20/12/2024
கடிதம் 19
2024 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒடிசா சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. ஒடிசா மாநிலத்தில் நார்லா என்கிற சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக சென்றேன்.
இந்தப் பயணம் எண்ணற்ற அனுபவங்களை தந்தது. மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் அரசு தந்த இந்த பணியை செய்வதற்கு ஆவலுடன் ஒடிசா சென்றேன்.
நேரடி விமானம் கிடைக்காததால் சத்தீஸ்கர் மாநிலத்தில் உடைய ராய்ப்பூர் சென்று அங்கிருந்து ஒடிசா மாநிலத்திற்கு சென்றேன்.
காரில் பயணிக்கும் பொழுது அந்த இயற்கை வளங்களின் அழகைகாண இரு கண்கள் போதவில்லை.
மழை, மலை, அருவி, வனம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
தேர்தல் மேற்பார்வையாளருடைய பணி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுடைய பணியில் எந்த குறுக்கிடும் செய்யக்கூடாது. சிறு பிழை இருந்தால் சுட்டிக்காட்டி அதை சரி செய்ய வேண்டும். பெரும்பிழை ஏதேனும் தெரிய வந்தால் உடனே தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவில் தேர்தல் ஒரு திருவிழா போலவே நடைபெறுகிறது. ஒடிசா மாநிலமும் விதிவிலக்கல்ல.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து வேட்பாளர்களும் நண்பர்கள் போல பேசிக்கொண்டு சிரித்த மகிழ்ந்ததை காண முடிந்தது.
அதிகாலையில் நான் தங்கி இருந்த அரசு மாளிகைக்கு அருகில் உள்ள ஒரு மலைக்கு ட்ரக்கிங் சென்றோம். பழங்குடியினர் உள்ள அந்த மலையில் வெகு தூரம் நடந்த சென்றது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
அனைத்து அருவி அருகில் ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டு அதில் பழங்குடியின மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டுள்ளனர். அந்த இயற்கை வளங்களை அந்த கடவுள் பாதுகாப்பதாகவே அவர்கள் எண்ணுகின்றனர்.
நான் சென்ற தினம் மழை என்பதால் அருவி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வந்து ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அலுவலர்களும் இவ்வளவு அதிகமாக அருவிபெருக்கெடுப்பதை இதுவரை கண்டதில்லை என்று குறிப்பிட்டனர்.
அனைத்து இடங்களிலும் ஒரு நெகிழி பைகள் பாட்டல்கள் என்று எதையும் காண முடியவில்லை. பின் தங்கிய மாநிலம் என்று கூறுகிறோம், ஆனால் இயற்கையை அதிகமாக நேசிக்க கூடிய மனிதர்களாகவே இருந்தனர். வெகு தூரம் நடந்து மலைக்குகைகள், ஓவியங்கள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க சுவடுகளை காண முடிந்தது.
ரபந்த்ரா, டோங்கிணிசம்சார போன்ற இடங்களை காண முடிந்தது.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சூரிய கோவிலை பார்க்க சென்று கொண்டிருந்தோம் ஆனால் நேரமின்மை காரணமாக தலைநகரில் அருகிலுள்ள கந்தகிரி உதயகிரி கோட்டை காண இறைவன் நல்கினான். ஜெயின துறவிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மனிதர்களுடன் பண்பாட்டை எடுத்து வைத்ததை அறிய முடிந்தது. பின்னர் டௌலி(Dhaulii) சென்று அசோகர் கலிங்கப் போருக்கு பின்னாடி பௌத்தத்தை தழுவுன வரலாற்றை அறிய முடிந்தது. இரண்டு இடங்களும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அதைக் காணபெரும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள சில இனிப்பு பண்டங்களை வாங்கி சென்னை திரும்பினேன்.
வாசித்தமைக்கு நன்றி