23/03/2026
டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று இலங்கை நாடாளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட, இந்திய பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், மாநிலங்களவை மற்றும் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் போக்குவரத்து நாடளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் திரு.சு.கல்யாணசுந்தரம்.MP அவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தின் வரலாற்று தொன்மைகளை அவர்களுக்கு எடுத்துரைத்து, இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை நினைவு கூர்ந்தும், தமிழக அரசால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை நினைவுபடுத்தியும் உரையாற்றினார். இலங்கைக்கு அருகில் தமிழ்நாடு உள்ளதால் அதிகளவிளான இலங்கை அகதிகள் நீண்ட காலமாக இங்கு வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகளை காத்து வரும் தமிழக அரசும், அதன் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அகதிகளாக இங்கு இருப்பவர்ளுக்கு வீடுகள் கட்டி கொடுத்தும் ஒட்டுரிமையும், ரேசன் பொருட்கள் வழங்கியும் உள்ளார் என்பதையும் தெரிவித்தும் எனவே தமிழ்நாட்டை இலங்கையை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்ய வேண்டும்.என்றும்
கல் தோன்றி, மண் தோன்றிய காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். அத்தமிழைப் போல் இயல், இசை, நாடகம் பிறந்ததும், சோழர் குலத்தை தழைத்தோங்க செய்த ராசராச சோழன் பிறந்ததும் தஞ்சை மாவட்டம் என்றும் அவர் இலங்கை சென்றதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
DMK - Dravida Munnetra Kazhagam | M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK ITWing