01/08/2026
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளருமான திரு. குலாம் அகமது மிர் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலப் பாதை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. ச. ராஜேஷ்குமார், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினரும், மிசோரம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான பொறுப்பாளருமான டாக்டர் ஏ. செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு, திரு. திருநாவுக்கரசர், திரு. கே.எஸ். அழகிரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. நிவேதித் ஆல்வா, திரு. கோபிநாத் பழனியப்பன், மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, மக்களவை உறுப்பினர்கள் திரு. கார்த்தி சிதம்பரம், திரு. சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜமால் முகமது யூனுஸ், திரு. டி.டி. பிரவீன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, அகில இந்திய காங்கிரஸ் ஊடகத் துறை ஒருங்கிணைப்பாளர் திரு. மோகன் குமாரமங்கலம், கும்பகோணம் மாநகராட்சி மேயர் திரு. கே. சரவணன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் திரு. ரூபி மனோகரன், பொதுச்செயலாளர் திரு. சிரஞ்சீவி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எம்.எஸ். திரவியம், முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் திரு தீர்த்தராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.