SDPI மத்திய சென்னை மாவட்டம்

SDPI மத்திய சென்னை மாவட்டம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நீதி நிலைநாட்ட.
சாமானிய மக்களும் அரசியல் அதிகாரம் பெற்றிட.
அரசியல் செய்வோம்.

SDPI கட்சியின் மக்கள் நல பணிகள்…மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 60 வது வட்டம் போஸ்ட் ஆபிஸ் தெருவில் கால்வாய் அடை...
24/08/2026

SDPI கட்சியின் மக்கள் நல பணிகள்…

மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 60 வது வட்டம் போஸ்ட் ஆபிஸ்
தெருவில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை அப்பகுதி மக்கள் போஸ்ட் ஆபிஸ் தெரு கிளை நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து
கிளைத் தலைவர் முரளி அவர்கள் கார்ப்பரேஷன் உதவிப் பொறியாளரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், உடனடியாக சரி செய்யப்பட்டது

இதில் கிளைத் தலைவர் முரளி, செயலாளர் சைஃபுதீன், துணைத் தலைவர் அப்பாஸ் முன் நின்று மக்களுக்கு சிரமம் தந்த இந்த அடைப்பை சரிசெய்து முடித்து தந்தனர்.

தகவல் தொழில்நுட்ப அணி
மத்திய சென்னை மாவட்டம்
SDPI கட்சி.

24/08/2026

வேலைவாய்ப்பற்ற கல்வி 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' உருவாக்க முடியாது!

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 'விக்சித் பாரத் 2047-க்கான திறன் மேம்பாட்டு மறுவடிவமைப்பு' என்ற அறிக்கையில், இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி என எதிலும் ஈடுபடாமல் முடங்கிக் கிடக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்த நிலைக்கு எஸ்டிபிஐ கட்சியின் தேசியச் செயலாளர் சாதியா சையதா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கல்வி முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதில் மிகப்பெரிய நடைமுறைச் சிக்கல்கள் நீடிப்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குடும்பப் பொருளாதாரச் சுமை, தொழில்துறையின் தேவைக்கேற்ற பயிற்சிகள் இல்லாதது, போதுமான தொழிற்பயிற்சி வாய்ப்புகள் கிடைக்காத நிலை மற்றும் படித்து வாங்கிய கல்வித் தகுதிக்கும் சந்தையில் இருக்கும் வேலைகளுக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி ஆகியவையே இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

எனவே, ஏழை எளியோரும் கற்கும் வகையில் எளிய கட்டணத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும், ஊதியத்துடன்கூடிய தொழிற்பயிற்சிகளையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் என சாதியா சையதா வலியுறுத்தினார். மேலும், படிப்பையும் வேலையையும் இழந்த இளைஞர்கள் மீண்டும் கல்வி கற்கவோ நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவோ அரசு நேரடி நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், குடும்பச் சூழலால் பணிக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு பிரத்யேகப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வெறும் பயிற்சிகளோடு நின்றுவிடாமல், இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்பை உறுதி செய்வதே அதன் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கும் சம வாய்ப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வை உத்தரவாதம் செய்யும் உண்மையான வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலமே 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' உருவாக்க முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

24/08/2026

சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களைப் பாதிக்கும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுக! - தமிழக அரசுக்கு SDPI கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் அரசாணை எண் 41/2026 (13.02.2026), மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களின் இயங்குதளத்தையும், அதில் பணியாற்றும் லேப் டெக்னீசியன்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாக உள்ளது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பல ஆண்டுகளாகச் சேவை வழங்கி வரும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப இளங்கலை (BMLT), மற்றும் பட்டயப் படிப்பு (DMLT) பயின்ற தொழில் நுட்பனர்கள் பரிசோதனை அறிக்கைகளில் கையொப்பமிடத் தடை விதித்து, எம்.பி.பி.எஸ். அல்லது முதுகலை மருத்துவர்கள் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனக் கூறுவது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகும். இது சிறு ஆய்வகங்களின் சுயசார்பை அழித்து, மருத்துவத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.

மேலும், பரிசோதனை அறிக்கைகளுக்காக மருத்துவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும் போது, சாதாரண இரத்தப் பரிசோதனைகளின் கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் பெற்று வந்த முதன்மை சுகாதாரப் பரிசோதனைச் சேவைகள் பறிபோகும். சிறிய பரப்பளவில் இயங்கும் லேப்களுக்கும் தீயணைப்புத் துறைச் சான்றிதழ் கட்டாயம் என்பது போன்ற கட்டுப்பாடுகளும், அதிகப்படியான மருத்துவக் கழிவு அகற்றும் கட்டணங்களும் எளிய தொழில் முனைவோரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்.

இந்த அரசாணையானது, லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு, சொந்தமாக சிறிய அளவில் இரத்தப் பரிசோதனை மையங்களை வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான டெக்னீசியன்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி, சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களின் உரிமையாளர்களை, கார்ப்பரேட் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மற்றும் இதர பரிசோதனை நிலையங்களுக்கான கூலித் தொழிலாளிகளாக மாற்றும் நிலையையும் உருவாக்கியுள்ளது .

பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக்கட்டி, பல்லாயிரக்கணக்கான வேலை இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை எண் 41/2026-ல் உள்ள சிறு ஆய்வகங்களைப் பாதிக்கும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். அனுபவமிக்க ஆய்வகத் தொழில்நுட்பனர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, பரிசோதனை அறிக்கைகளில் அவர்களே தொடர்ந்து கையொப்பமிடும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் துணை மருத்துவ மற்றும் சுகாதாரக் குழுமத்தில் (Allied Health Council) ஆய்வகச் சங்கங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களின் போராட்டங்களுக்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SDPI கட்சி நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என் இரட்டை கோரிக்கைகள...
23/08/2026

SDPI கட்சி நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என் இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி மாபெரும் பேரணி
மத்திய சென்னை மாவட்டம் வர்த்தகர் அணி சார்பாக வழங்கப்பட்ட ஆட்டோ ஸ்டிக்கர்.

தகவல் தொழில்நுட்ப அணி
மத்திய சென்னை மாவட்டம்
SDPI கட்சி.

SDPI கட்சி நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என் இரட்டை கோரிக்கைகள...
23/08/2026

SDPI கட்சி நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என் இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி மாபெரும் பேரணி
மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதிக்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் சன்பேக் பதாகை கட்டப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப அணி
மத்திய சென்னை மாவட்டம்
SDPI கட்சி.

SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம்,சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதி ,63 வது (மேற்கு)வட்டம் சார்பாக வரையப்பட்ட சுவர் விளம்...
22/08/2026

SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம்,
சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதி ,63 வது (மேற்கு)வட்டம் சார்பாக வரையப்பட்ட சுவர் விளம்பரம்.

தகவல் தொழில்நுட்ப அணி
மத்திய சென்னை மாவட்டம்.
SDPI கட்சி.

22/08/2026
மத்திய சென்னை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம்….மகளிரணி மாநில நிர்வாகிகள் பங்கேற்பு.************************...
21/08/2026

மத்திய சென்னை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம்….
மகளிரணி மாநில நிர்வாகிகள் பங்கேற்பு.
***********************************************
SDPI கட்சி மகளிரணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மகளிரணி மாநில பொதுச் செயலாளர் பாயிஜா ஷஃபீக்கா அவர்களும், மாநில செயலாளர் தஸ்லிமா அவர்களும் சிறப்புரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினரும் சென்னை மண்டல தலைவருமான ஜமீமா அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் தொழில்நுட்ப அணி
மத்திய சென்னை மாவட்டம்
SDPI கட்சி.

Address

எண் 47 இப்ராஹிம் சாஹிப் தெரு சென்னை/
Chennai Port Trust
600001

Telephone

+919500170420

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI மத்திய சென்னை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI மத்திய சென்னை மாவட்டம்:

Shortcuts

Share