07/05/2026
சாய்ந்தமருது நகர சபை உறுதியானது! 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..........
சாய்ந்தமருதுக்கு எனத் தனியான நகர சபை அமைப்பது சட்டரீதியானது என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அடுத்த 2 மாத காலத்திற்குள் சாய்ந்தமருது மற்றும் கல்முனைப் பகுதிகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயப் பணிகள் முடிந்தவுடன், கல்முனை மாநகர சபை மற்றும் புதிய சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றிற்கான தேர்தல்களைத் தனித்தனியாக நடத்துவதற்குத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தசாப்த கால சாய்ந்தமருது மக்களின் போராட்டத்திற்கு இந்தத் தீர்ப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.