05/06/2025
இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளப்பட்டி கிராமம் தளவாய்அள்ளி பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி, தருமபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 1300 இடங்களில் மூன்று லட்சம் மரக்கன்றுகள் 180 சிறுபாசன ஏரிகள் தூர் வாரும் பணியினை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அவர்களின் தலைமையிலும், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP அவர்களின் முன்னிலையிலும் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஏ எஸ் சண்முகம் நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பி வைகுந்தம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் NP. பெரியண்ணன் பெண்ணாகரம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பிஜே.பச்சையப்பன் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
🌳🌳🌳🌳