01/09/2026
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய் கழகத்திற்கு முன்பாகவே வரிகட்ட மறுத்து இராபர்ட் கிளைவ், ஆற்காடு நவாப், நாயக்க மன்னர்கள் என எவரிடமும் அடி பணியாமல் என் மண், என் நிலம், என் மக்கள், உனக்கு உண்பதற்கு உணவில்லை என்று கேள் எவ்வளவு நெல் மணிகளை வேண்டுமானாலும் தருகிறேன் ஆனால் நீ வரியாக கேட்டால் இங்கிருந்து ஒரு குண்டுமணி நெல்லைகூட நீ கப்பமாக கொண்டு செல்ல முடியாது என்று முழங்கி 13 முறை ஆங்கிலேய படையை எதிர்த்து திருச்சிக்கு வடக்கே விரட்டியடித்து வெற்றிகண்ட மாமன்னர்
இறுதி போரில் தன் குழந்தைகள், மனைவி, உற்றார், உறவினர், தன் படைத்தளபதிகள், படைவீரர்களை இழந்து பிரிட்டிஷ் படையால் கைது செய்யபட்டு தூக்குமேடைக்கு கொண்டுவரும் வழியில் சங்கரன்கோவிலில் தன் குருநாதரை வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூறி கோவிலுக்குள் சென்று தனது சித்தரின் வழிகாட்டுதலின்படி மாயமாய் மறைந்த மறைந்த மாவீரன், தனது உயிர் கூட எதிரிகளின் கைகளினால் போய்விட கூடாது என்று எண்ணிய நெற்கட்டும்செவ்வல் மாமன்னர் காத்தப்ப பூலித்தேவரின் பிறந்த நாளான இன்று அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம்,