28/08/2026
முருகப்பெருமான் மெய்யடியார்களே !
சர்வ மங்களகரமான பராபவ வருடம், ஆவணித் திங்கள் 16ம் நாள், செவ்வாய்கிழமை, (01.09.2026) ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் கும்பாபிஷேக தின மணவாளக்கோல நன்நாளாகும்.இந்த வருடம் ஸ்தாபியோ பதியில் முருகப்பேருமான் கோவிலும், கும்பாபிஷேகமும் கண்ட 30 வருட நிறைவு காண்பது தனிச் சிறப்பாகும். இதனை முன்னிட்டு, அன்று காலை, மாலை என இருவேளைகளிலும், அபிஷேகம் பூஜை, மற்றும் கலை நிகழ்வுகள், திருவீதியுலா, அன்னதானம் என முழுநாள் நிகழ்வுகளாக நடைபெறத் திருள்பாலித்துள்ளது.
காலை 09.30 மணிமுதல் அனைத்து மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகம், பூஜை, மாகேஸ்வரபூஜை (அன்னதானம்)
மாலை 04.30 மணி முதல் மூலஸ்தானபூஜையைத் தொடர்ந்து
மங்களவாத்தியம்
கலைநிகழ்வுகள்
சிறப்புச் சொற்பொழிவுகள்
பாராட்டுக் கௌரவிப்புக்கள்
விஷேட வசந்த மண்டபபூஜை
சுவாமி திருவீதியுலா
பிரசாதம் வழங்கல்
இப்புண்ணிய காலங்களில் அடியார்கள் யாபேரும் ஆசாரசீலர்களாக ஆலய தரிசனம் செய்து, இறையருள் பெற்றுய்ய வேண்டுமெனப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலமெல்லாம் "
இங்ஙனம்
ஆலயகுருமாரும், நிர்வாகசபையினரும், உபயதாரர்களும்.