரைவேக்காட்டுத்தனமாக ஒரு சில அரசியல் வாதிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அதாஉல்லா இந்த மண்ணில் பிறந்து புழுதியை சுவாசித்துக் கொண்டிருப்பவர். எப்படி ஒரு பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை நிஜத்தில் செய்து காட்டியவர்.
நூறு மீட்டர் பாதை போடுவதற்கு வெடில் சுட்டு ஆலாத்தி எடுக்க வில்லை அதாஉல்லா.
ஆயிரக் கணக்கான கிலோமீட்டர் கபெட் வீதிகள் மற்றும் கொங்கிரீட் வீதிகள் கணவுளையும் நினைத்துப் பார்க்காத அரச காரியாலயங்களும் தலைநிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களும் .
அப்படியான அபிவிருத்தி நிழலில் இருந்து கொண்டே மாற்றுக் கட்சியினர் அதாஉல்லாவை விமர்சிக்கின்றனர்.
உங்கள் விமர்சனங்கள் ஆரோக்கியமான அரசியல் ஜனநாயகம். அதில் தவறில்லை.
ஆனால் காழ்ப்புணர்ச்சியின் வடிவமாக சில அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் பொது வெளியில் பரவுகின்றது. இது உங்கள் பலவீனத்தையும் அதாஉல்லாவின் பலத்தையும் மக்கள் மத்தியில் புடம் போடப்படுகிறது.
அதாஉல்லா என்பவர் தவிர்க்க முடியாத இலங்கை முஸ்லிம்களின் அடையாளம். காலத்தில் மறக்கபடாத பெயர் .
ALM Athaullah