19/07/2026
ஆடி காற்றில் அம்மியும் நகருமா...!?
நகராது...
அப்புறம் ஏன் இப்படி ஒரு சொலவடை பழமொழி?
"ஆடி காற்றில் அம்மியும் நகரும்... " என...
புரியவில்லையே?
புரிந்து கொள்ளுங்கள்...
ஆடிக்கு முன் மாதங்கள் கோடை வெயில் தகிக்கும் காலங்கள். சித்திரை கத்திரி வெயில் கொளுத்தும்.
அப்படி அடிக்கும் வெயில் சூட்டால் பலருக்கும் அம்மை நோய் உண்டாகும்.
ஆடியில் வரும் காற்றும் சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டையும், நம் உடல் சூட்டையும் தணிக்கும்.
அதனால் உடல் சூட்டில் அம்மை கண்டவர்கள் உடல் குளிர்ந்து குணம் பெறுவார்கள்.
ஆகவே ஆடிக்கு பின் அம்மை நோய் நகர்ந்து நம்மை விட்டு சென்றுவிடும்.
அதனால்தான் "ஆடி காற்றில் அம்மையும் நகரும்.." என்றார்கள்.
ஆனால் அச்சொற்றொடர்
சொல்வழக்கில் திரிந்து
ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்றாகி விட்டது.
பொருள் தெரியாமல் சொல்லி வந்ததால் வந்த குழப்பம் இது.
நம்முடைய அநேக கலாச்சார பண்பாட்டு பழக்கவழக்கத்தை,
பழமொழிகளை...
இதுபோலத்தான் பொருள் தெரியாமல் சிதைத்து வருகிறோம்.
புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்...!
இனிமேலாவது பழமொழிகளின் பொருள் அறிந்து பயன் படுத்துவோம்...!
~மகிழாவின் பக்கம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹